செய்திகள் :

``டெல்லியில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல்'' - NIA விசாரணை என்ன சொல்கிறது?

post image

டெல்லியில் கடந்த வாரம் செங்கோட்டை அருகில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பில், வெடிகுண்டு இருந்த காரை ஓட்டி வந்த டாக்டர் உமர் உல் நபியும் குண்டு வெடிப்பில் இறந்தார்.

இக்குண்டு வெடிப்பு தற்கொலைப்படைத் தாக்குதலா அல்லது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவமா என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வந்தது. வெடிகுண்டு நிரப்பிய காரை எடுத்து செல்லும்போது பயத்தில் வெடிகுண்டை வெடிக்க செய்திருக்கலாம் என்று ஆரம்பத்தில் நம்பப்பட்டது. தற்போது, இது ஒரு தற்கொலைப்படைத் தாக்குதல் என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட அமீர்
கைது செய்யப்பட்ட அமீர்

உமரின் டி.என்.ஏ மாதிரி, அவரது தாயாரின் டி.என்.ஏ மாதிரியுடன் ஒத்துப்போவது நேற்று உறுதி செய்யப்பட்டது. குண்டு வெடித்த காரில் இருந்து உமரின் உடல் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், டாக்டர் உமருக்கு உதவி செய்ததாக காஷ்மீரை சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்பவரை தேசிய புலனாய்வு முகமை டெல்லியில் கைது செய்துள்ளது.

தற்கொலைப்படை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை வாங்க உதவி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஹரியானாவில் உள்ள அல் பாலா மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றிய டாக்டர் உமர், அதே கல்லூரியில் பணியாற்றிய டாக்டர் முஜாமில் ஷகீல் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த டாக்டர் அடில் ஆகியோருடன் சேர்ந்து இக்குண்டு வெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டியிருந்தனர்.

டெல்லி கார் குண்டு வெடிப்பு
டெல்லி கார் குண்டு வெடிப்பு

இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை, டெல்லி போலீஸ், ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் இணைந்து விசாரித்து வருகின்றனர். வெடிகுண்டு இருந்த கார் எங்கெல்லாம் பயணம் செய்தது என்பதை ஆய்வு செய்ய 1,300 கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் இந்தியா கேட் உட்பட முக்கிய இடங்களில் அக்கார் தென்பட்டுள்ளது, ஆனால் எங்கேயும் நிற்காமல் சென்றுள்ளது. தேசிய புலனாய்வு முகமை, டாக்டர் உமருக்கு சொந்தமான மற்றொரு காரையும் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகிறது.

டாக்டர் முஜாமில் ஹரியானாவில் மறைத்து வைத்திருந்த வெடிமருந்துகளை ஸ்ரீநகர் போலீஸ் நிலையத்தில் சேமித்து வைத்திருந்தனர். அந்த வெடிமருந்துகள் வெடித்து சிதறியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டெல்லியில் மேலும் 6 இடத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்ய ரூ. 20 லட்சம் நிதி திரட்டி இருந்தனர். அதில் 3 லட்சம் ரூபாய்க்கு அமோனியம் நைட்ரேட் வாங்கப்பட்டு இருந்தது.

சேலம்: திருமணம் தாண்டிய உறவு விவகாரத்தில் கொலை - 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி(60). கடந்த 2000-ம் ஆண்டு நல்லதம்பிக்கு 35 வயது இருந்தபோது, உம்பிளிக்கம்பட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: பட்டியல் சமூக மாணவரை தாக்கிய மாற்று சமூக மாணவர்கள் - அரசு விடுதியில் அரங்கேறிய அவலம்

ராமநாதபுரம் அம்மா பூங்கா பகுதியில் மாணவர்களுக்கான அரசு சமூக விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு சமுதாயத்தினை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ``திருமணம் நடைபெற 16 நாள் குழந்தையை பலியிட்ட 4 பெண்கள்'' - பெற்றோர்கள் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் பூனம்ராம். இவரது மனைவி சுமன். சுமனுக்கு அங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருந்தது.ஆனால், பூனத்தின் சகோதரிகள் ரமேஷ்வரி, மம்தா, கீதா, மஞ்சு... மேலும் பார்க்க

காங்கேயம்: சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை; போலி வார்டன் போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்குப் பின்புறம் தமிழக அரசின்... மேலும் பார்க்க

`10 நிமிடம் தாமதம்' - ஆசிரியர் கொடுத்த `100 முறை சிட்-அப்' தண்டனையால் உயிரிழந்த மாணவி

இப்போது பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் வேறு வழிகளில் தண்டனை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். மும்பை வசாயில் பகுதியில் அது போன்று தண்டனை பெற்ற ஒர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் கொலை வழக்கு: `போலீஸாரின் கூட்டுச்சதி பிரிவையும் சேர்க்க வேண்டும்’ - சிபிஐ தரப்பு பதில்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 22.06.2020-ல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர... மேலும் பார்க்க