செய்திகள் :

Bihar: ``இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்; என் குடும்பத்துக்காக எதையும் செய்ததில்லை" - நிதிஷ் கோரிக்கை

post image

பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இதில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க-வும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களில் போட்டியிடுகிறது.

மேலும், `ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை, முதலமைச்சரின் பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ. 2 லட்சம் வரையில் நிதியுதவி, வீடுதோறும் 125 யூனிட்டுகள் இலவச மின்சாரம், புதிதாக 50 லட்ச இலவச வீடுகள், மருத்துவமனைகளில் ரூ. 5 லட்சம் வரையில் இலவச சிகிச்சைகள், ஒவ்வொரு மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி, ஏழை, எளிய மாணவர்களுக்கு முதுகலை வரை இலவச கல்வி, ஒவ்வொரு மாவட்டங்களிலும் மெகா திறன் மையங்கள், நான்கு சர்வதேச விமான நிலையங்கள், செமி கண்டெக்டர் உற்பத்தி பூங்கா' என தேசிய ஜனநாயக கூட்டணி வாக்குறுதிகளை வானளவுக்கு அறிவித்திருக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் பீகார் தேர்தல் வாக்குறுதிகள்
தேசிய ஜனநாயக கூட்டணியின் பீகார் தேர்தல் வாக்குறுதிகள்

இந்த நிலையில் முதல்வர் நிதிஷ் குமார், தனக்கு இன்னொரு வாய்ப்பு வழங்குமாறு வாக்காளர்களுக்கு வீடியோ மூலம் இன்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

அந்த வீடியோவில் நிதிஷ் குமார், ``பீகாரின் என் அன்பான சகோதர சகோதரிகளே, 2005 முதல் உங்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்திருக்கிறீர்கள். அந்த சமயத்தில் பீகாரி என்பது அவமானமாக இருந்தது.

அப்போதிருந்து, நேர்மையாக கடின உழைப்புடன் இரவும் பகலும் உங்களுக்காகச் சேவை செய்து வருகிறோம். கல்வி, சுகாதாரம், சாலைகள், மின்சாரம், குடிநீர், விவசாயம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை மேம்படுத்தியிருக்கிறோம்.

முந்தைய அரசாங்கம் பெண்களுக்காக எந்த வேலையும் செய்யவில்லை. இப்போது பெண்களை மிகவும் வலிமையானவர்களாக நாங்கள் மாற்றியிருக்கிறோம்.

இனி அவர்கள் யாரையும் சார்ந்திருக்க மாட்டார்கள், தங்களின் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கான அனைத்து வேலைகளையும் அவர்களால் செய்ய முடியும்.

ஆரம்பத்திலிருந்தே சமூகத்தின் அனைத்து வகுப்பினரையும் வளர்ச்சியடையச் செய்திருக்கிறோம்.

Bihar Election - நிதிஷ் குமார்
Bihar Election - நிதிஷ் குமார்

நீங்கள் இந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லிமாக இருந்தாலும் சரி, உயர் சாதியாக இருந்தாலும் சரி, பிற்படுத்தப்பட்டவராக இருந்தாலும் சரி, தலித்தாக இருந்தாலும் சரி அனைவருக்காகவும் நாங்கள் உழைத்துள்ளோம்.

என் குடும்பத்துக்காக எதையும் செய்யவில்லை. இப்போது, ​​ஒரு பீகாரியாக இருப்பது அவமானகரமான விஷயம் அல்ல, மரியாதைக்குரிய விஷயம்.

எங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். மேலும் அதிக வேலைகள் செய்யப்படும். அது பீகாரை மிகவும் மேலும் வளர்க்கும், சிறந்த மாநிலங்களில் சேர்க்கும்" என்று கோரிக்கை விடுத்தார்.

பீகாரில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் சேர்ந்து போட்டியிட்டு 7-வது முறையாக முதல்வரான நிதிஷ் குமார், கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க-வை கழற்றிவிட்டு ஆர்.ஜே.டி, காங்கிரஸுடன் கைகோர்த்து 8-வது முறையாக முதல்வராகப் பதவியேற்று பின்னர் அதே தேர்தலுக்கு முன்பாக அவர்களைக் கழற்றிவிட்டு மீண்டும் பா.ஜ.க-வுடன் சேர்ந்து 9-வது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

SIR Row : 'கொளத்தூரில்19476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்கள்’ - BJP ஏ.என்.எஸ் பிரசாத் | களம் 03

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)செய்தி தொடர்பாளர்: தமிழக பாஜககட்டுரையாளர்: ஏ.... மேலும் பார்க்க

நீக்கிய EPS, பயம்காட்டும் Sengottaiyan-ன் Next Move! ADMK War! | Elangovan Explains

செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார் எடப்பாடி. இதையொட்டி, 'எடப்பாடி முதலமைச்சராக காரணமே நான்தான் என்றும், கொடநாடு ஏ1 எடப்பாடி' என்றும் கடுமையான அட்டாக். இதற்கு, அம்மா ஜெ-வால் பதவி பறிக்கப்பட்ட... மேலும் பார்க்க

``திமுக ஆட்சி முடிய இன்னும் 140 நாள்கள் தான், கவுண்டவுன் ஸ்டார்ட்'' - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

தஞ்சாவூர் பெரியகோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு அருகாமையில் உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது சதய விழாவின் முக்கிய நிகழ்வா... மேலும் பார்க்க

10 பேர் பலி: ``இது முதல்முறையல்ல, அரசின் அலட்சியமே'' - ஆந்திரா நெரிசல் குறித்து ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுகா பகுதியில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. ஏகாதசியை முன்னிட்டு இன்று கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 10 ப... மேலும் பார்க்க

செங்கோட்டையன் நீக்கம்: "தென் தமிழ்நாட்டில் எடப்பாடி பெரும் தோல்வியைச் சந்திப்பார்" - டிடிவி தினகரன்

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் இன்று (நவ.1) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.இதுதொடர்பாகப் பேசிய அவ... மேலும் பார்க்க