செய்திகள் :

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ‘பார்’ நாகராஜ் தவெக-வில் இணைந்தாரா?

post image

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டில் இளம் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திருநாவுக்கரசு, சபரி ராஜன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் கடந்த 2025-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது.

இதற்கு முன்னதாக காவல் நிலையத்தில் புகார் அளித்த பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதாரை தாக்கிய அடிதடி வழக்கில், பாலியல் வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் நெருங்கிய நண்பரான கோட்டூர் பகுதியில் பார் நடத்தி வந்த அ.தி.மு.க. பிரமுகரான பார் நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள குள்ளம்பாளையம் பகுதியில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், பார் நாகராஜ் த.வெ.க-வில் இணைந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

இது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், “அமைச்சராக பொறுப்பேற்றமைக்காக ஆயிரக்கணக்கானோர் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்த கூட்டத்தோடு கூட்டமாக பார் நாகராஜூம் வந்து சென்றிருக்கிறார். அவருடன் எனக்கு எந்த அறிமுகமும் இல்லை. கூட்டத்தில் ஒருவராக வருகை தந்த ஒருவரை த.வெ.க-வில் இணைத்ததாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது” என தெரிவித்தார்.

இது குறித்து பார் நாகராஜிடம் கேட்டபோது, “த.வெ.க-வில் நான் இணையவில்லை. பொள்ளாச்சியில் இருந்து நண்பர்கள் சென்றதால், கூட போனேன். அதைவைத்து த.வெ.க-வில் இணைந்ததாக வதந்தியை கிளப்பி விட்டார்கள். செங்கோட்டையனை நான் பார்த்தபோது, அங்கு குறைந்தது ஐநூறு பேர் இருந்திருப்பார்கள். அதில் நான் யாரென்று அவருக்கு தெரியாது. அடிதடி வழக்கு ஏற்கனவே முடிந்துவிட்டது. பாலியல் வழக்கில் எனக்கு தொடர்பில்லை என சிபிஐ-யே விடுவித்துவிட்டது. ஆனாலும் சிலர் வேண்டுமென்றே பெரிது பண்ணுகிறார்கள்” என்றார்.

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க

"திமுக நம்முடன் இணைந்து செயல்படும்; பினராயி விஜயனை என்னால் கட்டிப்பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி

கடந்த திங்கட்கிழமை (ஜூன் 8), டெல்லியில் இந்தியாக் கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாக் கூட்டணி கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலை... மேலும் பார்க்க

கொல்லூரில் முதல்வர் விஜய்: "எந்த விசேஷ கோரிக்கையும் அம்மனிடம் வைக்கவில்லை" - கோயில் கமிட்டி தலைவர்

கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரபலம் ஆகும். இக்கோயிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா பல முறை சென்று இருக்கிறார். இக்கோயிலுக்கு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வருக... மேலும் பார்க்க