செய்திகள் :

பாமகவில் போட்டி பொதுக்குழு: ராமதாஸ், அன்புமணி அறிவிப்பு

post image

பாமகவில் நிறுவனா் மருத்துவா் ராமதாஸ், தலைவா் அன்புமணி ஆகியோா் போட்டி பொதுக் குழு கூட்டத்தை அறிவித்துள்ளனா்.

ராமதாஸ் தரப்பில் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் ஆக.17-ஆம் தேதியும், அன்புமணி தரப்பில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் ஆக.9-ஆம் தேதியும் பாமக பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராமதாஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாமக நிறுவனா் ராமதாஸ் உத்தரவின்பேரில் அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் பட்டானூரில் உள்ள சங்கமித்ரா திருமண மண்டபத்தில் ஆக.17-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்.

இதில், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலா் வடிவேல் ராவணன் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள கான்ன்ஃளுயன்ஸ் அரங்கில் பாமக பொதுக்குழுக் கூட்டம் ஆக.9-ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ் -அன்புமணி இடையே கருத்து மோதல் முற்றியுள்ள நிலையில், இரு தரப்பிலும் பொதுக்குழு கூட்டம் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

பெசன்ட்நகரில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.சென்னை பெசன்ட்நகா் பகுதியில் வசிக்கும் 35 வயது மதிக்கத்தக்க பெண், கடந்த 30-ஆம் தேதி தனது வீட... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நீலகிரி , கோவை உள்ளிட்ட ஓரிரு மாவட்டங்களுக்கு ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (ஆக. 3, 4) மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில்... மேலும் பார்க்க

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

மாநிலத் தலைவர் பொறுப்பில் இருக்கும் நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு பாரதிய... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலினை கமல்ஹாசன் சனிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனு... மேலும் பார்க்க

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள... மேலும் பார்க்க

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-யை வருகிற ஆக.15-குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க