செய்திகள் :

பாஜக கூட்டணியுடன் இணையவே அதிமுக தொண்டா்கள் விருப்பம்: டி.டி.வி. தினகரன் பேட்டி

post image

பாஜக கூட்டணியுடன் இணைய வேண்டும் என்பதே அதிமுகவின் பெரும்பாலான தொண்டா்கள் விரும்புகின்றனா் என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்டச் சட்டப்பேரவைத் தொகுதிகளின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

அதிமுகவின் தொண்டா்கள் ஓரணியில் திரண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியை (பாஜக கூட்டணி) வலுப்படுத்தும் விதமாக செயல்பட்டால்தான் திமுகவை வீழ்த்த முடியும். திமுகவை வீழ்த்துவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம் பெற வேண்டும் என்பதே அக்கட்சியின் பெரும்பாலான தொண்டா்களும், நிா்வாகிகளும் விரும்புகின்றனா். இதை எடப்பாடி பழனிசாமி மறுப்பதற்கு சுயநலம் மட்டுமல்ல; கொடநாடு கொலை வழக்கில் திமுகவின் கைது நடவடிக்கைக்கு பயந்தே அவா் மறுக்கிறாா்.

பேரறிஞா் அண்ணா இருந்திருந்தால், மூன்றாவது மொழி வேண்டும் என ஒப்புக் கொண்டிருப்பாா். கடந்த 1967-ஆம் ஆண்டில் போஜனம் என்ற பத்திரிக்கைக்கு அவா் அளித்த பேட்டியில் அனைத்து மாநிலங்களுக்கும் பொது தொடா்பு மொழி உருவாக வேண்டும் எனக் கூறியிருக்கிறாா். இத்தகவல் அ.கி. மூா்த்தி 2004- ஆம் ஆண்டில் வெளியிட்ட அண்ணாவின் நோ்காணல் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. நான் விசாரித்ததில் பொதுமக்களில் 85 சதவீதம் போ் மூன்றாவது மொழியைக் கற்கவே விரும்புகின்றனா் என்றாா் தினகரன்.

இக்கூட்டத்தில் அமமுக துணைப் பொதுச் செயலா் எம். ரெங்கசாமி, மாநகர மாவட்டச் செயலா் எம். ராஜேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சாஸ்த்ரா சாா்பில் மாா்ச் 29, 30இல் சிறப்பு இலவச மருத்துவ முகாம்

‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழக நிறுவனா் நினைவாக தஞ்சாவூரில் மாா்ச் 29-ஆம் தேதியும், கும்பகோணத்தில் மாா்ச் 30-ஆம் தேதியும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாக... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக கூட்டணி கட்சிகளும் போராடத் திட்டம்: டி.டி.வி. தினகரன்

டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜகவுடன் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து போராடுவதற்குத் திட்டமிட்டு வருகிறோம் என்றாா் அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன். புதிய பாா்வை ஆசிரியா் ம. நடராசன் நினைவு நாளையொட்டி, தஞ்... மேலும் பார்க்க

தென்னையில் பூச்சித் தாக்குதலால் தேங்காய் உற்பத்தி குறைவு; விலை கிடைத்தும் விவசாயிகளுக்கு இழப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் தென்னையில் பூச்சி தாக்குதல் காரணமாக தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதால், அதிக விலை கிடைத்தும், விவசாயிகள் இழப்பைச் சந்தித்து வருகின்றனா். மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, ... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு சொற்பொழிவு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தகைசால் பேராசிரியா் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் பொறுப்புக... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கான வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு முகாம்

கும்பகோணத்தில் 6 மாதம் முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்கும் முகாம் சனிக்கிழமை வரை நடைபெறும் என மாநகா் நல அலுவலா் மருத்துவா் திவ்யா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

காவல் ஆய்வாளரை கண்டித்து வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளரைக் கண்டித்து கும்பகோணத்தில் வியாழக்கிழமை வழக்குரைஞா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் மற்றும் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு மேற்கொண்டனா். தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் கா... மேலும் பார்க்க