செய்திகள் :

குருபூஜை: "எடப்பாடிதான் எங்கள் எதிரி" - செங்கோட்டையன், டிடிவி, ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு!

post image

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இன்று முத்துராமலிங்கனர் சிலைக்கு மாலை அணிவிக்க அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழுவின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒன்றாக காரில் வந்துள்ளனர். இருவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினதினகரன் உடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

எடப்பாடி பழனிசாமி

செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "ஐயா அவருடைய சன்னதியில் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே குடையின் கீழ் நின்று மீண்டும் புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மாவுடைய ஆட்சியை தமிழகத்திலே நிறுவிட வேண்டும் என்ற சபதத்தை இன்றைக்கு மேற்கொண்டிருக்கின்றோம்" என்றார்.

டிடிவி தினகரன், "புரட்சித் தலைவர், அம்மாவின் தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக ஓபிஎஸ் - செங்கோட்டையனுடன் கைகோர்த்து தேர்தலைச் சந்திக்கவுள்ளோம். துரோகத்தை வீழ்த்துவதற்காகத்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாக்கப்பட்டது. அந்த துரோகத்தை வீழ்த்தும் வரை ஓயாது. சின்னம்மாவால் (சசிகலா) இன்னும் வந்துசேர முடியவில்லை. அவர் மனதளவில் எங்களோடு இணைந்திருப்பார்.

சசிகலா
சசிகலா

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எங்களுக்கு எதிரி இல்லை. எடப்பாடி, திமுகதான் எங்களுக்கு எதிரி. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு எடப்பாடி என்கிற துரோக மனிதர்தான் எதிரி. வேறு யாரையும் நாங்கள் எதிரியாகப் பார்க்கவில்லை." எனப் பேசியுள்ளார்.

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி பேசிய அவர், "1952 முதல் 2004 வரை எட்டு முறை இந்த SIR நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் 21 ஆண்டுகளுக்கு பிறகு பீகாரில் நடத்தப்பட்டபோது அதில் பல்வேறு முறைகேடுகள், புகார்கள், வாக்கு திருட்டு என்றெல்லாம் புகார்கள் உச்ச நீதிமன்றம் வரை 65 லட்சம் பேர் வாக்காளர் உரிமையே பறிக்கப்பட்டிருப்பதாக வழக்கு சென்றிருக்கிறது.

தமிழ்நாட்டில அதுபோல ஒரு நிலை இல்லாமல், தமிழ்நாடு அரசாங்கம் அரசு அதிகாரிகளை வைத்து எல்லா கட்சிகளின் ஒத்துழைப்போடு ஒற்றுமையோடு அதை சிறப்பாக நடைபெற்று முடிக்க அதை செய்திட வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு." என்றும் கூறியுள்ளார்.

Modi: "திமுக, காங்கிரஸ் பீகார் மக்களை அவமதிக்கிறது" - பீகாரில் பிரதமர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 30) இந்தியா கூட்டணி கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுக பீகார் மக்களை அவமானப்படுத்துவதாக பேசி உள்ளார்.பீகார் மாநிலம் சக்கரா பகுதியில் நடந்த பா... மேலும் பார்க்க

'விஜய்யின் விருப்பம்; திமுகவின் நெருக்கடி; அதிமுகவோடு கூட்டணியில்லை!' - உறுதியாக கூறும் அருண் ராஜ்!

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் தவெக கட்சி மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கிறது. கட்சியின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க 28 உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. முக்கிய நிர்வாகிகள் ... மேலும் பார்க்க

`இவர்கள் திமுக பி டீம்' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ... மேலும் பார்க்க

பசும்பொன்: தேவர் நினைவிட பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்; தர்ணாவும் செய்ததால் பரபரப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பூசாரியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஶ்ரீதர் வாண்டையார்பார்வர்ட் பிளாக் கட்சி... மேலும் பார்க்க

வெற்றிகரமாக முடிந்த ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு; என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில்... கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தான், முதன்முதலாக ... மேலும் பார்க்க

SIR Row : `அதிமுக வரவேற்பதும், திமுக எதிர்ப்பதும் ஏன்?' - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் | களம் 1

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் அமைச்சர்கட்டுரையாளர்: முனைவர் வைகைச்... மேலும் பார்க்க