`உங்கள் AI அசிஸ்டன்ட் என்ன செய்கிறது? இனி எல்லாமே தெரியும்!'- வருகிறது கூகுளின் ...
புனே: லிப்ட் கதவில் 1.5 மணி நேரம் சிக்கி 7 வயது சிறுவன் உயிரிழப்பு; என்ன நடந்தது?
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சின்காட் ரோடு பகுதியில் உள்ள ரித்தி சித்தி குடியிருப்பு கட்டிடத்தில் சைலேஷ்(7) என்ற சிறுவன் தனது பெற்றோடு வசித்து வந்தான்.
அவன் கட்டிடத்திற்குக் கீழே வந்து தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். இரவு 10 மணிக்கு இரண்டாவது மாடியில் உள்ள தனது வீட்டிற்க்குச் செல்வதற்காக சிறுவன் லிப்டில் ஏறினான். ஆனால் லிப்ட் இரண்டாவது மாடியை நெருங்கும் முன்பாக நின்றுவிட்டது.
சிறுவன் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வர முயன்றபோது லிப்ட் கிரில் கதவுக்கும், லிப்ட்டிற்கு வெளியில் இருக்கும் கதவுக்கும் இடையில் சிறுவன் சிக்கிக்கொண்டார்.
சிறுவனைக் காணாமல் அவனது பெற்றோர் பல இடங்களில் தேடினர். அதில் ஒருசிலர் லிப்ட் நடுவழியில் சிக்கி இருப்பதைக் கவனித்தனர். இதையடுத்து லிப்ட் நின்ற இடத்திற்க்குச் சென்றபோது உள்ளே சிறுவன் சிக்கி இருந்தான். இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

போலீஸார் விரைந்து வந்து லிப்ட் கதவைத் திறந்து சிறுவனை மீட்டு உடனே மருத்துவனையில் சேர்த்தனர். ஆனால் சிறுவன் அதற்குள் உயிரிழந்துவிட்டான். சிறுவன் ஒன்றரை மணி நேரம் லிப்டில் கிரில் கதவு மற்றும் லிப்ட் வாசல் கதவு இடையே சிக்கி இருந்ததால் உயிரிழக்க நேரிட்டது.
ஆனாலும் சிறுவனின் மரணத்திற்காகக் காரணம் குறித்து டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சிறுவன் லிப்டில் சிக்கிக்கொண்டபோது உதவி கேட்டு அவன் கத்தியது யாருக்கும் கேட்கவில்லை. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


















