செய்திகள் :

தஞ்சாவூர்: ``ராஜ ராஜ சோழன் 1,040-வது சதய விழா'' - தங்க நிறத்தில் ஜொலித்த பெரிய கோயில்!

post image

சோழப் பேரரசர்களில் தலைச்சிறந்த மன்னனாக திகழ்ந்தவர் மாமன்னன் ராஜராஜசோழன். இவர் எழுப்பிய தஞ்சாவூர் பெரியகோயில் 1,000 ஆண்டுகளை கடந்தும் வானுயர்ந்து, அழகும் கம்பீரமும் ஒருசேர அமைந்து சோழர்களின் அடையாளமாக காட்சி அளித்து வருகிறது.

உலகப் பொக்கிஷங்களில் ஒன்றாக திகழும் பெரியகோயில், சோழர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

உலகம் முழுவதிலிருந்தும் தினமும் வரும் சுற்றுலாப் பயணிகள், மெய்சிலிர்க்க பெரியகோயிலை கண்டு மகிழ்ந்து வியக்கின்றனர். உலகப் புகழ் பெற்ற பெரியகோயில் தஞ்சாவூரின் அடையாளமும் தமிழர்களின் பெருமையுமாக திகழ்கிறது.

ராஜ ராஜ சோழன்
ராஜ ராஜ சோழன்

கட்டிடக்கலை மட்டுமின்றி மக்களாட்சி முறை, வணிகம், விவசாயம், நீர் மேலாண்மை, போர் என அனைத்திலும் சிறந்து விளங்கிய ராஜராஜசோழன், தெற்காசிய நாடுகள் முழுவதும் களையாண்டு தன் புகழை பரப்பி ஆட்சி செய்த பேரரசன்.

ராஜராஜசோழன் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரம் வரும் தினத்தில் சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு 1,040வது சதய விழா நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்காக பெரியகோயிலுடன் தஞ்சாவூர் நகரம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. பெரியகோயில் மின்னொளியில் தங்க நிறத்தில் ஜொலித்தது.

சதய விழா நேற்று காலை 8.15 மணியளவில் அரண்மனை வளாகத்திலிருந்து நாட்டுப்புறக் கலைஞர்கள் கலை நிகழ்ச்சி ஊர்வலத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து பெரியகோயில் வளாகத்தில் 400 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய புஷ்பாஞ்சலி நடைபெற்றது. பின்னர் இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

இதில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளுரை வழங்கினார்.

பின்னர் கருத்தரங்கம், கவியரங்கம், வில்லுப்பாட்டு என விழா களைகட்டியது. 1,040-ம் ஆண்டை குறிக்கும் வகையில் 1,040 பேர் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

ராஜ ராஜ சோழன் சதய விழா
ராஜ ராஜ சோழன் சதய விழா

இதைத்தொடர்ந்து ‘பொன்னி வள நாட்டின் போர்வாள்’ என்ற தலைப்பில் ராஜராஜ சோழன் வரலாற்றை குறித்து நடத்தப்பட்ட டிஜிட்டல் நாடகம் பலரையும் கவர்ந்தது. இதனை திரைப்பட இயக்குநர் ராசி மணிவாசகம் இயக்கியிருந்தார்.

தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று காலை 6.30 மணியளவில் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மாலை அணிவித்த பின்னர், பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தினர். இதற்காக பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டனர்.

மேலும் பெருவுடையாருக்கு 48 வகையான பொருள்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது `பெருவுடையாரே' என்ற கோஷம் எழுப்பி பக்தர்கள் வணங்கினர். மாலை 6 மணிக்கு சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. இரவு 7 மணிக்கு விருது வழங்குதல் மற்றும் இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. ஆயிரகணக்கான பக்தர்கள் சதய விழாவில் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் முழுவதும் உற்சாகம் கரை புரண்டது. சதயா விழா குழுவினர் விழா ஏற்பாட்டை செய்திருந்தனர்.

தஞ்சை, திருப்பனந்தாள் சிவாலயம்: பக்தைக்கு உதவத் தலை சாய்த்த ஈசன்; குருவாக அருளும் அருணஜடேஷ்வரர்!

குருவருள் இருந்தால் சகலத்தையும் வெல்லலாம் என்பார்கள். அப்படி ஞானத்தை நமக்கு அள்ளித்தரும் குருமார்கள் அநேகர் இந்த மண்ணில் வாழ்ந்தனர்... வாழ்கின்றனர். குரு என்பவர் ஈசனின் வடிவம். ஈசனே குருவானால் அதைவிட ... மேலும் பார்க்க

1040 வது சதய விழா: மின்னொளியில் ஜொலிக்கும் தஞ்சை பெரிய கோயில் | Photo Album

மின்னொளியில் ஜொலிக்கும் தஞ்சை பெரிய கோயில்.ராஜராஜ சோழன் சிலைராஜராஜ சோழன் சிலைராஜராஜ சோழன் சிலைராஜராஜ சோழன் சிலைராஜராஜ சோழன் சிலைமின்னொளியில் ஜொலிக்கும் சாலைகள்மின்னொளியில் ஜொலிக்கும் சாலைகள்மின்னொளியி... மேலும் பார்க்க

நாகப்பட்டினம் எட்டுக்குடி முருகன் கோயில்: தண்ணீர் பாலாக மாறிய அதிசயம் நிகழ்ந்த தலம்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளும் மிகவும் சிறப்பானவை. அதற்கு இணையான தலங்களும் ஏராளமாக உள்ளன. அதிலும் முருகப்பெருமான் தன் பக்தர்களுக்குக் காட்சி அருளி அவர்களின் வாழ்வை மாற்றிய தலங்களும் அநேகம். அப்படி... மேலும் பார்க்க

கும்பகோணம் அருகே கூனஞ்சேரி: 1,000 ஆண்டுப் பழைமை; உடல் குறைபாடுகள் நீக்கும் அஷ்ட பைரவ லிங்கங்கள்!

பழைமையான ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பை உடையன. அவற்றுள் உடல் நலம் பேண நாம் வழிபட வேண்டிய ஆலயங்கள் பல உள்ளன. அப்படி ஒரு ஆலயம்தான் கூனஞ்சேரியில் இருக்கும் கயிலாயநாதர் திருக்கோயில்.தஞ்சை மாவட்டம் பாபநா... மேலும் பார்க்க

பழனியில் வெகு விமர்சையாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம் | Photo Album

பழனியில் சண்முகர் திருக்கல்யாணம்பழனியில் சண்முகர் திருக்கல்யாணம்சண்முகர் திருக்கல்யாணம்சண்முகர் திருக்கல்யாணம்சண்முகர் திருக்கல்யாணம்சண்முகர் திருக்கல்யாணம்சண்முகர் திருக்கல்யாணம்சண்முகர் திருக்கல்யாண... மேலும் பார்க்க

செஞ்சி, சிங்கவரம் ரங்கநாதர் கோயில்: வராஹ ரூபமாய்த் தோன்றி வழிகாட்டிய பேசும் பெருமாள் கோயில்!

மகாவிஷ்ணு, சயனக் கோலத்தில் அருள்பாலிக்கும் பல தலங்கள் உண்டு. அவற்றுள் முதன்மையானது ஸ்ரீரங்கம் என்றாலும் அதற்கு இணையான பெருமையை உடையது சிங்கவரம். செஞ்சிக்கு அருகில் இருக்கும் இந்தத் தலத்துக்கு விஷ்ணு ச... மேலும் பார்க்க