செய்திகள் :

TVK: ``காவல்துறையால் தடுத்து நிறுத்தப்படும் தவெக தொண்டர்கள்?'' - குற்றஞ்சாட்டும் மா.செக்கள்!

post image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தவெக சார்பில் சிவானந்தம் சாலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு செல்ல தவெக தொண்டர்களை அனுமதிக்க மறுப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.

தவெக ஆர்ப்பாட்டம்
தவெக ஆர்ப்பாட்டம்

SIR க்கு கண்டனம் தெரிவித்து தவெக தலைவர் விஜய் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

சென்னை சிவானந்தம் சாலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வரும் தொண்டர்களை காவல்துறை தடுத்து நிறுத்துவதாக மாவட்டச் செயலாளர்கள் புகார் கூறுகின்றனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த மாவட்டச் செயலாளர்கள் அப்புனு, தாமு, சரவணன், திலீப் ஆகியோர் பேசுகையில்,

'பாஜகவுக்கு ஆதரவாக திமுக செயல்படுகிறது. திமுக SIR யை எதிர்ப்பதாக சொல்கிறது.

நாங்களும் SIR யை எதிர்த்துதானே போராடுகிறோம். பிறகு ஏன் இவ்வளவு இடைஞ்சல்கள்?

தவெக மா.செக்கள்
தவெக மா.செக்கள்

நிகழ்ச்சியை நடத்துகிற மா.செக்களை உள்ளே விடவே அத்தனை கட்டுப்பாடுகளையும் இடைஞ்சல்களையும் கொடுக்கிறார்கள்.பீச் ரோட்டில் வாகனங்களை நிறுத்த விட்டு 3 கி.மீ சுற்றி நடக்கவிடுகிறார்கள்.

அப்படியே நடந்து வந்தாலும் சிவானந்தம் சாலைக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள். தவெக தொண்டர்களென தெரிந்தாலே தடுத்து நிறுத்துகிறார்கள்.

நேற்று இரவு வரை கமிஷனர் அலுவலகத்தில் பேசுகையில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம் என உறுதியளித்தனர். இப்போது ஏன் இப்படி தடுக்கிறார்கள்?' என்றனர்.

மாவட்டச் செயலாளர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடவே, பின்னர் தொண்டர்கள் சிவானந்தம் சாலைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: `மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம்' - ஆட்சியர் எச்சரிக்கை

வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், புதுச்சேரிக்கு இன்று `ஆரஞ்ச் அலர்ட்’ விடப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக புதுச்சேரி அரசின் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான கு... மேலும் பார்க்க

காரைக்குடி: ``ரீல்ஸ் முக்கால்வாசி பொய்தான், கல்விதான் ரியல்'' - பள்ளி விழாவில் உதயநிதி அறிவுரை

சிவகங்கை மாவட்டத்திற்கு இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளி வளாகத்தில் நடந்த மாணவர்களுக்கு சைக்கிள் வழங்குதல், சிறந்த பள்ளிகளு... மேலும் பார்க்க

``பீகார் தேர்தல்; பாஜக-தேர்தல் ஆணையம் கூட்டணிக்கு கிடைத்த வெற்றியா?'' - திருமாவளவன் விமர்சனம்

"பாஜக கூட்டணி வெற்றி பெற்ற 202 தொகுதிகளில் 128 தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையை விட வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது." என்று பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து குற்றம்சா... மேலும் பார்க்க

``நாட்டுக்கும், ஊருக்கும் காங்கிரஸ் ஆகாது- ராஜேந்திர பாலாஜி

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர , ஒன்றிய, பேரூர் கழகங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், விருத... மேலும் பார்க்க

குடும்பத்தையும், அரசியலையும் துறக்கிறேன்: லாலு பிரசாத்திற்கு சிறுநீரகம் தானம் செய்த மகள் அறிவிப்பு

நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இத்தோல்வி முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. கூட்டணியை இறுதி செய்வதில... மேலும் பார்க்க

பர்கூர் கிளை நூலகம்: ``ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வீணாகும் நிலை'' - வாசகர்கள் வேதனை

“அறிவுதான் அழியாத செல்வம்" என்பார்கள். அந்த அறிவைப் புகட்டும் கோயில்கள்தான் நூலகங்கள். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் செயல்படும் கிளை நூலகத்தின் இன்றைய நிலைய... மேலும் பார்க்க