செய்திகள் :

Jemimah: ’ஒவ்வொரு இரவும் அழுதிருக்கிறேன்; கடவுள்தான் இதை நிகழ்த்தினார்!'- ஆனந்த கண்ணீருடன் ஜெமிமா!

post image

பெண்கள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. சவால் நிறைந்த இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஜெமிமா சிறப்பாக ஆடி சதமடித்து 127 ரன்களை சேர்த்து அணியை வெல்ல வைத்தார். அவருக்குதான் ப்ளேயர் ஆப் தி மேட்ச் விருதும் வழங்கப்பட்டது.

ஜெமிமா
ஜெமிமா

விருதை வாங்கிவிட்டு நெகிழ்ச்சியாக பேசிய அவர், ''என்னுடைய அம்மா, அப்பா, பயிற்சியாளர் மற்றும் என் மீது நம்பிக்கை வைத்திருந்த அத்தனை பேருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். இது ஒரு கனவு போல இருக்கிறது. இன்னும் என்னால் முழுமையாக இதை உணர முடியவில்லை.

நம்பர் 3 இல் வருவேன் என நினைக்கவில்லை. குளித்துக் கொண்டிருந்தேன். திடீரென என்னிடம் சொன்னார்கள். களமிறங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன்புதான் என்னிடம் நம்பர் 3 என சொன்னார்கள். என்னுடைய அரைசதத்தையும் சதத்தையும் விட அணியின் வெற்றிதான் எனக்கு முக்கியமாக இருந்தது. நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன். கடந்த ஆண்டு அணியிலிருந்து டிராப் செய்யப்பட்டேன். இந்த உலகக்கோப்பையிலும் ஒவ்வொரு நாளும் அழுதுகொண்டேதான் இருந்தேன்.

ஜெமிமா
ஜெமிமா

மனரீதியாக நான் சௌகரியமாக இல்லை. ஒரு மாதிரியாக பதட்டமாகவே இருந்தேன். நான் கட்டாயம் பெர்பார்ம் செய்தாக வேண்டும் என தோன்றியது. கடவுள்தான் எல்லாவற்றையும் நிகழ்த்தினார். பைபிளுள்ள ஒரு வசனத்தை மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். 'நீங்கள் நிலைத்திருங்கள். கடவுள் உங்களுக்காக சண்டையிடுவார்!' இந்த வசனத்தை நினைத்துக்கொண்டு நிதானமாக ஆடினேன். கடைசியில் நான் கொஞ்சம் அதிரடியாக ஆட நினைத்தேன், முடியவில்லை. தீப்தி என்னை ஊக்கப்படுத்தினார். நான் சோர்வுறும் போது என்னுடைய சக வீராங்கனைகள் என்னை தேற்றுகிறார்கள். எதற்கும் நான் க்ரெடிட் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. நான் எதையும் தனி ஆளாக செய்யவில்லை.' என்றார்.

Ind v Aus : 'ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா!' - ஆட்டத்தை மாற்றிய குயின் ஜெமிமா!

பெண்கள் உலகக்கோப்பையின் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ... மேலும் பார்க்க

"என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய ஆசைப்படுகிறேன்" - கண்ணனி நகர் கார்த்திகாவை பாராட்டிய சரத்குமார்

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025-ல் இந்திய ஆண்கள் அணியும், இந்திய மகளிர் அணியும் ஃபைனலில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தன. இதில் மகளிர் அணியில் சென்னை கண்ணகி நகரைச... மேலும் பார்க்க

ஆல் அவுட் ஆனாலும் 339 டார்கெட் வைத்த ஆஸ்திரேலியா; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா?

நடப்பு மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் நேற்று (அக்டோபர் 29) நடைபெற்ற முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா.இன்று இரண்டாவது அரையிறுதிப்போட்ட... மேலும் பார்க்க

'குகேஷுக்கு வழங்கியதைப் போல கார்த்திகாவுக்கு கோடிகளில் பரிசுத்தொகை வழங்காதது ஏன்?' - காரணம் என்ன?

'சாதித்த கார்த்திகா!'"பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் தொடர் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த சென்னை கண்ணகி நகர் கார்த்திகாவை தமிழ்நாடே கொண்டாடி வருகிறது. ஆனால், ஒரு சர்ச்சையு... மேலும் பார்க்க

`அந்தப் பெண்கள் மீதும் தவறு இருக்கிறது' - ஆஸி. வீராங்கனைகளுக்கு தொல்லை; பாஜக மந்திரி சர்ச்சை கருத்து

மகளிர் உலகக்கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது. இதில் கடந்த 25ம் தேதி மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற போட்டிக்காக ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இந்தூரில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தனர்.ஓட்டலில் தங்... மேலும் பார்க்க