செய்திகள் :

``போடி எம்எல்ஏ அலுவலகம் 15 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கிறது'' - பிரேமலதா விஜயகாந்த்

post image

’உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இரண்டு நாள் பயணமாக தேனி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த. ஆண்டிபட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது,

“தேமுதிக சந்தித்த முதல் தேர்தலில் 8.33 சதவீதமும், தொடர்ந்து வந்த பாரளுமன்ற தேர்தலில் 10.38 சதவீதம் பெற்று சாதனை படைத்த கட்சி. பல வெற்றி, தோல்விகள் பார்த்த கட்சி.

எந்த கட்சியிடமும் பணம் கொடுங்கள் என்று நின்ற கட்சியல்ல தேமுதிக. இங்கே கூடியிருக்கும் கூட்டம் கேப்டன் என்ற சொல்லுக்காக வந்த கூட்டம்.

நாங்கள் யாரையும் பணம் கொடுத்து அழைக்கவில்லை. எப்போதும் தான் உழைத்து சம்பாதித்த பணத்தை கொடுத்தவர் விஜயகாந்த். இன்றைக்கு எல்லோரும் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வருகிறார்கள்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்குமோ அவர்கள் தான் ஆட்சியமைப்பார்கள். தமிழ்நாட்டில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமையும் என்று கருத்து கணிப்புகள் சொல்கின்றன.

ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டிற்கு எல்லோரும் வரவேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் தெரிவிப்போம்.

வெற்றிலைக்கு சரியான விலை கிடைக்கவில்லை. அதற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மீனாட்சிபுரம் கால்வாயை சுத்தம் செய்து பொழுது போக்கு பூங்காவாக மாற்ற வேண்டும்.

குரங்கணியில் தொலை தொடர்பு சேவை இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். குரங்கணி மலைப்பகுதியை சுற்றுலாத்தளமாக மாற்றினால் இங்குள்ள மக்கள் பலனடைவார்கள்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

போடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 15 வருடங்களாக செயல்படாமல் இருக்கிறது, தேமுதிக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்று வரும் போது அலுவலகத்தை முழுமையாக திறந்து வைப்போம், 2026-ல் நாங்கள் வந்தால் இவற்றையெல்லாம் பேச மாட்டோம் செய்து காட்டுவோம்” என்றார்.

நெல்லை பாய்ஸ்: ``நெல்லைக்கு அரிவாளும், வன்முறையும்தான் அடையாளமா?" - திருமாவளவன் விமர்சனம்

ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நெல்லை பாய்ஸ்’. கதை திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி, எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார் கமல் ஜி. கதையின் நாயகனாக புதுமுகம் அறிவழகனும் நாயகியாக பாண... மேலும் பார்க்க

SIR: ``இவ்வளவு நாள் கோமாவில் இருந்ததா தேர்தல் ஆணையம்" - சீமானின் அடுக்கடுக்கான கேள்விகள்!

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) வாக்காளர் பட்டியல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் SIR-ஐ கடுமைய... மேலும் பார்க்க

வைகோ: ``ரூ.250 கோடி சொத்தா? என் நேர்மை உலகறிந்தது'' - மல்லை சத்யா குற்றச்சாட்டுக்கு வைகோ பதில்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான வைகோவுக்கும், மதிமுக-வின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், நேற்று (நவம்பர் 17) கால... மேலும் பார்க்க

தாய் தந்தையை இழந்து வாடும் 4 குழந்தைகள்: `இனி அவர்கள் அரசின் குழந்தைகள்!' - முதல்வர் ஸ்டாலின் பதிவு

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே நான்கு குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து தவித்து வந்தனர்.அவர்களின் தாய் 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். சமீபத்தில் அவர்களது தந்தையும் கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்... மேலும் பார்க்க

SIR: `தவெக எதிர்க்கிறதே தவிர, திமுகவைப் போல் தோல்வி பயத்தில் வேண்டாமெனவில்லை!' - ஜி.கே.வாசன்

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து, ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பிற்குப் பிறகு தமிழ் மா... மேலும் பார்க்க