செய்திகள் :

Modi: "திமுக, காங்கிரஸ் பீகார் மக்களை அவமதிக்கிறது" - பீகாரில் பிரதமர் பேச்சு

post image

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 30) இந்தியா கூட்டணி கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுக பீகார் மக்களை அவமானப்படுத்துவதாக பேசி உள்ளார்.

பீகார் மாநிலம் சக்கரா பகுதியில் நடந்த பாஜக ஊர்வலத்தில் பேசிய அவர் முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி 2022ஆம் ஆண்டு "நான் பீகார் மக்களை உள்ளே விடமாட்டேன்" எனப் பேசியதை சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் பேசியபோது பிரியங்கா காந்தி அந்த மேடையில் இருந்ததாகவும் அவரது பேச்சைக் கேட்டு சிரித்ததாகவும் மோடி பேசி உள்ளார்.

Rahul Gandhi and Tejashwi Yadhav
Rahul Gandhi and Tejashwi Yadhav

Modi பேசியது என்ன?

"நண்பர்களே விளக்குடன் இருப்பவர்களும் (RJD சின்னம்) கையும் (Congress சின்னம்) அவர்களின் இந்தியா கூட்டணியும் பீகார் மக்களை எப்படி அவமதித்தனர் என்பதை நான் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

பஞ்சாபின் முதலமைச்சர் வெளிப்படையாக பீகார் மக்களை உள்ளே விட மாட்டேன் என கூறினார். பொதுவெளியில் அவர் இப்படி பேசியபோது காந்தி குடும்பத்தின் மகளும் தற்போது நாடாளுமன்றத்தில் இருப்பவரும் மகிழ்ச்சியாக கையை தட்டிக் கொண்டிருந்தார்." என்றார் மோடி.

மோடி
மோடி

தொடர்ந்து பேசிய அவர், "இதற்கிடையில், தெலங்கானா மற்றும் கர்நாடகாவில், காங்கிரஸ் தலைவர்கள் பீகார் மக்களை அவமதிக்கின்றனர், மேலும் தமிழ்நாட்டில், திமுக பீகாரைச் சேர்ந்த கடின உழைப்பாளி மக்களை தவறாக நடத்துகிறது. இவை அனைத்துக்கும் இடையே, பீகாரில் உள்ள ஆர்ஜேடி மௌனமாக, பேச்சு மூச்சற்றது போல இருக்கிறது. இந்த முறை, இந்த தேர்தல்களில், அவர்கள் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டனர்.

பீகாரை தங்கள் மாநிலங்களில் அவமதித்த அதே காங்கிரஸ் தலைவர்களை இப்போது ஆர்ஜேடி இங்கு பிரச்சாரம் செய்ய அழைத்துள்ளது. இது காங்கிரஸின் கணக்கிடப்பட்ட சதி - அவர்கள் ஆர்ஜேடிக்கு அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றனர். ஆர்ஜேடி - காங்கிரஸ் இடையேயான பிளவு எவ்வளவு ஆழமானது என்பதை இது காட்டுக்கிறது." எனக் கூறியுள்ளார்.

பீகாரில் வருகின்ற நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 14ம் தேதி முடிவுகள் வெளியாகும்.

'விஜய்யின் விருப்பம்; திமுகவின் நெருக்கடி; அதிமுகவோடு கூட்டணியில்லை!' - உறுதியாக கூறும் அருண் ராஜ்!

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் தவெக கட்சி மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கிறது. கட்சியின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க 28 உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. முக்கிய நிர்வாகிகள் ... மேலும் பார்க்க

`இவர்கள் திமுக பி டீம்' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ... மேலும் பார்க்க

பசும்பொன்: தேவர் நினைவிட பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்; தர்ணாவும் செய்ததால் பரபரப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பூசாரியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஶ்ரீதர் வாண்டையார்பார்வர்ட் பிளாக் கட்சி... மேலும் பார்க்க

வெற்றிகரமாக முடிந்த ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு; என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில்... கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தான், முதன்முதலாக ... மேலும் பார்க்க

SIR Row : `அதிமுக வரவேற்பதும், திமுக எதிர்ப்பதும் ஏன்?' - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் | களம் 1

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் அமைச்சர்கட்டுரையாளர்: முனைவர் வைகைச்... மேலும் பார்க்க

புதுச்சேரியை உலுக்கிய மருந்து கொள்முதல் முறைகேடு - சிக்கிய அதிகாரிகள்; சிக்கலில் ஆட்சியாளர்கள்

புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் கடந்த 2018-19 ஆண்டு கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த மாத்திரைகளை சாப்பிட்ட கர்ப்... மேலும் பார்க்க