செய்திகள் :

பசும்பொன்: தேவர் நினைவிட பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்; தர்ணாவும் செய்ததால் பரபரப்பு

post image

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பூசாரியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஶ்ரீதர் வாண்டையார்
ஶ்ரீதர் வாண்டையார்

பார்வர்ட் பிளாக் கட்சியின் முக்கியத் தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா இன்று நடந்து வருகிறது.

இவ்விழாவில் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு அமைப்பினரும் இன்று பசும்பொன்னுக்கு வருகை தந்து முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

வி.வி.ஐ.பி-க்களின் வருகையினால் அதிகமான அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், அரசியல் கட்சி, சாதி அமைப்புகளின் தலைவர்களோடு வரும் தொண்டர்களை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடிவில்லை. இதனால் தேவர் நினைவிடப் பகுதியில் கூட்டத்தைக் கலைந்து செல்ல வைக்க மிகவும் சிரமமாக இருந்தது.

ஸ்ரீதர் வாண்டையார் தர்ணா
ஸ்ரீதர் வாண்டையார் தர்ணா

இந்த நிலையில் அஞ்சலி செலுத்த ஆதரவாளர்களுடன் வந்த மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், நினைவிடத்திலுள்ள தேவர் சிலைக்கு மரியாதை செய்து பூஜை செய்தபோது அங்கிருந்த பூசாரிகள் ஏதோ கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஸ்ரீதர் வாண்டையார் நினைவிடத்தின் பூசாரி ராஜா என்பவரைத் திடீரென கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் நினைவிடப் பொறுப்பாளர்கள், பணியாளர்கள் கோபத்துடன் கேள்வியெழுப்ப அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் அவர்களைச் சமாதனப்படுத்தினர். அதன் பின்பு ஸ்ரீதர் வாண்டையார் அங்கேயே அமர்ந்து தர்ணா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை அதிகாரிகளும், அங்கிருந்த அரசியல் கட்சியினரும் அவரைச் சமாதனபடுத்தி அங்கிருந்து அனுப்பினார்கள். இதனால் சிறிது நேரம் மக்கள் அஞ்சலி செலுத்த முடியாததால் சலசலப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

தேவர் நினைவிடம்
தேவர் நினைவிடம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செய்ய வந்த இடத்தில், அவருடைய நினைவிடப் பணியாளரை, அவரை அடையாளமாகக் கொண்டு அமைப்பு நடத்தும் ஸ்ரீதர் வாண்டையார் தாக்கியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

`இவர்கள் திமுக பி டீம்' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ... மேலும் பார்க்க

வெற்றிகரமாக முடிந்த ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு; என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில்... கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தான், முதன்முதலாக ... மேலும் பார்க்க

SIR Row : `அதிமுக வரவேற்பதும், திமுக எதிர்ப்பதும் ஏன்?' - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் | களம் 1

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் அமைச்சர்கட்டுரையாளர்: முனைவர் வைகைச்... மேலும் பார்க்க

புதுச்சேரியை உலுக்கிய மருந்து கொள்முதல் முறைகேடு - சிக்கிய அதிகாரிகள்; சிக்கலில் ஆட்சியாளர்கள்

புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் கடந்த 2018-19 ஆண்டு கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த மாத்திரைகளை சாப்பிட்ட கர்ப்... மேலும் பார்க்க

குருபூஜை: "எடப்பாடிதான் எங்கள் எதிரி" - செங்கோட்டையன், டிடிவி, ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இன்று முத்துராமலிங்கனர் சிலைக்கு மாலை அணிவிக்க அதிமுக தொண்... மேலும் பார்க்க

`செங்கோட்டையன் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் எனில்.!’ - மூவர் சந்திப்பின் பின்னணி என்ன?

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தநிலையில் இன்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் செங்கோட்டைய... மேலும் பார்க்க