Jemimah: ’ஒவ்வொரு இரவும் அழுதிருக்கிறேன்; கடவுள்தான் இதை நிகழ்த்தினார்!'- ஆனந்த ...
கிரிக்கெட் பந்து பட்டு 17 வயது ஆஸ்திரேலிய வீரர் பென் ஆஸ்டின் மறைவு; சோகத்தில் கிரிக்கெட் உலகம்!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின், பயிற்சியின்போது தலையில் பந்து பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பவ நேரத்தில் பென் ஆஸ்டின் ஹெல்மெட் அணிந்து இருந்தாலும், பந்து அவரது தலைக்கும் கழுத்துக்கும் இடையில் பட்டத்தில் உடனே மயங்கி விழுந்திருக்கிறார். மருத்துவக் குழு ஓடி வந்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது. ஆனால் அங்கு சிகிச்சையின்போது பென் ஆஸ்டினின் உயிர் பிரிந்தது.
17 வயதேயாகும் பென் ஆஸ்டின் கிரிக்கெட் மட்டுமல்ல, கால்பந்து மற்றும் பிற விளையாட்டுகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. எந்த விளையாட்டானாலும் துறுதுறுவென திறமையோடு விளையாடுபவர் என அவரது கிரிக்கெட் கிளப்பினர் கூறுகின்றனர்.
பெர்ண்ட்ரீ கழி, மல்க்ராவ், ஈல்டன் பார்க் ஆகிய கிளப்புகளுடன் பல 18 வயதிற்குட்பட்ட மேட்ச்சை ஆடி கவனம் ஈர்த்திருக்கிறார். திறமைமிக்க விளையாட்டு வீரரை இழந்துவிட்ட அவரது கிரிக்கெட் கிளப்பினர், நண்பர்கள், குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
2014-ம் ஆண்டில் 25 வயதான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஷெஃபெல்டு ஷீல்டு போட்டியின் போது, தலைக்கு வந்த நீளமான வீச்சு பந்தை புள் ஷாட் ஆட முயன்று, தவறியதில் பந்து தலையில் பலமாகப் பட்டு மைதானத்திலேயே அப்படியே சாய்ந்தது நினைவிருக்கலாம். ஹெட்மெட் அணிந்திருந்தும் தலைக்கும் கழுத்திற்கும் இடையில் பந்து பட்டதில் பிலிப் ஹியூஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த துயரான சம்பவம் கிரிக்கெட் உலகத்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளித்தது. இப்போது அதே அஸ்திரேலியாவில் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின், பயிற்சியின்போது தலையில் பந்து பட்டு உயிரிழந்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐசிசி இதை துக்கமாக அனுசரித்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். மேலும், பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் கிளப்களும் பென் ஆஸ்டினுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது.


















