செய்திகள் :

பனிப்பொழிவில் சிக்கி இறந்த எஜமானர்; 4 நாள்களாக உடலைப் பாதுகாத்த வளர்ப்பு நாய்; இமாச்சலில் நெகிழ்ச்சி

post image

இமாச்சலப் பிரதேசத்தில் தற்போது கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. பனிப்பொழிவு நடைபெறும் இடத்தில் யாராவது தனியாகச் சென்று சிக்கிக்கொண்டால் பனிக்கட்டியில் சிக்கி உயிர் பிழைப்பது கஷ்டம்.

அங்குள்ள சம்பா மாவட்டத்தில் பார்மவுர் என்ற இடத்தைச் சேர்ந்த விகாஷ் ரானா, பியூஸ் ஆகியோர் கடந்த சில நாள்களுக்கு அங்குள்ள பர்மனி கோயிலுக்குச் சென்றனர். இதில் விகாஷ் ரானாவிற்கு 13 வயதுதான் ஆகிறது. அவர்கள் தங்களுடன் வளர்ப்பு நாயையும் அழைத்துச் சென்று இருந்தனர். ஆனால் திடீரென அவர்கள் காணாமல் போய்விட்டனர்.

பியூஷ் மற்றும் வளர்ப்பு நாய்
பியூஷ் மற்றும் வளர்ப்பு நாய்

அவர்களைக் காணாமல் அவர்களின் உறவினர்கள் பல இடங்களில் தேடி இறுதியில் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து பனிப்பொழிவான பகுதியில் தேட ஆரம்பித்தனர்.

4 நாள் சாப்பிடாமல் எஜமானரைப் பாதுகாத்த நாய்

ஒரு இடத்தில் நாய் ஒன்று அமர்ந்திருந்தது. அங்குதான் அவர்கள் இரண்டு பேரும் பனிப்பொழிவில் சிக்கி இறந்து கிடந்தனர். அவர்களுடன் வந்த வளர்ப்பு நாய் அவர்கள் இறந்து கிடந்த இடத்தில் கடந்த நான்கு நாட்களாக எங்கேயும் செல்லாமல், சாப்பிடாமல் கடுமையான பனிப்புயல், காற்றையும் பொறுத்துக்கொண்டு தனது எஜமானர்களின் உடலைப் பாதுகாத்துக்கொண்டு நின்றது.

மீட்புக்குழுவினர் வந்தபோது அவர்களை அங்கு நின்ற நாய் இருவர் உடல் அருகில் நெருங்க விடாமல் ஆக்ரோஷமாக இருந்தது. அதன் பிறகு அந்த நாயைச் சமாதானப்படுத்தினர். பிறகு அந்த நாயும், வந்தவர்கள் உதவி செய்யத்தான் வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து ஒதுங்கி வழிவிட்டது. இரண்டு பேரின் உடல்களை மீட்டு எடுத்துச்செல்லும் வரை அந்த நாய் அருகில் நின்று கொண்டிருந்தது அனைவரது கண்களில் கண்ணீரை வரவழைக்கும் விதமாக இருந்தது.

இருவரது உடலை நாய் பாதுகாத்து நின்ற வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகி இருக்கிறது. நாய் தங்களது எஜமானர்கள் மீது எந்த அளவுக்குப் பாசம் வைத்திருக்கிறது என்பது இதைப் பார்க்கும்போது தெரிய வருகிறது. இருவரும் கோயில் உச்சியைத் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுக்க முயன்றபோது 5 அடி பனிப்பொழிவு பகுதியில் தவறி விழுந்ததாகத் தெரிய வந்துள்ளது.

Republic day: மின்னொளியில் மிளிரும் புதுச்சேரி அரசு கட்டிடங்கள்!

மின்னொளியில் மிளிரும் புதுச்சேரி அரசு கட்டிடங்கள்சட்டப்பேரவை கட்டிடம்பழைய கலங்கரை விளக்கம்பிரெஞ்சு போர் நினைவிடம்சட்டப்பேரவை கட்டிடம்மத்திய கலால் துறைபுதுச்சேரி நகராட்சி கட்டிடம் புதுச்சேரி அரசு சின்ன... மேலும் பார்க்க

சென்னை: தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையைப் பாராட்டிய சௌபாக்கியா கிச்சன் அப்லையன்ஸ்!

சென்னையைச் சேர்ந்த 48 வயதான தூய்மைப்பணியாளர் எஸ். பத்மா பணியின் போது கண்டெடுத்த ₹ 45 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருப்பி அளித்து பரவலான பாராட்டைப் பெற்றுள்ளார்.ஜனவரி 11ஆம் தேதி வண்டிக்காரன் சாலைய... மேலும் பார்க்க

சிம்ரன் பாலா: குடியரசு தின அணிவகுப்பில் வரலாற்று சாதனை படைக்கும் ஜம்மு காஷ்மீர் பெண் அதிகாரி

புதுடெல்லியில் நடைபெறவுள்ள நாட்டின் 77-வது குடியரசு தின அணிவகுப்பில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 26 வயதான சிம்ரன் பாலா ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைக்கவுள்ளார். மத்திய போலீஸ் படையின் (CRPF) உதவித் தளபதிய... மேலும் பார்க்க

டெல்லி: அரசு விருந்தினர் மாளிகை கட்டியதில் ஊழல் - மகாராஷ்டிரா அமைச்சர் உட்பட 46 பேர் விடுவிப்பு

2005-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் சகன் புஜ்பால் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, டெல்லியில் `மகாராஷ்டிரா சதன்' கட்டுவதற்கு டெண்டர் விடாமல் சமன்கர் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு பணி வழங்கப்பட்டது.... மேலும் பார்க்க

காதலனை வரச் சொன்ன காதலி; சிக்கவைத்த உறவுக்கார பெண்; 40 நிமிடங்கள் டிரங்க் பெட்டியில்! நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். அந்த வாலிபர் வீடு அப்பெண்ணின் வீட்டில் இருந்து 7 வீடு தள்ளி இருக்கிறது. அப்பெண்ணின் பெற்... மேலும் பார்க்க

காதலனை கொன்று சிறை சென்ற பெண்ணுக்கு ஆயுள் கைதியுடன் மலர்ந்த காதல்! - திருமணம் செய்ய 15 நாள் பரோல்

ராஜஸ்தான் மாநிலத்தில் மாடலாக இருந்த நேகா(34) என்ற பெண்ணுக்கு டேட்டிங் செயலி மூலம் துஷ்யந்த் சர்மா என்பவருடன் 2018ம் ஆண்டு தொடர்பு ஏற்பட்டது. நேகாவிற்கு ஏற்கனவே திக்‌ஷந்த் கம்ரா என்ற காதலன் இருந்தார். ... மேலும் பார்க்க