செய்திகள் :

"நாங்க பட்டாணி சாப்பிடவா வந்திருக்கோம்? வாங்க ராஜினாமா பண்ணுவோம்"- கொந்தளித்த சென்னை பாஜக கவுன்சிலர்

post image

சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் 'கூண்டோடு ராஜினாமா செய்வோம்' எனப் பேச பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் அதை ஆதரித்து பேசினார்.

மாநகராட்சி கூட்டம்
மாநகராட்சி கூட்டம்

நேரமில்லா நேரத்தின்போது குறுக்கே எழுந்து பேசிய கவுன்சிலர் ராஜா அன்பழகன், "பருவமழை நெருங்கும் காலத்தில் மக்கள் பணிகளுக்கான நிதியை விடுவிக்காமல் இந்த அரசு வஞ்சிக்கிறது. திட்டங்களைச் செயல்படுத்தாமல் நாம் ஏன் இங்கே வர வேண்டும். திமுகவினர் அனைவரும் ராஜினாமா செய்வோம். மக்களோடு மக்களாக நின்று அவர்களுக்காகப் பணி செய்வது ஒன்றும் திமுகவினருக்குப் புதிதல்ல" என்றார்.

ராஜா அன்பழகனின் கருத்தை ஆமோதித்து பேசிய பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், ''நாம் என்ன பட்டாணி சாப்பிடவா இங்கே வந்திருக்கிறோம்? நிதியை விடுவிக்கவில்லையென்றால் அனைவரும் ராஜினாமா செய்வோம். நாம் என்ன எம்.எல்.ஏக்களைப் போல இன்னோவா கார் கேட்டோமா? முதல்வரின் அறையில் அதிகாரிகளுக்கு முறையாக இடமில்லை என அமைச்சர் ஆதவ் கூறுகிறார். முதல்வரின் அறையைப் புதிய இடத்துக்கு மாற்றுகிறார்கள். அதற்கெல்லாம் பணம் இருக்கிறது. மக்கள் பணி செய்ய வார்டு மேம்பாட்டு நிதியை விடுவிக்க முடியாதா?'' என்றார்.

உமா ஆனந்த்
உமா ஆனந்த்

திமுக கவுன்சிலர்கள் நே.சிற்றரசு, ராஜன் போன்றோரும் நிதியை விடுவிக்க சொல்லி ராஜினாமா செய்வோம் எனப் பேசினர்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க