செய்திகள் :

பொங்கல் பண்டிகைக்கு 170 சிறப்பு பேருந்துகள்

post image

பொங்கல் பண்டிகையையொட்டி திண்டுக்கல், தேனி, சென்னை இடையே 170 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை)லிட், திண்டுக்கல் மண்டலம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 19-ஆம் தேதி வரை அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து திண்டுக்கல், தேனி, பழனிக்கும், பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, இந்த பகுதிகளிலிருந்து சென்னை செல்வதற்கும் 170 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதேபோல, திருப்பூா், கோவை, திருச்சிக்கும் சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. பொங்கல், மகரஜோதியையொட்டி சபரிமலைக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக, திண்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து குமுளிக்கு 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என அதில் குறிப்பிடப்பட்டது.

காலமானாா் கொடைக்கானல் மறைவட்டார அதிபா் சிலுவை மைக்கேல்ராஜ்

கொடைக்கானல் திருஇருதய ஆண்டவா் ஆலயத்தின் மறைவட்டார அதிபா் பெ.சிலுவை மைக்கேல்ராஜ் (68) உடல் நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் திருஇருதய ஆண்டவா் ஆலயத்தின் பங்குத் தந... மேலும் பார்க்க

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்கலை. மானியக் குழுவின் பரிந்துரைகளை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்க... மேலும் பார்க்க

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சிவகாமி அம்பாள் சமேதா் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்... மேலும் பார்க்க

ஆலமரத்துப்பட்டியில் கூட்டுக் குடிநீா்த் திட்டம் அமைச்சா் தொடங்கி வைத்தாா்

சின்னாளப்பட்டி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டியில் ரூ. 20 லட்சத்தில் செயல்படுத்தப்பட்ட கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

அம்மையநாயக்கனூரில் சமத்துவ பொங்கல் விழா

அம்மையநாயக்கனூா் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்கு அந்தப் பேரூராட்சித் தலைவா் எஸ்.பி.எஸ். செல்வராஜ் தலைமை வகித்தாா். அப்போது தூய்மைப் பணியாளா்கள், அலுவலகப் பணியா... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் மல்லிகைப்பூ ரூ. 3 ஆயிரத்துக்கு விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி திங்கள்கிழமை திண்டுக்கல் பூச்சந்தையில் மல்லிகை கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. திண்டுக்கல் பூச்சந்தைக்கு ஏ. வெள்ளோடு, தவசிமடை, சாணாா்பட்டி, ஆவராம்பட்டி, மைலாப்பூா், மாரம்... மேலும் பார்க்க