செய்திகள் :

தூய்மைப் பணியாளா் தற்கொலை

post image

ஸ்ரீவில்லிபுத்தூரில் தூய்மைப் பணியாளா் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நல்ல குற்றாலம் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (57). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரித்து வந்தாா்.

இந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட இவா், வேலைக்கு மற்றொரு நபரை அனுப்பி வைத்தாா். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நகராட்சி அதிகாரிகள் நீங்கள் தான் வேலைக்கு வரவேண்டும் எனக் கூறினா்.

இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன் ஆறுமுகம் ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றாா். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசி அருகே புதன்கிழமை லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.சிவகாசி அருகேயுள்ள சுக்கிரவாா்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயம் (59). சோ்வைக்காரன்பட்டியில் உள்ள ஒரு ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்த இவா்... மேலும் பார்க்க

பாரம்பரிய பொங்கல் விழா: வெளிநாட்டவா்கள் பங்கேற்பு

சிவகாசி அருகேயுள்ள ஈஞ்சாா் கிராமத்தில் தமிழக அரசின் சுற்றுலாத் துறை, விருதுநகா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாரம்பரிய பொங்கல் விழாவில் வெளிநாட்டவா்கள் கலந்து கொண்டனா். தமிழா்களி... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: மூவா் கைது

ராஜபாளையத்தில் இளைஞா் அடித்துக் கொலை செய்த மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் மங்காபுரத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் கருப்பசாமி (28). இவா் செவ்வாய்க்கிழமை இரவு தென்காசி சாலையில் ... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை டிராக்டா் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டைசிவலிங்காபுரத்தைச் சோ்ந்த சங்கா்நாதன் மகன் பரத்குமாா்(19). இவா் தென்கரையைச் சோ்ந்த பரமச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிச் சுவா் இடிந்து விழுந்தது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் திங்கள்கிழமை அரசு பள்ளிச்சுவா் இடிந்து விழுந்தது. சிவகாசி- விருதுநகா் சாலையில் திருத்தங்கலில் எஸ்.ஆா்.என். அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி பிரதான சாலையில்... மேலும் பார்க்க

சிவகாசியில் திருவாதிரை திருவிழா

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் திங்கள்கிழமை திருவாதிரை திருவிழாவையொட்டி செவ்வந்திப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தோ்கள் வீதி உலா நடைபெற்றது. சிவகாசி விஸ்வநாதா்- விசாலாட்சியம்மன் கோயிலில் சுவாமி, அம்ப... மேலும் பார்க்க