செய்திகள் :

நெல்லை: திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்ட நிலையில் மணப்பெண் உயிரிழப்பு; ஆணவக்கொலையா?- நடந்தது என்ன?

post image

நெல்லை, பேட்டை செக்கடி தெருவைச் சேர்ந்தவர் பச்சிராஜன். இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி, ரேவதி. தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது முதல் மகளுக்கு திருமணமான நிலையில், இரண்டாவது மகளான சிவமதி நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இயற்பியல் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில், சிவமதியும் பேட்டை கடசர் தெருவைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

பேட்டை காவல் நிலையம்

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால், இவர்களின் காதலுக்கு சிவமதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உறவுக்காரின் மகன் ஒருவரை சிவமதிக்கு திருமணம் செய்து வைக்க முயன்றபோது சிவமதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், வேறு வழியின்றி ஆனந்த கிருஷ்ணனுக்கே திருமணம் செய்து வைப்பதாகக் கூறி உறுதியளித்ததுடன் திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தது.  

இவர்களது திருமணம், வரும் 6-ம் தேதி தென்காசி மாவட்டம், புளியரையில் உள்ள சிவகாமி அம்பாள் – சதாசிவ மூர்த்தி திருக்கோயிலில் நடைபெறுவதாக திருமண அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிவமதியின் உறவினர்கள் அவரது பெற்றோரிடம் திருமணத்தை நிறுத்துமாறு கூறியதாக கூறப்படுகிறது.

இதனால், இரு தரப்பு வீட்டினருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று (1-ம் தேதி) இரவில் சிவமதிக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி, டவுண் கண்டியப்பேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் கழுத்தில் காயங்களுடன் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பேட்டை காவல் நிலையம்

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இத்தகவல் அறிந்த பேட்டை காவல் நிலைய போலீஸார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சிவமதியை ஆணவப்படுகொலை செய்ததாக ஆனந்தகிருஷ்ணனின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதனையடுத்து சிவமதியின் பெற்றோரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

UP: 9 ஆண்டு காதல்; 2 மாதத் திருமண வாழ்க்கை; கழுத்தை நெரித்து கணவன் கொலை; மனைவி சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேசத்தில் 9 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த காதல் கணவனை மனைவி இரண்டு மாதத்தில் கொலை செய்துள்ளார்.அங்குள்ள பரேலி என்ற இடத்தில் வசிப்பவர் ஜோதி. இவர் அரசு பஸ்சில் ஒப்பந்த அடிப்படையில் நடத்துந... மேலும் பார்க்க

சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு: சென்னையில் நடிகர் ஜெயராமிடம் விசாரணை; சாட்சியாக மாற்ற முடிவா?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்ட... மேலும் பார்க்க

கடலூர்: காதலில் விழுந்த மருமகள்; கண்டித்த மாமனாரை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்

கடலூர் மாவட்டம் மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முந்திரி விவசாயியான ராஜேந்திரன், கடந்த 29-ம் தேதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த கந்தன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.... மேலும் பார்க்க

ஐடி சோதனையின் போது விபரீதம்: விசாரணையின்போதே தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் சிஜே ராய்!

தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான 'கான்ஃபிடன்ட் குழுமத்தின்' (Confident Group) நிறுவனர் மற்றும் தலைவர் சி.ஜே. ராய் (57). கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இவர், ரியல் எஸ்டேட் துறையில் மிக... மேலும் பார்க்க

குளித்தலை: `ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; யாருக்காக ஆட்சி நடத்துகிறது திமுக?' - அண்ணாமலை கண்டனம்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பழனியாண்டி. இவருக்குச் சொந்தமான கல்குவாரி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிவாயம் பகுதியில் செயல்பட்டு ... மேலும் பார்க்க

கல்குவாரிக்குச் செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் மீது தாக்குதல்; திமுக எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பழனியாண்டி. இவருக்குச் சொந்தமான கல்குவாரி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிவாயம் பகுதியில் செயல்பட்டு ... மேலும் பார்க்க