செய்திகள் :

ராஜஸ்தான்: ``திருமணம் நடைபெற 16 நாள் குழந்தையை பலியிட்ட 4 பெண்கள்'' - பெற்றோர்கள் அதிர்ச்சி

post image

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் பூனம்ராம். இவரது மனைவி சுமன். சுமனுக்கு அங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருந்தது.

ஆனால், பூனத்தின் சகோதரிகள் ரமேஷ்வரி, மம்தா, கீதா, மஞ்சு ஆகியோர் சேர்ந்து 16 நாட்களேயான குழந்தையை காலால் மிதித்து கொலை செய்துள்ளனர்.

கைதான பெண்

பின்னர் அக்குழந்தையின் உடலை ஒரு பெண் தனது மடியில் வைத்திருக்க, மற்ற மூன்று பெண்கள் சுற்றி அமர்ந்து ஏதோ மந்திரம் உச்சரித்தனர். அதோடு குழந்தையின் உடலில் மஞ்சள் பொடியை தூவினர். இக்காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.

16 நாட்களேயான குழந்தையை பலியிட்டால் தங்களுக்கு திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கையில் இக்காரியத்தை செய்ததாக, குழந்தையின் தந்தை பூனம்ராம் குற்றம் சாட்டியுள்ளார்.

பூனம்ராம் மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றிருந்த நேரத்தில், நான்கு பெண்களும் வந்து இக்கொடிய காரியத்தை செய்துள்ளனர். இது குறித்து குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து நான்கு பெண்களையும் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பூனம்ராம் கூறுகையில், "நான்கு பெண்களுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர்கள் வீட்டில் மொத்தம் ஏழு பெண்கள். இதில் இருவருக்குமே மட்டுமே திருமணம் நடந்திருக்கிறது. அதிலும், ஒரு பெண் திருமணமாகி கணவருடன் சண்டையிட்டுக்கொண்டு பெற்றோர் வீட்டில் வசிக்கிறார்.

எனது மனைவி மட்டுமே கணவன் வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். இதனால் மற்ற திருமணம் ஆகாத பெண்கள் எங்களிடம் பொறாமை கொண்டு இக்காரியத்தை செய்துள்ளனர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" என்றார்.

குழந்தையின் தாத்தா ராஜுராமும், தங்களது பேரனை பொறாமையால் கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

காங்கேயம்: சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை; போலி வார்டன் போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்குப் பின்புறம் தமிழக அரசின்... மேலும் பார்க்க

`10 நிமிடம் தாமதம்' - ஆசிரியர் கொடுத்த `100 முறை சிட்-அப்' தண்டனையால் உயிரிழந்த மாணவி

இப்போது பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் வேறு வழிகளில் தண்டனை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். மும்பை வசாயில் பகுதியில் அது போன்று தண்டனை பெற்ற ஒர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் கொலை வழக்கு: `போலீஸாரின் கூட்டுச்சதி பிரிவையும் சேர்க்க வேண்டும்’ - சிபிஐ தரப்பு பதில்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 22.06.2020-ல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர... மேலும் பார்க்க

செல்போன் செயலி மூலம் பழக்கம்; வீடியோவை வைத்து இளம்பெண்ணை மிரட்டிய நபர் - கைதுசெய்த போலீஸ்!

சென்னையைச் சேர்ந்த 21 வயதாகும் இளம்பெண்ணுக்கு செல்போன் செயலி ஒன்று மூலம் லிபின்ராஜ் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பின்னர் இருவரும் நட்பாக பழகி வந்தனர். ஒருகட்டத்தில் இளம்பெண்ணை லிபின்ராஜ் காதலிப்பதா... மேலும் பார்க்க

பரமக்குடி: காரில் வந்து ஆடு திருட்டு; ஓட்டம் பிடித்த தம்பதியை விரட்டி பிடித்த போலீஸார்!

பரமக்குடி எமனேஸ்வரம் ஈஸ்வரன் கோயில் மேலத்தெருவை சேர்ந்தவர் சரசு. இவர் நேற்று முன் தினம் காலை அப்பகுதியை சேர்ந்த சிலருடன் அம்மன் கோயில் மற்றும் மாமாங்க தெப்பகுளம் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிர... மேலும் பார்க்க

நர்சிங் மாணவியுடன் வந்த காதலன், வீட்டில் அடைக்கலம் கொடுத்த நண்பனையே கொன்ற கொடுமை - என்ன நடந்தது?

கும்பகோணம் அருகே உள்ள மூப்பக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (25) தப்பாட்ட கலைஞர். இவருக்கு சர்மிளா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவருடைய நண்பர் அசூர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக்(19), அறுவடை... மேலும் பார்க்க