செய்திகள் :

கடலூர்: அக்கா மகளை மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமை; தாய்மாமன் சிக்கியது எப்படி?

post image

கடலூர் மாவட்டம், வைலாமூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் வைலாமூர் கிராமத்தில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் புதுப்பெண்ணுக்குத் திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், அவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அவரது கணவர். அப்போது புதுப்பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர், அவர் 8 மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தக் கணவர், அது குறித்து பெண்ணின் பெற்றோர் வீட்டிற்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து வைலாமூருக்கு வந்த பெண்ணின் பெற்றோர், கர்ப்பத்துக்கான காரணம் குறித்து கேட்டிருக்கின்றனர்.

அப்போது தன் அம்மாவின் உடன்பிறந்த தம்பி லிங்கமுத்து, அடிக்கடி தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து புதுப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாய்மாமன் லிங்கமுத்து மீது அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.

விசாரணை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, ``பெண்ணின் தாய்மாமனான லிங்கமுத்துவுக்கு வலிப்பு நோய் இருந்திருக்கிறது. அதனால் தன்னுடைய அக்காவின் வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்திருக்கிறார்.

அப்போது சகோதரியின் மகள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். வலிப்பினால் ஏற்பட்ட விபத்து என்று சொல்லி அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்திய அவர், அதையே காரணம் காட்டி மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

கர்ப்பம்
கர்ப்பம்

இந்த நிலையில்தான் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் செய்ய பெற்றோர் முடிவெடுத்திருக்கின்றனர். தாய்மாமன் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காக, அந்தப் பெண்ணும் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகுதான் அந்தப் பெண் கர்ப்பமாக இருந்த விவகாரம் தெரிய வந்திருக்கிறது.

அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் லிங்கமுத்து மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில், லிங்கமுத்துவுக்கு முதுகுத்தண்டில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இரண்டு கால்களும் செயல்படாத நிலையில் மருத்துவமனையில் இருப்பதால் கைது செய்யப்படவில்லை” என்றனர்.

டிஜிட்டல் கைது: "மகனின் திருமணம் நல்லபடியாக நடக்கணும்னுதான்" - பெங்களூரு பெண்ணிடம் ரூ.32 கோடி மோசடி

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் முதியவர்களை ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. கைது செய்ய வீட்டிற்கு போலீஸாரை அனுப்புவோம் என்று பெண்களை மிர... மேலும் பார்க்க

சேலம்: திருமணம் தாண்டிய உறவு விவகாரத்தில் கொலை - 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி(60). கடந்த 2000-ம் ஆண்டு நல்லதம்பிக்கு 35 வயது இருந்தபோது, உம்பிளிக்கம்பட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: பட்டியல் சமூக மாணவரை தாக்கிய மாற்று சமூக மாணவர்கள் - அரசு விடுதியில் அரங்கேறிய அவலம்

ராமநாதபுரம் அம்மா பூங்கா பகுதியில் மாணவர்களுக்கான அரசு சமூக விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு சமுதாயத்தினை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகி... மேலும் பார்க்க

``டெல்லியில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல்'' - NIA விசாரணை என்ன சொல்கிறது?

டெல்லியில் கடந்த வாரம் செங்கோட்டை அருகில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பில், வெடிகுண்டு இருந்த காரை ஓட்டி வந்த டாக்டர் உமர் உல் நப... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ``திருமணம் நடைபெற 16 நாள் குழந்தையை பலியிட்ட 4 பெண்கள்'' - பெற்றோர்கள் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் பூனம்ராம். இவரது மனைவி சுமன். சுமனுக்கு அங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருந்தது.ஆனால், பூனத்தின் சகோதரிகள் ரமேஷ்வரி, மம்தா, கீதா, மஞ்சு... மேலும் பார்க்க

காங்கேயம்: சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை; போலி வார்டன் போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்குப் பின்புறம் தமிழக அரசின்... மேலும் பார்க்க