செய்திகள் :

செங்கோட்டையன் நீக்கம்: "தென் தமிழ்நாட்டில் எடப்பாடி பெரும் தோல்வியைச் சந்திப்பார்" - டிடிவி தினகரன்

post image

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் இன்று (நவ.1) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

இதுதொடர்பாகப் பேசிய அவர், "எம்.ஜி.ஆர் காலம் முதல் இப்போதுவரை சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிற மூத்த நிர்வாகி செங்கோட்டையன் மட்டும்தான்.

நேற்று முன் தினம் செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு வந்தது அரசியல் நிகழ்ச்சி கிடையாது.

செங்கோட்டையன் - டிடிவி தினகரன் - ஓபிஎஸ்
செங்கோட்டையன் - டிடிவி தினகரன் - ஓபிஎஸ்

அவர் 10 நாட்களுக்கு முன்பு பசும்பொன்னுக்கு வருவதாக என்னிடம் சொல்லியிருந்தார், நானும் வாருங்கள் எனச் சொல்லியிருந்தேன்.

ஜெயலலிதா பசும்பொன் வரும்போதெல்லாம் செங்கோட்டையன்தான் ஏற்பாடுகளைச் செய்வார்.

அதேபோல ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தின் நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டு பம்பரம் போல செயல்படுவார் செங்கோட்டையன்.

பிரசாரத்துக்கு வரும்போது செங்கோட்டையன் வந்து பார்வையிட்டு ஒப்புதல் தந்தால்தான் ஜெயலலிதா நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கே வருவார்.

அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்ற நபரை கட்சியை விட்டு நீக்கும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.

செங்கோட்டையன் அனைவரையும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் அழைப்பு விடுத்துள்ளார்.

பசும்பொன் வந்தபோது செங்கோட்டையன் எதுவும் அரசியல் பேசவில்லை. நான்தான் செய்தியாளர்களிடம் பேசினேன்.

குரங்கு கையில் சிக்கிய பூமாலைப் போல அதிமுகவை கையில் வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

என்னையும், சசிகலாவையும், ஓபிஎஸ்ஸையும், செங்கோட்டையனையும் துரோகி என இபிஎஸ் சொல்கிறார்.

செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி
செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி

ஆனால் அவர்தான் துரோகி. 2021 தேர்தலில் அமித்ஷா அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும் என முயற்சி செய்தார், நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன்.

ஆனால், இபிஎஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவர்தான் துரோகி.

இபிஎஸ்ஸை முதல்வராக்கிய 18 எம்எல்ஏக்களை நீக்கிய இபிஎஸ் துரோகியா? இபிஎஸ்ஸை முதல்வராக்கிய சசிகலா துரோகியா? இபிஎஸ்ஸை முதல்வராக்கப் பணியாற்றிய நான் துரோகியா? துரோகத்துக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமானால், அது பழனிசாமிக்குத்தான் கொடுக்க வேண்டும்.

முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த பசும்பொன் வந்துசென்ற செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது, தென் தமிழ்நாட்டு மக்களுக்கு நேர்ந்த அவமானம்.

பசும்பொன்னுக்கு விருந்தாளியாக வந்த செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கிய பழனிசாமி தென் தமிழ்நாட்டில் பெரும் தோல்வியைச் சந்திப்பார்

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

2026 தேர்தலில் பழனிசாமியின் துரோகம் வீழ்த்தப்படும், அமமுகதான் அதற்கான ஆயுதம். கொடநாடு கொலை வழக்கு பற்றி பேசினாலே பழனிசாமி பதறுவது ஏன்? அரக்கர்கள் கொஞ்சம் கொஞ்சமாகவே அழிவைச் சந்திப்பார்கள்.

2026-ல் சூரசம்ஹாரம் நடக்கும், பழனிசாமி வீழ்த்தப்படுவார். செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியதற்கு பழனிசாமியின் சுயநலமும், பதவி வெறியும்தான் காரணம்” என்று டிடிவி தினகரன் காட்டமாகப் பேசியிருக்கிறார்.

SIR Row : 'கொளத்தூரில்19476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்கள்’ - BJP ஏ.என்.எஸ் பிரசாத் | களம் 03

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)செய்தி தொடர்பாளர்: தமிழக பாஜககட்டுரையாளர்: ஏ.... மேலும் பார்க்க

Bihar: ``இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்; என் குடும்பத்துக்காக எதையும் செய்ததில்லை" - நிதிஷ் கோரிக்கை

பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இதில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க-வும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களில் போட்... மேலும் பார்க்க

நீக்கிய EPS, பயம்காட்டும் Sengottaiyan-ன் Next Move! ADMK War! | Elangovan Explains

செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார் எடப்பாடி. இதையொட்டி, 'எடப்பாடி முதலமைச்சராக காரணமே நான்தான் என்றும், கொடநாடு ஏ1 எடப்பாடி' என்றும் கடுமையான அட்டாக். இதற்கு, அம்மா ஜெ-வால் பதவி பறிக்கப்பட்ட... மேலும் பார்க்க

``திமுக ஆட்சி முடிய இன்னும் 140 நாள்கள் தான், கவுண்டவுன் ஸ்டார்ட்'' - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

தஞ்சாவூர் பெரியகோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு அருகாமையில் உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது சதய விழாவின் முக்கிய நிகழ்வா... மேலும் பார்க்க

10 பேர் பலி: ``இது முதல்முறையல்ல, அரசின் அலட்சியமே'' - ஆந்திரா நெரிசல் குறித்து ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுகா பகுதியில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. ஏகாதசியை முன்னிட்டு இன்று கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 10 ப... மேலும் பார்க்க