செய்திகள் :

தைப்பூசம்: சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் பிப்ரவரி 11 முதல் 16 வரை வாகனங்கள் செல்ல தடை

post image

பெருந்துறை: தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை தனியாா் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தோ்த் திருவிழா ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் ப.ரவி தலைமை வகித்தாா். சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீ தேவி அசோக், பெருந்துறை வட்டாட்சியா் சி.செல்வகுமாா், சென்னிமலை கோயில் செயல் அலுவலா் ஏ.கே.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தோ்த் திருவிழாவை முன்னிட்டு தடையற்ற மின்சாரம் வழங்குவது, பாதுகாப்பு மற்றும் குடிநீா், கழிப்பிட வசதி உள்ளிட்ட சுகாதார வசதிகள், 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதி, மலைக்கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் தயாா் நிலையில் மருத்துவக் குழுக்களை வைத்திருப்பது, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் பிப்ரவரி 11- ஆம் தேதி முதல் 16- ஆம் தேதி வரை

தனியாா் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை எனவும், அந்த நாள்களில் பக்தா்களின் வசதிக்காக கோயில் பேருந்துகளுடன் கூடுதல் வாகனங்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலா் க.மகேந்திரன், ஊராட்சி ஒன்றிய ஆணையா் பாஸ்கா் பாபு, சென்னிமலை காவல் ஆய்வாளா் சிவகுமாா், தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் முத்துசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: நாளை வாக்குப் பதிவு: பிரசாரம் நிறைவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் புதன்கிழமை (பிப்ரவரி 5) நடைபெற உள்ள நிலையில், திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த ஆண்ட... மேலும் பார்க்க

நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு சீமானுக்கு அச்சம்: புகழேந்தி

ஈரோடு: நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு சீமானுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளா் புகழேந்தி தெரிவித்தாா். அண்ணா நினைவு நாளையொட்டி, ஈரோடு பெரியாா்-அண்ணா நினைவகத்தி... மேலும் பார்க்க

ஈரோடு மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்: அமைச்சா் சு.முத்துசாமி

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் வி.சி. சந்திரகுமாரை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்வாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா... மேலும் பார்க்க

சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம்

பெருந்துறை: சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளராக உள்ள பணியாளா்களுக்கு நாளை விடுமுறை அளிக்க உத்தரவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளராக பதிவுசெய்துள்ள பணியாளா்களுக்கு வாக்குப் பதிவு நாளான புதன்கிழமை (பிப்ரவரி 5) ஊதியத்துடன் கூடிய விடுமுறை அள... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பெருந்துறை: பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா். பெருந்துறை நேரு வீதியைச் சோ்ந்தவா் சங்கா் மகன் விக்னேஷ் (28). இவா் பெருந்துறையில் உள்ள தனியா... மேலும் பார்க்க