செய்திகள் :

நெல்லை: சாலையில் தூக்கி வீசப்பட்ட ஆண் சிசுவின் சடலம்; நாய் கவ்விச் சென்ற அவலம்; பின்னணி என்ன?

post image

நெல்லை, மேலப்பாளையம் அருகில் உள்ளது மேலநத்தம். இங்கு பழைய அரிசி ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலைக்குச் செல்லும் சாலையின் ஓரத்தில் தெருநாய் ஒன்று சிவப்பு நிறத் துணி சுற்றப்பட்ட ஒரு பார்சலை கவ்விச் சென்று வாயால் துணியை அகற்றி எதையோ கடித்துக் கொண்டிருந்தது. அப்பகுதி வழியே சென்ற முதியவர் ஒருவர் இதைப் பார்த்துள்ளார்.

சிசுவின் உடலை மீட்ட போலீஸார்
சிசுவின் உடலை மீட்ட போலீஸார்

நாயின் அருகில் சென்று பார்த்ததும், அந்தத் துணிக்குள் இறந்த ஆண் சிசுவின் உடல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நாயை அவர் விரட்ட முயலவே குரைத்துக்கொண்டே அவரைக் கடிக்கப் பாய்ந்துள்ளது.

கம்பால் அடித்து நாயை விரட்டிவிட்டுள்ளார். பின்னர், மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு போனில் தகவல் கூறியுள்ளார். விரைந்து வந்த போலீஸார், உயிரிழந்த சிசுவின் உடலை மீட்டனர். அந்தச் சிசு நஞ்சுக் கொடியுடன் காணப்பட்டது.

சிசுவின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஆண் குழந்தை பிறந்து 3 மணி நேரம் மட்டுமே இருக்கும் எனக் கூறியுள்ளனர். பிரேதப் பரிசோதனைக்காக சிசுவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தெருநாய் சிசுவின் உடலை எங்கிருந்து கவ்விக்கொண்டு வந்தது என்பது குறித்து அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட சிசுவின் உடல்
மீட்கப்பட்ட சிசுவின் உடல்

அதே நேரத்தில் இந்தக் குழந்தை எந்த மருத்துவமனையில் பிறந்தது, மேலப்பாளையம் சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் ஒரே நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஆண் குழந்தை பிறந்து இறந்த விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். வீட்டில் பிரசவம் ஏற்பட்டு உயிரிழந்ததா என்ற தகவலையும் விசாரித்து வருகின்றனர்.

முக்கோண காதல்: நண்பனை கொலை செய்து 190 கி.மீ தூரம் எடுத்துச்சென்று உடலை எரித்து மும்பை போலீஸ்காரர்

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் போலீஸ்காரராக இருப்பவர் பந்து பிசே (49). இவர் தான் விரும்பும் பெண்ணை தனது நண்பரும் விரும்பியதால் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து தனது நண்பரை கொலை செய்து கிணற்றில் த... மேலும் பார்க்க

பேரணாம்பட்டு: பேருந்தில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் - தோல் வியாபாரி கைது

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவர், நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் தனியார் பேருந்தில... மேலும் பார்க்க

குடியாத்தம்: பாலியல் வன்முறைக்குள்ளான 14 வயது சிறுமி - போலீஸார் தீவிர விசாரணை

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 14 வயது வளர்ப்பு மகள், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பத்தாம் வகுப்புப் பயின்றுவந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக... மேலும் பார்க்க

நாமக்கல்: சொத்து வரி மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்; வருவாய் அலுவலர் வசமாகச் சிக்கியது எப்படி?

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயியான இவரது பெயரில் உள்ள நான்கு வீடுகளை அவரது மகன் பெயருக்கு மாற்றி, சொத்து வரி விதிக்கக் கோரி, நாமக்கல் மாநகராட்சியி... மேலும் பார்க்க

`வெறுப்புப் பேச்சு'- அண்ணாமலைக்கு சம்மன்; பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

2023-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அப்போதைய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அற... மேலும் பார்க்க

அதானி குழுமம் மீது ஊழல் பதிவுகள், செய்தி கட்டுரைகள்; செய்தியாளருக்கு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவி நாயர். இவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் மற்றும் பொய்யான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த... மேலும் பார்க்க