செய்திகள் :

தூத்துக்குடி: “யார் பெரிய ஆள்?" - மதுபோதையில் இரு தரப்பினர் மோதல்; ஒருவர் கொடூரக் கொலை

post image

தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்னோவின். இவர் மீது கடந்த 2019-ம் ஆண்டு தூத்துக்குடியில் அம்மன் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த திருநங்கை ஒருவரைக் கொலை செய்த வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவரது பெயர் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் ரெளடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இவரது நண்பரான பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த சூசை மீதும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் இருவரும் தாளமுத்துநகர் அருகிலுள்ள மேட்டுப்பட்டி அருகேயுள்ள கடற்கரையில் மறைவான பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

தாளமுத்துநகர் காவல் நிலையம்
தாளமுத்துநகர் காவல் நிலையம்

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சந்தனராஜ், முத்துக்குமார் ஆகியோர் அவர்களின் நண்பர்களுடன் அமர்ந்து அதே பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அருகருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஒருவருக்கொருவர் அவதூறான வார்த்தைகளால் பேசியுள்ளனர். இருதரப்பில் யார் பெரிய ஆள் என, ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, இதில் ஆத்திரமடைந்த சந்தனராஜ் கும்பல், ஸ்னோவின் மற்றும் சூசை ஆகிய இருவரையும் கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தாளமுத்துநகர் காவல் நிலைய போலீஸார், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஸ்னோவின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சூசை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சந்தனராஜ் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர். மேலும் 3 பேரைத் தேடி வருகின்றனர்.

பல்வேறு வழக்குகளில் சிக்கிய ரெளடி சந்தனராஜை போலீஸார் தேடி வந்தனர். ஆனால், போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவாகவே இருந்துள்ளார். இந்த நிலையில்தான், இந்தக் கொலை வழக்கில் கைதாகியுள்ளார்.

தாளமுத்துநகர் காவல் நிலையம்
தாளமுத்துநகர் காவல் நிலையம்

பல வழக்குகளில் தொடர்புடைய சந்தனராஜ்ஜைப் பிடிக்காமல் போலீஸார் சுணக்கம் காட்டியதே இக்கொலைக்குக் காரணம் என்கின்றனர் அப்பகுதியினர். தூத்துக்குடி தாளமுத்துநகர், மேட்டுப்பட்டி, மொட்டை கோபுரம் ஆகிய பகுதிகள்தான் போதைப் பொருட்களின் புகலிடமாகவும், இங்கிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குப் பீடி இலைகள் உள்ளிட்டவற்றை கடத்தும் கேந்திரமாகவும் விளங்குகிறது. ஆனால், இங்கு பெரும்பாலும் உள்ளூர் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுவதே இல்லை என்கின்றனர் அப்பகுதியினர்.

கஞ்சா நடமாட்டமும், கஞ்சா புகைப்பவர்களும் இப்பகுதியில் அதிகம் சுற்றித் திரிவதால் பெண்கள், மாலை நேரத்திற்கு மேல் வெளியில் நடமாடவே அச்சப்படுகிறார்கள்.   

தூத்துக்குடி: மின்கசிவால் சிறுவன் உயிரிழப்பு; மின்சாரத் துறையின் அலட்சியமா? என்ன நடந்தது?

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவரின் 8 வயது மகன் உதய சுதர்சன். இச்சிறுவன் பள்ளி கோடை விடுமுறைக்காக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் காவடிப்பிறை தெருவில் உள்ள ... மேலும் பார்க்க

ராமேஸ்வரம் கோயில் இலவச லட்டு பிரசாதத்தில் ரூ.3.40 கோடி சுருட்டல் - ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட்!

புனித தலமான ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு தனியார் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்த பிரசாத உரிமம் ... மேலும் பார்க்க

திருச்சி: சொத்து கேட்டு தாயைத் தாக்கிய மகன்; ஆத்திரத்தில் இரும்புக் குழாயால் அடித்துக் கொன்ற தந்தை

திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் எல்லைக்குட்பட்ட புறத்தாக்குடி கிராமம், நோவா நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது: 52). அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மலைக்கோட்டை பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: கணவன் இறந்த துக்கம்; மனைவி எடுத்த விபரீத முடிவு; தாயின் முடிவால் ரயிலில் பாய்ந்த மகன்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ளது ஆக்கிடாவலசை கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவருக்கு ஜானகி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் ராஜாமணி கடந்த 3 மாதங்களுக்... மேலும் பார்க்க

"பாஜக-வின் டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா" - ஓடும் பேருந்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

நாட்டையே உலுக்கிய 2012-ம் ஆண்டு நிர்பயா சம்பவத்தின் வடு மறைவதற்குள், நாட்டின் தலைநகரான டெல்லியில் மீண்டும் ஒரு இளம்பெண் ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி... மேலும் பார்க்க

`ரூ.2.47 கோடி கட்டுங்க; 7 நாள்கள்தான் கெடு’ - ஏழை விவசாயி பெயரில் ஜிஎஸ்டி மோசடி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள வீரிசெட்டிபல்லி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகர் (வயது 32). விவசாயியான இவர், கறவை மாடு வளர்ப்பு மூலமாக கிடைக்கும் குறைவான பால் வருமானத்தை நம்பியே பிழைப... மேலும் பார்க்க