செய்திகள் :

தூத்துக்குடி: `தவறுதலாக விடுவிக்கப்பட்ட சிறைக்கைதி; மறுநாளே மீண்டும் கைது!' - தவறு நடந்தது எங்கே?

post image

தூத்துக்குடி, கிருபாநகரைச் சேர்ந்தவர் ராகுல். இவர் மீது புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டது. போக்சோ வழக்கில் ராகுலை கடந்த மார்ச் 9-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர், பேரூரணியில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். ராகுல் மீது வேறு சில வழக்குகள் இருந்ததால் கடந்த மார்ச் 28-ல் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டது.

பாளை மத்திய சிறை

இந்த நிலையில், சிறையில் இருந்த ராகுல், ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த நவம்பர் 15-ம் தேதி ராகுலுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து பேரூரணி மாவட்ட சிறை அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் கிடைப்பதற்குள் பேரூரணி சிறையில் இருந்து சிறைத்துறை அதிகாரிகள் போலீஸார் விடுவித்தனர்.

இதற்கிடையே மறுநாளான கடந்த 16-ம் தேதி, ஆவணங்கள் கையில் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த பேரூரணி சிறை அதிகாரிகள், பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போதுதான், ராகுலுக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கவில்லை என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

பாளை மத்திய சிறை

இதனால், அதிர்ச்சியடைந்த போலீஸார் உடனடியாக ராகுலின் வீட்டிற்குச் சென்று கோப்பில் கையெழுத்து போட வேண்டியுள்ளதாகக் கூறி, அவரை மறுபடியும் சிறைக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறைத்துறை அதிகாரிகளிடம் ராகுல் தரப்பு வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து தொலைபேசியில் பேசிய அதிகாரி யார்? தொலைபேசி அழைப்பு உண்மைதானா?தவறு செய்த அதிகாரி யார்? என தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே உதவி ஜெயிலர் ராதாகிருஷ்ணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதலிரவில் காதலனுடன் சென்ற பெண்; மீண்டும் ஒப்படைக்க வந்தபோது உறவினர்கள் கல்வீச்சு - நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு களக்காட்டில் உள்ள ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியில் பி.எட் படித்து வந்தார். அதே கல்லூரியில் களக்காடு அருகேயுள்... மேலும் பார்க்க

திருப்பூர்: கர்நாடக `நந்தினி’ நிறுவனம் பெயரில் கலப்பட நெய் - ஒரு வருடமாக இயங்கி வந்த போலி ஆலை

கர்நாடக மாநில கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினரால் தயாரிக்கப்படும் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் `நந்தினி’ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பெயரில் கலப்பட நெய்... மேலும் பார்க்க

கடலூர்: அக்கா மகளை மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமை; தாய்மாமன் சிக்கியது எப்படி?

கடலூர் மாவட்டம், வைலாமூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்க... மேலும் பார்க்க

டிஜிட்டல் கைது: "மகனின் திருமணம் நல்லபடியாக நடக்கணும்னுதான்" - பெங்களூரு பெண்ணிடம் ரூ.32 கோடி மோசடி

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் முதியவர்களை ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. கைது செய்ய வீட்டிற்கு போலீஸாரை அனுப்புவோம் என்று பெண்களை மிர... மேலும் பார்க்க

சேலம்: திருமணம் தாண்டிய உறவு விவகாரத்தில் கொலை - 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி(60). கடந்த 2000-ம் ஆண்டு நல்லதம்பிக்கு 35 வயது இருந்தபோது, உம்பிளிக்கம்பட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: பட்டியல் சமூக மாணவரை தாக்கிய மாற்று சமூக மாணவர்கள் - அரசு விடுதியில் அரங்கேறிய அவலம்

ராமநாதபுரம் அம்மா பூங்கா பகுதியில் மாணவர்களுக்கான அரசு சமூக விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு சமுதாயத்தினை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகி... மேலும் பார்க்க