செய்திகள் :

ஆல் அவுட் ஆனாலும் 339 டார்கெட் வைத்த ஆஸ்திரேலியா; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா?

post image

நடப்பு மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் நேற்று (அக்டோபர் 29) நடைபெற்ற முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா.

இன்று இரண்டாவது அரையிறுதிப்போட்டியில், அதிக முறை உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியாவும், அரை நூற்றாண்டாகக் கோப்பை வெல்லப் போராடிவரும் இந்தியாவும் மோதியது.

Ind vs Aus
Ind vs Aus

நவி மும்பையில் பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், 6-வது ஓவரிலேயே கேப்டன் அலிசா ஹீலியை விக்கெட் எடுத்து இந்தியாவுக்கு நல்ல மொமென்ட்டம் உருவாக்கினார் கிராந்தி கவுட்.

ஆனால், அதை இந்தியா கெட்டியாகப் பிடித்துக்கொள்ளாததன் விளைவு ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எலிஸ் பெர்ரி கூட்டணி 150+ பார்ட்னர்ஷிப் போட்டது. ஒருகட்டத்தில் எலிஸ் பெர்ரி 77 ரன்களில் அவுட்டானாலும் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் சதமடித்து அச்சுறுத்தினார்.

இந்திய வீராங்கனைகள் ஒருவழியாக அவரையும் அவுட்டாக்கி, அடுத்து வந்த இருவரையும் அவுட்டாக்கியபோதும் அதன்பிறகு வந்த ஆஷ்லீ கார்ட்னர் அரைசதமடித்து ஆஸ்திரேலியாவை 300 ரன்களைக் கடக்க வைத்தார்.

Ind vs Aus
Ind vs Aus

இறுதியில் 49.5 ஓவர்களில் 338 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியானது.

339 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கும் இந்திய அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

"என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய ஆசைப்படுகிறேன்" - கண்ணனி நகர் கார்த்திகாவை பாராட்டிய சரத்குமார்

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025-ல் இந்திய ஆண்கள் அணியும், இந்திய மகளிர் அணியும் ஃபைனலில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தன. இதில் மகளிர் அணியில் சென்னை கண்ணகி நகரைச... மேலும் பார்க்க

'குகேஷுக்கு வழங்கியதைப் போல கார்த்திகாவுக்கு கோடிகளில் பரிசுத்தொகை வழங்காதது ஏன்?' - காரணம் என்ன?

'சாதித்த கார்த்திகா!'"பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் தொடர் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த சென்னை கண்ணகி நகர் கார்த்திகாவை தமிழ்நாடே கொண்டாடி வருகிறது. ஆனால், ஒரு சர்ச்சையு... மேலும் பார்க்க

`அந்தப் பெண்கள் மீதும் தவறு இருக்கிறது' - ஆஸி. வீராங்கனைகளுக்கு தொல்லை; பாஜக மந்திரி சர்ச்சை கருத்து

மகளிர் உலகக்கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது. இதில் கடந்த 25ம் தேதி மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற போட்டிக்காக ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இந்தூரில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தனர்.ஓட்டலில் தங்... மேலும் பார்க்க

`இந்தியாவுக்காக விளையாடியது ரொம்ப பெருமையா இருக்கு' - தங்கம் வென்று சாதனை படைத்த கபடி வீரர்கள்!

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025-ல் இந்திய ஆண்கள் அணியும், இந்திய மகளிர் அணியும் ஃபைனலில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தன. இதில் மகளிர் அணியில் சென்னை கண்ணகி நகரைச... மேலும் பார்க்க

'சீனியர்கள் எனக்கு செய்ததை இளம் வீரர்களுக்கு நான் செய்யப்போகிறேன்!' - ரோஹித் மகிழ்ச்சி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த மூன்றாவது ஓடிஐ போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. அணியின் சூப்பர் சீனியர் வீரரான ரோஹித் சதமடித்து அசத்தியிருந்தார். அவருக்... மேலும் பார்க்க