செய்திகள் :

``தொகுதிக்கு 500 வாக்குகள் காலியானால் என்ன நடக்கும்?'' - SIR குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி

post image

2021 சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் பெற்று அமைச்சரானார் ஐ. பெரியசாமி. திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கிறார்

கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ. பெரியசாமி சென்னை மற்றும் திண்டுக்கல் வீட்டிலும், அவரது மகன் பழநி எம்.எல்.ஏ செந்தில்குமார் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

SIR - சிறப்பு தீவிர திருத்தம்
SIR - சிறப்பு தீவிர திருத்தம்

இந்நிலையில் நேற்று திண்டுக்கல் தி.மு.க. கட்சி நிகழ்ச்சி ஒன்றில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் குறித்துப் பேசியிருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி, "பாஜக தி.மு.க. வாக்குகள் அதிகமாக இருக்கும் பகுதிகளைக் குறிவைத்து, 'SIR' மூலம் தி.மு.க. விற்கு விழும் வாக்குகளை நீக்கும் சதிச்செயலை செய்யத் திட்டமிட்டிருக்கிறது.

ஒவ்வொரு பூத்திற்கும் 10 வாக்குகளை நீக்கினால்கூட தொகுதிக்கு 500 வாக்குகள் காலியாகிவிடும். ஒரே ஒரு வாக்கு ஆட்சியையே மாற்றிவிடும். அப்போ தொகுதிக்கு 500 வாக்குகள் காலியானால் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள். திமுகவினர் கவனமாக செயல்பட்டு நம்முடைய வாக்காளர்களை இழந்துவிடாமல் எல்லோரையும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வைக்க வேண்டும்.

அமைச்சர் ஐ.பெரியசாமி

இப்படி அவசர அவசரமாக இந்த எஸ்.ஐ.ஆர் எடுத்து 2026 சட்டமன்ற தேர்தலில் சதி செய்யலாம் என்று பார்க்கிறார்கள். நாங்கள் எஸ்.ஐ.ஆர் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவசர அவசரமாக நடக்கும் இந்த எஸ்.ஐ.ஆர் வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். தேர்தல் முடிந்தபிறகு ஒரு ஆண்டுகூட பொறுமையாக இந்த எஸ்.ஐ.ஆரை நடத்துங்கள். ஆனால், ஏன் இப்படி அவசர அவசரமாக நடத்துகிறீர்கள் என்பதுதான் எங்களின் எதிர்ப்புக் காரணம்" என்று பேசியிருக்கிறார்.

கோவை: 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா - எப்படி இருக்கு? | Photo Album

கோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்கா... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி: புதர் மண்டி, சிதிலமடைந்து காட்சியளிக்கும் ஏரிப் பூங்கா - புனரமைப்பு செய்யப்படுமா?!

சேலம் மாவட்டம், மூன்று‌ ரோடு அருகில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு பள்ளப்பட்டி ஏரிப் பூங்கா தற்போது பழுதடைந்து புனரமைப்பு பணிகளை எதிர்நோக்கி காத்திருக்கிறது.பள்ளப்பட்டி ஏரியை... மேலும் பார்க்க

"தூய்மைப் பணியாளர்களுக்கான தேவையை திராவிட மாடல் அரசு படிப்படியாக செய்யும்"- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.சென்னை கலைவாணர் அரங்கத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணிய... மேலும் பார்க்க

வளர்ப்பு நாய் கடித்ததில் ஈரோடு இளைஞர் உயிரிழப்பு - ரேபிஸ் பரவ காரணம் என்ன?

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே உள்ள கனகபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் ரமேஷ். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ரமேஷை கடந்த 10 நாள்களுக்கு முன் அவர் வீட்டில் வளர... மேலும் பார்க்க

தெலங்கானா இடைத்தேர்தல்: டெபாசிட்டை பறிகொடுத்த பாஜக - காங்கிரஸ் அபார வெற்றி!

தெலங்கானா மாநிலம் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ மகந்தி கோபிநாத் மாரடைப்பால் இறந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.இந்த இடைத்தேர்தலுக்காக தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி, வி. நவீன் ... மேலும் பார்க்க

"பணம், பவர், சாதி; நடிகர்கள் அரசியலில் செய்யும் தவறு என்ன?" - விஜய்க்கு அறிவுறை சொன்ன ரோஜா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. 1999-ஆம் ஆண்டு, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து உள்ளாட்சி அரசியலில் களப்பணிகள், பிரசாரப் பணிகளைச் ச... மேலும் பார்க்க