செய்திகள் :

வளர்ப்பு நாய் கடித்ததில் ஈரோடு இளைஞர் உயிரிழப்பு - ரேபிஸ் பரவ காரணம் என்ன?

post image

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே உள்ள கனகபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் ரமேஷ். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ரமேஷை கடந்த 10 நாள்களுக்கு முன் அவர் வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்துள்ளது. ஆனால், அதற்கு உரிய சிகிச்சை எடுக்காமல் ரமேஷ் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன் ரமேஷுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரமேஷ் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

ஈரோடு இளைஞர் ரமேஷ்
ஈரோடு இளைஞர் ரமேஷ்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், "ரமேஷ் வீட்டில் வளர்த்து வந்த நாய் அவரை கடந்த 10 நாள்களுக்கு முன்பு கடித்துள்ளது. வளர்ப்பு நாய்தான் என்று அதற்கான சிகிச்சையை எடுக்காமல் ரமேஷ் அலட்சியமாக இருந்துள்ளார்.

ஆனால், அந்த வளர்ப்பு நாயை கடந்த சில நாள்களுக்கு முன்பு தெரு நாய்கள் கடித்துள்ளன. அதில், அந்த வளர்ப்பு நாய்க்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அந்த வளர்ப்பு நாய் கடித்ததில் ரமேஷுக்கும் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதை அவர் சரியாக கவனிக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நாய்கள் கடித்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

தெலங்கானா இடைத்தேர்தல்: டெபாசிட்டை பறிகொடுத்த பாஜக - காங்கிரஸ் அபார வெற்றி!

தெலங்கானா மாநிலம் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ மகந்தி கோபிநாத் மாரடைப்பால் இறந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.இந்த இடைத்தேர்தலுக்காக தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி, வி. நவீன் ... மேலும் பார்க்க

"பணம், பவர், சாதி; நடிகர்கள் அரசியலில் செய்யும் தவறு என்ன?" - விஜய்க்கு அறிவுறை சொன்ன ரோஜா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. 1999-ஆம் ஆண்டு, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து உள்ளாட்சி அரசியலில் களப்பணிகள், பிரசாரப் பணிகளைச் ச... மேலும் பார்க்க

"ஹைதராபாத் சாலைகளுக்கு 'Google, Meta, TCS' என பெயர் வைப்போம்" - தெலங்கானா CM ரேவந்த் சொல்வதென்ன?

உலகளாவிய பெருநிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதிலும், தொழில்நுட்பத் துறையில் பெரிய அளவில் வளர்ச்சியைக் கொண்டுவரவும் ஆந்திரா, தெலங்கனா மாநிலங்கள் போட்டிபோட்டு வருகின்றன. சமீபத்தில் இந்தியாவின் தொழில்நுட்... மேலும் பார்க்க

மாமல்லபுரம்: விழுந்து நொறுங்கிய விமானப்படை பயிற்சி விமானம் - பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானிகள்

மாமல்லபுரம் அருகே திருப்போரூரில் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியிருக்கிறது.விமானத்தில் இருந்த மூவர் ஆபத்தை உணர்ந்து விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குத... மேலும் பார்க்க

ஆ.ராசா தலைமையிலான SIR கூட்டம்; புறக்கணித்த சேகர்பாபு; புகைச்சலில் அறிவாலயம்

2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனையின்போது தி.மு.க எம்.பி. ஆ.ராசாவுக்கும் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்ட நிலையில், ஆ.ராசா தலைமையிலான SIR கூட்டத்தை அமைச்சர் சேகர்ப... மேலும் பார்க்க