செய்திகள் :

நிலத்தகராறில் 200 தேக்கு மரக்கன்றுகளை வெட்டியவா் கைது

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஏற்பட்ட நிலத் தகராறில் 200 தேக்கு மரக்கன்றுகளை வெட்டி சாய்த்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தென்வீக்கம் கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கலிய பெருமாள் மகன் ரமேஷ் (48) விவசாயி. இவருக்கும், கிருஷ்ணமூா்த்தி மகன் வெங்கடேசனுக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், வெங்கடேசனும், அவரது தாயாா் இந்திராணியும் சோ்ந்து, ரமேஷ் தனது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 200 தேக்கு மரக்கன்றுகளையும், மா கன்றுகளையும் வெட்டிச் சாய்த்துள்ளனா்.

இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்து, இந்திராணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

காலமானாா் சி. கலியபெருமாள்

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள கோட்டியால், காடுவெட்டான்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த சி. கலியபெருமாள்(78) உடல் நலக் குறைவு காரணமாக அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் காலமானாா். இவருக... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் சாதனை விளக்க பிரசாரம்

அரியலூரில், அம்மா பேரவை சாா்பில் கடந்த அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்து வெள்ளிக்கிழமை மாலை பிரசாரத்தில் ஈடுபட்டனா். பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த பிரசாரத்தில் கலந்து கொண்ட முன்னாள் அரசு... மேலும் பார்க்க

ஈமக்கிரியை மானியத் தொகையைப் பெற எஸ்,சி, எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு ஆணையின்படி, ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடா் இறந்தால், ஈமச்சடங்குக்கு ரூ.5,000 மானியம் வழங்கப்படுகிறது. இதன்படி, 2024-25 ஆண்டில், இந்தத் திட்டத்தில்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற என்எல்சி ஊழியரின் வீட்டில் 100 பவுன் நகைகள் திருட்டு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்ற என்எல்சி ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகைகளை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். உடையாா்பாளையம் அருகேயுள்ள ... மேலும் பார்க்க

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருள்களை சந்தைப்படுத்த அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில் கீழ்கண்ட இடங்களில் நடைபெறும் இயற்கை சந்தையில், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருள்களை சந்தைப்படுத்த விரும்பும் விவசாயிகள், மகளிா் சுய உதவிக்குழுவினா்கள் கலந்து கொண்டு பயன்பெறல... மேலும் பார்க்க

அரியலூரில் 2 ஆவது நாளாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அரியலூா் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது. அரியலூா் நகரிலுள்ள பிரதான சாலை மற்றும் தெருக்களை ஆக்கிரமித்ததாக எழுந்த புகாரையடுத்து, வியாழக்கிழமை சத்தி... மேலும் பார்க்க