செய்திகள் :

நெல்லை: சாலையில் தூக்கி வீசப்பட்ட ஆண் சிசுவின் சடலம்; நாய் கவ்விச் சென்ற அவலம்; பின்னணி என்ன?

post image

நெல்லை, மேலப்பாளையம் அருகில் உள்ளது மேலநத்தம். இங்கு பழைய அரிசி ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலைக்குச் செல்லும் சாலையின் ஓரத்தில் தெருநாய் ஒன்று சிவப்பு நிறத் துணி சுற்றப்பட்ட ஒரு பார்சலை கவ்விச் சென்று வாயால் துணியை அகற்றி எதையோ கடித்துக் கொண்டிருந்தது. அப்பகுதி வழியே சென்ற முதியவர் ஒருவர் இதைப் பார்த்துள்ளார்.

சிசுவின் உடலை மீட்ட போலீஸார்
சிசுவின் உடலை மீட்ட போலீஸார்

நாயின் அருகில் சென்று பார்த்ததும், அந்தத் துணிக்குள் இறந்த ஆண் சிசுவின் உடல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நாயை அவர் விரட்ட முயலவே குரைத்துக்கொண்டே அவரைக் கடிக்கப் பாய்ந்துள்ளது.

கம்பால் அடித்து நாயை விரட்டிவிட்டுள்ளார். பின்னர், மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு போனில் தகவல் கூறியுள்ளார். விரைந்து வந்த போலீஸார், உயிரிழந்த சிசுவின் உடலை மீட்டனர். அந்தச் சிசு நஞ்சுக் கொடியுடன் காணப்பட்டது.

சிசுவின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஆண் குழந்தை பிறந்து 3 மணி நேரம் மட்டுமே இருக்கும் எனக் கூறியுள்ளனர். பிரேதப் பரிசோதனைக்காக சிசுவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தெருநாய் சிசுவின் உடலை எங்கிருந்து கவ்விக்கொண்டு வந்தது என்பது குறித்து அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட சிசுவின் உடல்
மீட்கப்பட்ட சிசுவின் உடல்

அதே நேரத்தில் இந்தக் குழந்தை எந்த மருத்துவமனையில் பிறந்தது, மேலப்பாளையம் சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் ஒரே நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஆண் குழந்தை பிறந்து இறந்த விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். வீட்டில் பிரசவம் ஏற்பட்டு உயிரிழந்ததா என்ற தகவலையும் விசாரித்து வருகின்றனர்.

கோவை கல்லூரி மாணவி மீது கத்தியால் குத்தி தாக்குதல் - சக மாணவன் வெறிச் செயல்

கோவை சத்தி உள்ள தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு 17 வயது மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே வகுப்பில் ஹர்ஷவர்தன் என்கிற 18 வயது மாணவர் படித்து வருகிறார். ஹர்ஷவர்தன் மாணவ... மேலும் பார்க்க

குஜராத்: 33 கிராமங்களுக்காக ரூ.21 கோடிக்கு கட்டிய தண்ணீர் தொட்டி- திறக்கப்படுவதற்கு முன்பே இடிந்தது!

குஜராத் மாநிலம் சூரத் அருகில் உள்ள தட்கேஷ்வர் என்ற கிராமத்தில் மாநில அரசு, 33 கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக ரூ.21 கோடியில் 9 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் 15 மீட்டரில் பிரம்மாண்... மேலும் பார்க்க

`பொண்டாட்டினு கூட பார்க்காம அசிங்கமா வீடியோ எடுத்து.!’ அதிர வைக்கும் வரதட்சனை புகார்; விபரீத முடிவு

விழுப்புரம் மாவட்டம் பக்கிரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ பட்டதாரியான பிரியங்காவுக்கும், புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கும் கடந்த 2025 அக்டோபர் 31-ம் தேதி திரும... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு; 4 வயது பெண் குழந்தையை வன்கொடுமை செய்து கொன்ற கொடூரன்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் சத்யா . இவருக்கும் ராஜா என்பவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ராஜா இறந்து விட்டதால், தற்போது அந்தக்குழந்தை ராஜாவின் தாயிடம் வ... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகை: முதியவர்களைக் குறிவைத்து ரூ. 500ஐ அமுக்கிய ரேஷன்கடை ஊழியர்; அதிகாரிகள் விசாரணை

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு ரூ.3000 மற்றும் ஒரு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி மற்றும் வேட்டி, சேலை அறிவித்தது. இந்தப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப... மேலும் பார்க்க

கேரளா: பேருந்தில் எடுத்த வீடியோ வெளியானதால் ஊழியர் தற்கொலை செய்த வழக்கு - இளம் பெண் கைது

கேரள மாநிலம் கோழிக்கோடு வடகரா பகுதியை சேர்ந்தவர் ஷிம்ஜிதா முஸ்தபா(35). இன்ஸ்டா கன்டென்ட் கிரியேட்டரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன் பேருந்தில் பயணம் செய்தபோது கோழிக்கோடு கோவிந்தாபுரம் பகுதியைச் சே... மேலும் பார்க்க