செய்திகள் :

``திமுக ஆட்சி முடிய இன்னும் 140 நாள்கள் தான், கவுண்டவுன் ஸ்டார்ட்'' - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

post image

தஞ்சாவூர் பெரியகோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு அருகாமையில் உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது சதய விழாவின் முக்கிய நிகழ்வாகும்.

அதன்படி, அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்தனர். இதேபோல் பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நயினார் நாகேந்திரன்
ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நயினார் நாகேந்திரன்

பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“நாட்டில் எத்தனையோ மன்னர்கள் ஆண்டனர். அனைவரையும் மிஞ்சியவர் மாமன்னர் ராஜராஜ சோழன். திறமையான ஆட்சி நடத்தினார். நமது பிரதமர் மோடி, கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் 1000வது ஆண்டு விழாவில் பங்கேற்று, ராஜேந்திர சோழனின் புகழை உலகெங்கிலும் பரப்பினார்.

தஞ்சை பெரியகோவிலுக்கு வெளியே உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் சிலையை கோயிலுக்குள் வைப்பது குறித்து பல தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து, அதன் அடிப்படையில் மத்திய அரசிடம் பரிசீலனை செய்வோம்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

நெல் கொள்முதல் தாமதத்தால், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. மேலும், நெல் முளைத்து வீணாகி வருகிறது. நெல் மூட்டைகளுடன் லாரிகள் பல நாட்களாக காத்திருக்கின்றன. விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் இதைப் பற்றி கவலைப்படாமல் முதல்வரும், துணை முதல்வரும் சினிமா பார்த்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டனர். இதுவரை கூறிய எதையும் தி.மு.க அரசு செயல்படுத்தவில்லை.

தி.மு.க ஆட்சிக்கு இன்னும் 140 நாட்களே உள்ளன. ஆட்சிக்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது. வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்,” என்றார்.

SIR Row : 'கொளத்தூரில்19476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்கள்’ - BJP ஏ.என்.எஸ் பிரசாத் | களம் 03

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)செய்தி தொடர்பாளர்: தமிழக பாஜககட்டுரையாளர்: ஏ.... மேலும் பார்க்க

Bihar: ``இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்; என் குடும்பத்துக்காக எதையும் செய்ததில்லை" - நிதிஷ் கோரிக்கை

பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இதில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க-வும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களில் போட்... மேலும் பார்க்க

நீக்கிய EPS, பயம்காட்டும் Sengottaiyan-ன் Next Move! ADMK War! | Elangovan Explains

செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார் எடப்பாடி. இதையொட்டி, 'எடப்பாடி முதலமைச்சராக காரணமே நான்தான் என்றும், கொடநாடு ஏ1 எடப்பாடி' என்றும் கடுமையான அட்டாக். இதற்கு, அம்மா ஜெ-வால் பதவி பறிக்கப்பட்ட... மேலும் பார்க்க

10 பேர் பலி: ``இது முதல்முறையல்ல, அரசின் அலட்சியமே'' - ஆந்திரா நெரிசல் குறித்து ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுகா பகுதியில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. ஏகாதசியை முன்னிட்டு இன்று கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 10 ப... மேலும் பார்க்க

செங்கோட்டையன் நீக்கம்: "தென் தமிழ்நாட்டில் எடப்பாடி பெரும் தோல்வியைச் சந்திப்பார்" - டிடிவி தினகரன்

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் இன்று (நவ.1) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.இதுதொடர்பாகப் பேசிய அவ... மேலும் பார்க்க