செய்திகள் :

தேசிய அறிவியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்கள் 3 பேர் தேர்வு!

post image

சென்னை ஐஐடியைச் சேர்ந்த 3 பேராசிரியர்​கள் 'தேசிய அறி​வியல் விருது'க்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

ஆண்​டு​தோறும் மத்​திய அரசு தேசிய அறி​வியல் விருதுகளை வழங்கி வருகிறது. இவ்விருது விஞ்​ஞான் ரத்​னா, விஞ்​ஞான் ஸ்ரீ, விஞ்​ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்​நாகர், விஞ்​ஞான் டீம் என 4 பிரிவு​களில் வழங்கப்படுகிறது.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய அறி​வியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்​கள் தலப்​பில் பிரதீப், மோக​னசங்​கர் சிவப்​பிர​காசம், ஸ்வேதா பிரேம் அகர்​வால் ஆகிய 3 பேர் தேர்​வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

எலெக்ட்​ரிக்​கல் இன்​ஜினீயரிங் துறை பேராசிரியர் மோக​னசங்​கர் சிவபிர​காசம், வேதி​யியல் துறை பேராசிரியர் தலப்​பில் பிரதீப் விஞ்​ஞான் ஸ்ரீ விருதும், கம்ப்​யூட்​டர் சயின்ஸ் மற்​றும் இன்​ஜினீயரிங் துறை பேராசிரியை ஸ்வேதா பிரேம் அகர்​வால் ஆகியோர் விஞ்​ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்​நாகர் விருதும் வழங்கப்படுகிறது.

ஐஐடி இயக்​குநர் காமகோடி
ஐஐடி இயக்​குநர் காமகோடி

இதுகுறித்து பேசியிருக்கும் சென்னை ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி, "அறி​வியல், தொழில்​நுட்​பம் துறை​களில் சிறப்​பாகப் பணியாற்றியவர்களுக்கு வழங்​கப்​படும் உயரிய விரு​தான தேசிய அறி​வியல் விருதுக்கு எங்​களது 3 பேராசிரியர்​கள் தேர்​வு செய்யப்​பட்​டிருப்​பது பெரு​மை​யாக​ இருக்​கிறது.

அவர்​களின் சாதனை​யானது நாட்​டின் அறி​வியல், தொழில்​நுட்ப வளர்ச்​சி​யில் சென்னை ஐஐடி​யின் பங்களிப்பை மீண்​டும்​ உறு​திப்​படுத்​தியிருக்கிறது” என்​று பேசியிருக்கிறார்

"அரசியலில் அவதூறுகள், அடிகள் எல்லாம் வரத்தான் செய்யும்" - தவெக ராஜ்மோகன் பேட்டி

தவெக பிரச்சாரத்தின் போது நடந்த கரூர் கூட்டநெரிசலில் 41பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, விஜய்யும், தவெகவினரும் இப்போதுதான் மெல்ல மெல்ல வெளியில் வரத் தொடங்கியிருக்கின்றனர். இரண்டு நாள்களுக்கு முன்ப... மேலும் பார்க்க

"கே.என்.நேரு, சகோதரர்களின் 'JOB RACKET’ ; ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" - எடப்பாடி பழனிசாமி காட்டம்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில் ரூ. 888 கோடி லஞ்ச ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் கே.என். நேரு மீது பெரும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிற... மேலும் பார்க்க

`நகராட்சி பணிநியமனத்தில் ரூ. 888 கோடி லஞ்ச ஊழலா?’ - அமைச்சர் கே.என் நேரு சொன்ன விளக்கம்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்று கொண்டு நியமனங்கள் நடைபெற்று பெரும் மோசடி திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளதாக அமல... மேலும் பார்க்க

பைசன்: "மாரி(மழை) வந்துகொண்டிருக்கும் போது மாரி செல்வராஜுக்கு என்னங்க பாராட்டு?" - தமிழிசை கேள்வி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான 'பைசன்' திரைப்படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சாதிய சமூக ஏற்றத்தாழ்வுகளை மீறி, தடைகளை உடைத்து சாதிக்கும் இளைஞரின் ஸ்போர்... மேலும் பார்க்க

கேரளாவிலும் 'SIR' : ``இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவால்" - கேரள முதல்வர் பினராயி விஜயன்

பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (Bihar SIR)' மேற்கொள்ளப்படவிருக்கிறது. நவம்பர் மாதங்களில் இதற்கான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கவிருக்... மேலும் பார்க்க

தென்காசி: முதல்வர் வருகையின் போது மோசடியாக இலவச பட்டா? - மேலகரம் பெண்கள் புகாரின் பின்னணி என்ன?

முதல்வர் வருகையின் போது மோசடியாக இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், தகுதி உள்ள நபர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கவில்லையென்றால் முதல்வர் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மேலகரம் ... மேலும் பார்க்க