செய்திகள் :

தொழில்துறைக்கு மட்டும் தானா, அப்போ முதலீட்டிற்கு? வெள்ளி இறக்குமதியில் 'கட்டுப்பாடு' விதித்த இந்தியா

post image

இன்னும் 100 டாலர்களுக்கு மேல் தான் கச்சா எண்ணெய் வர்த்தகமாகி வருகிறது. இந்தியாவில் எண்ணெய் இறக்குமதிகள் தடைப்படாமல் இருக்க, அந்நிய செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதில் ஒன்று தான், கடந்த வாரம் இந்திய பிரதமர் மோடி சொன்ன 'தங்கத்தை ஓராண்டிற்கு வாங்காதீங்க' என்பதும், தங்கம், வெள்ளி இறக்குமதி வரி அதிகரிப்பும்.

இந்த நடவடிக்கைகளை இன்னும் வலுப்படுத்துவது போல இன்னொரு செக்கை வைத்துள்ளது மத்திய அரசு.

வெள்ளி
வெள்ளி

கடந்த சனிக்கிழமை (ஜூன் 16), வெள்ளி இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அரசு. வெள்ளி இறக்குமதி என்றால் கட்டி, நாணயம் என எந்த வடிவிலும் இறக்குமதி கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கும் வந்துள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டால், இந்தியாவில் வெள்ளி இறக்குமதி குறையும், உள்ளூர் சந்தையில் வெள்ளி கிடைப்பது கொஞ்சம் கடினமாகும். இதனால், வெள்ளியின் விலை இந்தியாவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

80 சதவிகித வெள்ளியை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதனால், இந்தியாவில் வெள்ளி இறக்குமதியில் கட்டுப்பாடு விதிக்கப்படும் போது, சர்வதேச சந்தையிலும் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

'கட்டுப்பாடு' என்று குறிப்பிடும் போது, தொழிற்துறை பயன்பாட்டைத் தவிர, முதலீடு, ஆபரணம் போன்றவற்றிற்கு வெள்ளி இறக்குமதியை அரசு பெரியளவில் அனுமதிக்காது என்று சந்தை நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆந்திரா: "3வது, 4வது குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.30 ஆயிரம் சன்மானம்" - முதல்வர் சந்திரபாபு அறிவிப்பு

இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். தற்போது 3வது மற்றும் 4வது குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கும்... மேலும் பார்க்க

வித்யாஷ்ரம் பள்ளியில் நிர்வாக பிரச்னை; இடைக்கால நிர்வாகியாக விஜய்குமார் ரெட்டி - நீதிமன்றம் தீர்ப்பு

செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியை நடத்தி வரும் குமார ராஜா முத்தையா பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பள்ளியை நிர்வகிக்க புதிய நிர்வாகி ஒருவரை நியமித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். கடந்த மே 2-ம் தேதி, அந்தப... மேலும் பார்க்க

இனி PF கிளைம் செய்தால் போதும்; 3 நாள்களில் வங்கிக் கணக்கில் தானாக பணம் வந்து விடும்!

தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த அனைவருக்கும் ஓய்வுக்காலத்தில் பெரியளவில் கைக்கொடுப்பது - பி.எஃப் பணம். சில நேரங்களில், பணியில் இருக்கும் போதே, அவசரக் காரணங்களுக்காக பி.எஃப் பணம் கிளைம் செய்யப்படும். ... மேலும் பார்க்க

மின் கட்டணம்: ``இதைப் பின்பற்றி செயல்படுத்துங்கள்..!"- அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை!

தவெக அரசு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்த நிலையில், அதனை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட மின் பொறியாளர்களுக்கும் மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் முந்தைய திட... மேலும் பார்க்க

'ஆயிரம் கோடிக்கணக்கில் இந்தியாவில் இருந்து வெளியேறும் பணம்' இந்திய ரூபாய் மதிப்பு ரூ.96-க்கு சரிவு!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்துகொண்டே வருகிறது. இந்தச் சரிவைத் தடுக்க, அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அது அவ்வளவாக கைக்கொடு... மேலும் பார்க்க

'எடப்பாடிக்கு எதிராகவே `அதிமுக அதிகாரப்பூர்வ' ஊடகங்கள் திரும்பியது எப்படி?

அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடும், தொலைக்காட்சியும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பியதோடு த.வெ.க ஆதரவு நிலைப்பாடு எடுத்திருக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு துண... மேலும் பார்க்க