செய்திகள் :

"தீண்டாமைச் சுவரை உடனே அகற்றுங்கள்" - அமைச்சர் ராஜ்மோகன் காலில் விழுந்து கெஞ்சிய நபர்; என்ன நடந்தது?

post image

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் அருகில் உள்ள சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் 22-வது ஆண்டு புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நேற்று மாலை தொடங்கி வைத்துள்ளார்.

நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் ராஜ்மோகன் காலில் திடீரென விழுந்த நபர் ஒருவர், "விருதுநகர் மாவட்டத்தில் பட்டியல் சமுதாய குழந்தைகள் கல்வி கற்க தடையாக உள்ள தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை மனு அளித்தேன். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் தற்போது ஈரோடு மாவட்டம் வரை வந்து மனு அளிக்கிறேன். தீண்டாமைச் சுவரை அகற்ற உடனடியாக உத்தரவிடுங்கள்" எனக் கோரிக்கையை வலியுறுத்தினார்.

அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்

இது குறித்து அவரிடம் பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், "ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து நீங்கள் என்னைத் திட்டி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தாலும் பரவாயில்லை, குழந்தைகளின் கல்விக்காக நீங்கள் வைக்கும் இந்த நியாயமான கோரிக்கையை நான் ஏற்கிறேன். உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க சொல்கிறேன்" என உறுதியளித்திருக்கிறார்.

கோரிக்கை மனு அளித்த நபர் குறித்தும் விருதுநகர் மாவட்டத்தில் எந்தப் பகுதியில் அந்தத் தீண்டாமைச் சுவர் உள்ளது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'திமுக கூட்டத்தில் பங்கேற்ற ஷாநவாஸ் விசிக மாநாட்டை புறக்கணித்தது ஏன்?' - குமுறும் விசிக தொண்டர்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டில் பங்கேற்காதது கட்சிக்குள் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. 'ஷாநவாஸிடம் கட்சித் தலைவர் திருமா விளக்கம் கேட்க... மேலும் பார்க்க

கேரள முதல்வர் தொடங்கி வைத்த விழிஞ்சம் சர்வதேச துறைமுக (EXIM) வர்த்தகம் - பிரத்யேக புகைப்படங்கள்!

கேரள முதல்வர் தொடங்கி வைத்த விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் (EXIM) வர்த்தகம்.! பிரத்யேக புகைப்படங்கள்.! மேலும் பார்க்க

கர்நாடக வனத்துறை தூப்பாக்கிச் சூடு: "காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!" - மு.க. ஸ்டாலின்

கர்நாடக மாநிலம், சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் அருகில், காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுதி உள்ளது. நேற்று அதிகாலை 5 மணியளவில் தோமையார்பாளையத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கர்ந... மேலும் பார்க்க

ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் உண்மைத் தன்மை அறிதல்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

அரசு தொடக்க, நடுநிலை, அரசு நகராட்சி மற்றும் மாநகராட்சி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மையை அறிய பள்ளிக் கல்வித்துறையிலிருந்து உத்தரவிடப்பட்ட... மேலும் பார்க்க

`அதுக்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காம... இதுக்கு கைது பண்ணிட்டாங்க!' - உதயநிதி ஸ்டாலின்

அண்ணா அறிவாலயத்தில் வடக்கு மண்டல வழக்கறிஞர்கள் அணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தான் கைது செய்யப்பட்டபோது நடந்தது குறித்தும், தவெக அரசை விம... மேலும் பார்க்க

சேலம்: 80 வது சுதந்திர தின விழாவின் கோலாகலமான கொண்டாட்டம்! | Photo Album

சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட... மேலும் பார்க்க