செய்திகள் :

கோபப்படுத்தினால் தீ வைத்துவிடுவேன்; 17 குழந்தைகளைக் கடத்திய மும்பை நபர் கைது

post image

மும்பை பவாய் பகுதியைச் சேர்ந்தவர் ரோஹித் ஆர்யா. நேற்று திடீரென ரோஹித் 17 குழந்தைகளை பிணைக் கைதிகளாகப் பிடித்தார். அங்குள்ள ஆர்.ஏ.ஸ்டூடியோவில் குழந்தைகள் திரைப்பட நடிப்பு பயிற்சி வகுப்பில் ஈடுபட்டிருந்தனர். அக்குழந்தைகளை ரோஹித் பிணைக் கைதிகளாக பிடித்துள்ளார். இது குறித்த செய்தி பரவியவுடன் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தைகளைக் கடத்திய நபர் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவர் வெளியிட்ட வீடியோவில்,'' நான் ரோஹித் ஆர்யா. தற்கொலை செய்து கொள்வதற்கு பதிலாக, நான் ஒரு திட்டத்தை வகுத்து, சில குழந்தைகளை இங்கே கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கிறேன்.

இந்தக் குழந்தைகளை நான் கைதிகளாகப் பிடித்திருக்கிறேன். நான் வாழ்ந்தால், நான் செய்ய நினைத்ததை செய்வேன்; நான் இறந்தால், வேறு யாராவது செய்வார்கள், ஆனால் அது நிச்சயமாக நடக்கும். நீங்கள் எனக்கு எதிராக சிறிய தவறான முடிவு எடுத்தாலும் நான் கோபமாகிவிடுவேன்.

ரோஹித் ஆர்யா
ரோஹித் ஆர்யா

நாங்கள் இருக்கும் இடத்திற்கு தீவைத்துவிடுவேன். எனக்கு அதிக கோரிக்கைகள் இல்லை. எனது கோரிக்கைகள் மிகவும் எளிமையானது, தார்மீக கோரிக்கைகள், நெறிமுறை கோரிக்கைகள் மற்றும் என்னிடம் சில கேள்விகளும் உள்ளன.

நான் சிலரிடம் பேச விரும்புகிறேன், அவர்களிடம் கேள்விகளும் கேட்க விரும்புகிறேன், அவர்களின் பதில்களுக்கு என்னிடம் எதிர் கேள்விகள் இருந்தால், நான் அவர்களிடம் திரும்பக் கேட்க விரும்புகிறேன். ஆனால் எனக்கு இதற்கு பதில்கள் வேண்டும். எனக்கு வேறு எதுவும் வேண்டாம். நான் தீவிரவாதி இல்லை, நான் அதிக பணமும் கேட்கவில்லை. நிச்சயமாக முறையற்ற எதையும் நான் விரும்பவில்லை," என்று ஆர்யா வீடியோவில் கூறினார்.

அந்த வீடியோ வைரலானவுடன் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குழந்தைகளின் பெற்றோர் அக்கட்டடத்தை சூழ்ந்தனர். போலீஸாரும் அக்கட்டிடத்தை சுற்றி வளைத்தனர். போலீஸார் விரைந்து செயல்பட்டு பிடித்து வைக்கப்பட்டிருந்த குழந்தைகளை பத்திரமாக மீட்டு ரோஹித்தை கைது செய்தனர்.

சம்பவ இடத்திலிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் சில ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாக்பூரைச் சேர்ந்த ஆர்யா மும்பை செம்பூரில் வசித்து வந்தார். அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட குழந்தைகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து போலீஸார் மேலும் கூறுகையில்,''சம்பந்தப்பட்ட நபர் வெப் சீரியஸில் நடிக்க ஆட்கள் தேவை என்று கூறி 100 குழந்தைகளை ஒத்திகைக்கு அழைத்திருக்கிறார். அவர்களில் 83 பேரை அனுப்பி விட்டு 17 பேரை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டார். அவர்களுடன் மேலும் இரண்டு பேர் இருந்தனர்''என்று தெரிவித்தனர்.

சென்னை: மனைவியின் ஆண் நண்பரைக் கொலைசெய்த கணவர் - இரண்டு பெண்கள் சிக்கிய பின்னணி!

புதுச்சேரி, முதலியார்பேட்டை, பாப்பன்சாவடியைச் சேர்ந்த பிரகாஷ், (35). இவர், தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் புதுச்சேரியில் கழிவுநீர் அகற்றும் ஒப்பந்தம் பெற்று அந்தத் தொழிலையும் செய்து வந்தார். ... மேலும் பார்க்க

புனே: 82 வயது முதியவரிடம் டிஜிட்டல் கைது மோசடி; ரூ. 1 கோடி பறிபோனதால் அதிர்ச்சியில் உயிரிழந்த சோகம்

மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களில் இணையதளக் குற்றவாளிகள் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.முதியவர்கள் இந்த மோசடியில் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இ... மேலும் பார்க்க

மும்பை அணு ஆராய்ச்சி மையம்: 14 வரைபடங்கள், அணு ஆயுத தகவலுடன் சிக்கிய மர்ம நபர் யார்? - பகீர் பின்னணி

மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்குள் கடந்த வாரம் விஞ்ஞானி என்ற பெயரில் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது, அவரது பெயர் அக்பர் குத்புதின் உசைனி என்று தெரியவந்தது.விசார... மேலும் பார்க்க

திருப்பூர்: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை - அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம், அவிநாசி நகராட்சி மன்ற 12-ஆவது வார்டு அதிமுக உறுப்பினராக உள்ளவர் சாந்தி. இவரது கணவர் ராஜேந்திரன் (45). சொந்தமாக இருசக்கர வாகனம் ஒர்க்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.இந்நிலையில், இவர... மேலும் பார்க்க

கொள்ளையடிக்க சென்ற ஹோட்டலில் உல்லாசம்; சிசிடிவி கேமராவில் சிக்கிய காதல் ஜோடி - வீடியோவால் அதிர்ச்சி

அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் நள்ளிரவில் திருடச் சென்ற ஜோடி, உணவகத்திற்குள் நுழைந்ததும் பாலியல் செயலில் ஈடுபட்டு பின்னர் கொள்ளையடித்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியு... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டும்; கோவை அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி - வனத்துறை விசாரணை!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ஜக்கனாரி பகுதியில் வனப்பகுதி அருகே திருமலைராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. வன எல்லையை ஒட்டியுள்ள அந்தத் தோட்டத்தின் அருகிலேயே வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட அகழி... மேலும் பார்க்க