செய்திகள் :

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு; 4 வயது பெண் குழந்தையை வன்கொடுமை செய்து கொன்ற கொடூரன்

post image

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் சத்யா . இவருக்கும் ராஜா என்பவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ராஜா இறந்து விட்டதால், தற்போது அந்தக்குழந்தை ராஜாவின் தாயிடம் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், சத்யா அதே ஊரைச் சேர்ந்த மணி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சந்தோஷியா  என்ற 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இதனிடையே,  கணவர் மணியுடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.  கடந்த சில மாதங்களாக சத்யா தனது குழந்தையுடன் குலசேகரன்பட்டினம் அண்ணா சிலை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.  

குலசேகரன்பட்டினம் காவல் நிலையம்

இந்த நிலையில், சத்யாவுக்கும், தூத்துக்குடியைச்  சேர்ந்த இசக்கிராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில்  திருமணம் மீறிய உறவாக மாறியுள்ளது. கடந்த  இரண்டு மாதங்களாக இசக்கிராஜ், சத்யாவுடன்  வசித்து வந்துள்ளார். பின்னர், சத்யாவின் குழந்தையால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு  ஒருநாள் முன்னதாக சத்யாவை பார்க்க வந்துள்ளார். கடந்த ஜனவரி 20-ம் தேதி காலை 9 மணி அளவில் சத்யா குழந்தையை இசக்கிராஜிடம் பார்க்க சொல்லிவிட்டு கடைக்குச் சென்றுள்ளார்.

திரும்பி வந்த போது குழந்தை பேச்சு மூச்சி இல்லாமல் இருந்துள்ளது. இருவரும்  அக்குழந்தையை உடன்குடி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று, ஏதோ வண்டு கடித்து விட்டதாகக் கூறியுள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள்,  குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகக்கூறி உடலை தூத்துக்குடி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், குழந்தையின் உடல் மற்றும் குறிப்பாக பிறப்புறுப்பில் காயங்கள் இருந்ததால் இதுகுறித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

குலசேகரன்பட்டினம் காவல் நிலையம்

போலீஸார்,  இருவரையும்  விசாரித்து வந்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் குழந்தையின் இடுப்பு பகுதியில் பலமாக அழுத்தப்பட்டதற்கு காயங்கள் இருந்ததும் தெரியவந்தது.  இது குறித்து சத்யா கொடுத்த புகாரின் பேரில் இசக்கிராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை குலசேகரன்பட்டினம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத்: 33 கிராமங்களுக்காக ரூ.21 கோடிக்கு கட்டிய தண்ணீர் தொட்டி- திறக்கப்படுவதற்கு முன்பே இடிந்தது!

குஜராத் மாநிலம் சூரத் அருகில் உள்ள தட்கேஷ்வர் என்ற கிராமத்தில் மாநில அரசு, 33 கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக ரூ.21 கோடியில் 9 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் 15 மீட்டரில் பிரம்மாண்... மேலும் பார்க்க

நெல்லை: சாலையில் தூக்கி வீசப்பட்ட ஆண் சிசுவின் சடலம்; நாய் கவ்விச் சென்ற அவலம்; பின்னணி என்ன?

நெல்லை, மேலப்பாளையம் அருகில் உள்ளது மேலநத்தம். இங்கு பழைய அரிசி ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலைக்குச் செல்லும் சாலையின் ஓரத்தில் தெருநாய் ஒன்று சிவப்பு நிறத் துணி சுற்றப்பட்ட ஒரு பார்சலை கவ்விச் சென்று வாய... மேலும் பார்க்க

`பொண்டாட்டினு கூட பார்க்காம அசிங்கமா வீடியோ எடுத்து.!’ அதிர வைக்கும் வரதட்சனை புகார்; விபரீத முடிவு

விழுப்புரம் மாவட்டம் பக்கிரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ பட்டதாரியான பிரியங்காவுக்கும், புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கும் கடந்த 2025 அக்டோபர் 31-ம் தேதி திரும... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகை: முதியவர்களைக் குறிவைத்து ரூ. 500ஐ அமுக்கிய ரேஷன்கடை ஊழியர்; அதிகாரிகள் விசாரணை

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு ரூ.3000 மற்றும் ஒரு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி மற்றும் வேட்டி, சேலை அறிவித்தது. இந்தப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப... மேலும் பார்க்க

கேரளா: பேருந்தில் எடுத்த வீடியோ வெளியானதால் ஊழியர் தற்கொலை செய்த வழக்கு - இளம் பெண் கைது

கேரள மாநிலம் கோழிக்கோடு வடகரா பகுதியை சேர்ந்தவர் ஷிம்ஜிதா முஸ்தபா(35). இன்ஸ்டா கன்டென்ட் கிரியேட்டரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன் பேருந்தில் பயணம் செய்தபோது கோழிக்கோடு கோவிந்தாபுரம் பகுதியைச் சே... மேலும் பார்க்க

போதையால் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் - என்ன நடக்கிறது கோவையில்?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே சின்ன மத்தம்பாளையம் பகுதி உள்ளது. அங்கு தனியார்மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. அங்கு 50 வயது வயதான மதிக்கத்தக்க ஒருவர் நேற்று இரவு மது அருந்தியுள்ளார். இந... மேலும் பார்க்க