செய்திகள் :

"நினைத்ததையெல்லாம் எழுதி விட்டேன்; இப்போது காலன் வந்தாலும் தயார்"- தெ.ஞானசுந்தரத்திற்கு அரசு மரியாதை

post image

கடந்த ஞாயிற்றுக்கிழமை மறைந்த தமிழறிஞர் தெ.ஞானசுந்தரத்தின் உடல் இன்று சென்னையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

பேச்சாளர், எழுத்தாளர், பேராசிரியர், ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமையாகத் திகழ்ந்த முனைவர் தெ.ஞானசுந்தரத்தின் இழப்பு தமிழ் இலக்கிய உலகத்துக்குப் பேரிழப்பு என்றால் மிகையில்லை.

கம்ப ராமாயணத்தைக் கரைத்துக் குடித்தவர். கம்பர் தாண்டி வால்மிகி ராமாயணத்தையும் கற்றறிந்து வைத்திருந்தார். 'கூடுதலாக ஒரு மொழி கற்றுக் கொண்டால் நல்லதுதானே' என மலையாளமும் கற்றிருந்தார். வைணவ இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் என எதையும் விட்டு வைக்காதவர்.

இவரது உரை கேட்டோர், அந்த அனுபவங்களை விவரிப்பதே அவ்வளவு அழகாக இருக்கும். 'மேடையில் அவர் பேசினால், அது பொது நிகழ்ச்சி என்றாலும் எதிரே அமர்ந்திருப்பவர்கள் வகுப்பில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் போல அத்தனை அமைதியாக உட்கார்ந்து கவனிப்பார்கள்' என்கிறார், கவிஞர் பிருந்தா சாரதி.

கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

"கம்பனைப் பாடியவர், வைணவத்தைக் குறைவில்லாது ஊட்டியவர். அவருக்கு ஈடு இணை இல்லை ஒருவரே உலகில்" என்கிற பத்திரிகையாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட வேண்டுமெனக் கோரிக்கையையும் வைத்திருந்தார்.

இரு வாரங்களுக்கு முன் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் அவருடன் பொங்கல் கொண்டாடியதை நினைவுகூர்ந்த முன்னாள் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷைய்யன், அந்தக் கொண்டாட்டங்களின் ஊடே, தெ.ஞா பேசிய சில வார்த்தைகளைக் குறிப்பிட்டுள்ளார்.

சுதா சேஷய்யன்
சுதா சேஷய்யன்

‘தற்போது என்ன நூல் எழுதுகிறீர்கள் அல்லது திட்டமிட்டிருக்கிறீர்கள்?’ என்று அங்கு அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில்..

"நான் எழுத நினைத்ததையெல்லாம் எழுதிவிட்டேன். நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்; இப்போது காலன் வந்தால்கூட வரவேற்பேன்", என்பதுதானாம்.

கோபுரங்கள் சாய்வதில்லை! - ஒரு தாயின் பாடம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் /விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தி... மேலும் பார்க்க

அறிவுத் தூதுவர்களுக்கு ஒரு சல்யூட்! : உன்னதமான மனிதர்களை கெளரவிக்கும் புதுக்கோட்டை வாசகர் பேரவை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

திருநெல்வேலி: கல்லூரி மாணவரால் கண்டெடுக்கப்பட்ட பழைமைவாய்ந்த புதைப்பொருள்கள்!

திருநெல்வேலியில் உள்ள மானூரில் மன்னர் காலக் கல்வெட்டுகள் பலவும் கிடைக்கின்றன. இதனால் ஆய்வாளர்கள் அங்கு அடிக்கடி சென்று கள ஆய்வு செய்து வருகின்றனர். சமீபத்தில் மேற்கு செழியநல்லூரில் 450 ஆண்டுகள் பழைமைய... மேலும் பார்க்க

டெல்லி: திருச்சி இளைஞரின் கவிதை புத்தகம் வெளியீடு - மத்திய அமைச்சர்கள், நடிகை ஹூமா குரேஷி பங்கேற்பு!

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச விருதுகள் வழங்கும் விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் எழுதிய சுய முன்னேற்றம் குறித்த கவிதை புத்தகம் கோலாகலமாக வெளியிடப்பட்டது.புத்தகத்தின் பெயர்: என்கிரேட்ட... மேலும் பார்க்க

மலையாளத்தில் பறம்பின் குரல்: `வீரயுக நாயகன் வேள்பாரி' - நூலை பெற்றுக்கொண்ட சு.வெங்கடேசன்!

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யுமான சு.வெங்கடேசனின் எழுத்திலும், ஓவியர் மணியம் செல்வனின் ஓவியத்துடனும் விகடன் பிரசுரத்தில் வெளியானப் புத்தகம் `வீரய... மேலும் பார்க்க