செய்திகள் :

Ind v SA: ``அந்த ஒரு விஷயத்துலதான் கவனமா இருக்கோம்!'' - இறுதிப்போட்டி குறித்து கேப்டன் ஹர்மன்ப்ரீத்

post image

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாடீல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

பலத்த எதிர்பார்ப்புக்கிடையில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இந்தப் போட்டியில் மோதவிருக்கின்றன. போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.

ஹர்மன்ப்ரீத் கவுர்
ஹர்மன்ப்ரீத் கவுர்

ஹர்மன்ப்ரீத் கவுர் பேசியதாவது: “இது ஒரு பெருமைமிகு தருணம். ஒட்டுமொத்த தேசமும் எங்களை நினைத்து பெருமைப்படும் என நினைக்கிறேன். நாங்கள் எப்போதெல்லாம் அனுபவித்து மகிழ்ந்து எங்களின் 100% திறனையும் வெளிப்படுத்தி ஆடுகிறோமோ, அப்போதெல்லாம் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம். இந்த இறுதிப் போட்டியிலும் அதையே செய்ய விரும்புகிறோம்.

இது ஒரு பெரிய போட்டி. எங்களுக்கு கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பு. அதில் பதட்டப்படாமல் அந்தந்த தருணங்களில் என்ன தேவையோ அதில் கூர்மையாக கவனத்தை செலுத்த விரும்புகிறோம்.

நாங்கள் அடைய நினைக்கும் டார்கெட்களை சிறிய சிறிய துண்டுகளாக பிரித்து கொள்ள நினைக்கிறோம். பெரிய இலக்காக பார்க்கும் போதுதான் நமக்கு அழுத்தம் கூடும்.

சிறிய சிறிய இலக்குகளாக பிரித்து அதை எட்டுகையில் உத்வேகம் கூடும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு நான் அழுததைப் பற்றி கேட்கிறீர்கள். நான் எப்போதுமே அழுவேன்.

ஹர்மன்ப்ரீத் கவுர்
ஹர்மன்ப்ரீத் கவுர்

நேற்று நீங்கள் அதை டிவியில் பார்த்தீர்கள், அவ்வளவுதான். டிரெஸ்ஸிங் ரூமில் பல முறை அழுதிருக்கிறேன். முக்கியமான தருணங்களில் முதலில் அழும் நபர் நானாகத்தான் இருப்பேன்.

நம்முடைய உணர்ச்சிகளை அப்படியே வெளிக்காட்டுவதில் எந்த தவறும் இல்லை. இப்போது பெற்றோர்கள் நல்லவே விழிப்புணர்வு அடைந்துவிட்டார்கள். அதனால் பெண் குழுந்தைகள் தாங்கள் செய்ய நினைப்பதை மகிழ்ந்து அனுபவித்து செய்யுங்கள். இதுதான் ஆசியாவின் பெண்களுக்கு நான் கூறும் அறிவுரை." என்றார்.

'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்!' - கம்மின்ஸ் ஸ்டைலில் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா!

பெண்கள் உலகக்கோப்பையின் இறுதிப்போடி நாளை நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இந்தப் போட்டியில் மோதவிரு... மேலும் பார்க்க

'அவளுக்கு கிரிக்கெட் செட் ஆகாது' - நிராகரிப்புகளை தகர்த்தெறிந்த ஜெமிமாவின் கதை! | Jemimah Rodrigues

எட்டு வயது சிறுமி அவள். வீட்டில் அத்தனை துறுதுறுப்பாக இருப்பாள். அண்ணன்கள் இருவரும் கிரிக்கெட் ஆடக்கூடியவர்கள். எனர்ஜியாக சுற்றித்திரியும் அந்த சிறுமியையும் கிரிக்கெட் ஆட அனுப்பி வைக்கலாம் என பெற்றோர்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் மகுடத்தில் மீண்டும் ஒரு வைரக்கல்! - 'கிராண்ட் மாஸ்டர்' பட்டத்தை வென்ற இளம்பரிதி!

நேற்று சென்னையை சேர்ந்த இளம்பரிதி ஏ.ஆர் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த பிஜெல்ஜினா ஓபனில் 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம் பெற்றுள்ளார். இந்தியாவில் இருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுபவர்களில் இவர் ... மேலும் பார்க்க

'என்னாலயே நம்ப முடியல...' - ஆஸியை வீழ்த்தியது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத்!

பெண்கள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நெகிழ்ச்சியா... மேலும் பார்க்க

Jemimah: ’ஒவ்வொரு இரவும் அழுதிருக்கிறேன்; கடவுள்தான் இதை நிகழ்த்தினார்!'- ஆனந்த கண்ணீருடன் ஜெமிமா!

பெண்கள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. சவால் நிறைந்த இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஜெமிமா சிறப்பாக ஆடி சதமடித... மேலும் பார்க்க