செய்திகள் :

தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை உடைக்க சதி - கொந்தளிக்கும் கு.பாரதி

post image

அம்பத்தூர் மண்டலத்தில் தூய்மைப் பணியாளர்களின் சம்பள விவகாரத்தில் ஊழல் நடப்பதாக பாஜகவின் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம் புகார் கொடுத்திருந்தார்.

கராத்தே தியாகராஜன்
கராத்தே தியாகராஜன்

இதுசம்பந்தமாக விகடன் தளத்தில் நேற்று (07.12.25) கராத்தே தியாகராஜனின் பேட்டி வெளியாகியிருந்தது. அதில், அம்பத்தூர் திமுக சேர்மன் மூர்த்தி, மண்டல அதிகாரி பிரபாகரன், தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் LTUC தலைவர் பாரதி ஆகியோர்தான் கூட்டு சேர்ந்து கமிஷன் அடிப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

விகடன் தளத்தில் அந்தப் பேட்டி வெளியாகியிருந்த நிலையில் கராத்தே தியாகராஜன் குற்றஞ்சாட்டிய LTUC தலைவர் நம்மை தொடர்புகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 'திமுக சேர்மன் மூர்த்தி பணியில் இல்லாத 450 தூய்மைப் பணியாளர்களை பணியில் இருப்பதாகக் கணக்கு காட்டி மாதம் 1 கோடி வரை கொள்ளையடிப்பதாகவும், அதில் நானும் கமிஷன் பார்ப்பதாகவும் கராத்தே தியாகராஜன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

கு.பாரதி
கு.பாரதி

மூர்த்தி தரப்பிலிருந்து எனக்கு ஒரு ரூபாய் வழங்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் கூட நானே தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை கலைத்துவிட்டு செல்கிறேன். தூய்மைப் பணியாளர்கள் தங்களின் பணிக்காக 100 நாட்களுக்கு மேலாகப் போராடி வருகிறார்கள். அம்பத்தூரில் இப்போதும் 4 தூய்மைப் பணியாளர்கள் 20 நாட்களுக்கு மேலாக உண்ணாநிலை போராட்டத்தில் இருக்கிறார்கள். அம்பத்தூரிலிருந்துதான் எங்களின் போராட்டத்தையே தொடங்கினோம்.

வலுவாக நடந்துகொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தை உடைக்க வேண்டும் என்றுதான் அபாண்டமான பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், கராத்தே தியாகராஜன், பாஜகவின் தொழிற்சங்கமான பிஎம்எஸ்ஸின் புருஷோத்தமன் ஆகிய மூவரும் கூட்டு. இவர்கள் ராம்கி நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படக்கூடியவர்கள்.

உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி
உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி

முதல்வரிடம் தேநீர் அருந்த தூய்மைப் பணியாளர்களை அழைத்துச் சென்றதே அந்த புருஷோத்தமன்தான். நாங்கள் சவால் விடுகிறோம். மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், கராத்தே தியாகராஜன் ஆகியோரோடு பொது இடத்தில் நேருக்கு நேர் விவாதிக்க நாங்கள் தயார். யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை பார்த்துவிடுவோம்.' என்றார் கொதிப்போடு.

ரூ.10200000000 `ஓராண்டு பட்ஜெட்டே போடலாம்; திமுக ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணுவது உறுதி" - எடப்பாடி

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைக் கவனித்து வரும் திமுக மூத்த அமைச்சர் கே.என். நேரு, தனது துறையில் ரூ. 1,020 கோடி வரையில் ஊழல் செய்திருப்பதாகவும், வழக்குப் பதிவு செய்யவும் தமிழக தலைம... மேலும் பார்க்க

"அன்புமணிக்கும், பாமக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உறுதியாகிவிட்டது" - எம்.எல்.ஏ அருள்

சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, "ஒரு சில பொறுப்பாளர்கள் கட்சியை திருட பொய... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் வரவிருக்கும் 'டொனால்ட் ட்ரம்ப் சாலை' - ரேவந்த் ரெட்டி முடிவுக்கு பாஜக எதிர்ப்பு!

'தெலங்கானா ரைசிங் குளோபல் உச்சி மாநாட்டிற்கு' (Telangana Rising Global Summit) முன்னதாக, உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் நோக்கில், அந்த மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் உள்ள ஒரு முக்கியச் சாலைக... மேலும் பார்க்க

TVK : கட்டையை போட்ட ரங்கசாமி; சங்கடத்தில் விஜய்! - புதுச்சேரி விசிட் பின்னணி என்ன?

தவெக தலைவர் விஜய் நாளை புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை நடத்தவிருக்கிறார். கட்சி ஆரம்பித்த பிறகு விஜய் முதல் முறையாக புதுச்சேரிக்கு செல்கிறார். ஏற்கனவே டிசம்பர் 5 ஆம் தேதி அங்கே கூட்டம் நடத்துவதாக இருந்... மேலும் பார்க்க

US: ``உங்கள் மனைவி உஷாவை இந்தியாவுக்கு அனுப்புங்கள்'' - ஜேடி வான்ஸ் மீது கடும் விமர்சனம் ஏன்?

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் (JD Vance) “அதிகப்படியான குடியேற்றம் (Mass Migration) என்பது அமெரிக்கக் கனவைத் திருடுவது” என்று தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.`இந்தக் கருத்து முரண... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை நாமே தகர்க்கிறோமா? - மருவும் மக்களாட்சி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க