செய்திகள் :

"சுந்தர்.சி விலகியது விபத்தல்ல; ‘அண்ணாமலை’ படத்தின்போதும் இயக்குநர் ஒருவர் விலகினார்" - வைரமுத்து

post image

ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173-வது படத்தை சுந்தர்.சி. இயக்குவதாகவும், கமல்ஹாசன் அப்படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது, கோலிவுட் வட்டாரத்தையே இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் சுந்தர் சி 'தலைவர் 173' படத்திலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்.

கமலும் இதுகுறித்து, "என்னுடைய நட்சத்திரத்திற்குப் பிடித்தக் கதையைத்தான் நான் எடுக்க முடியும், அவருக்குப் (ரஜினி) பிடிக்கும்வரை நாங்க கதையைக் கேட்டுக் கிட்டே இருப்போம். நல்ல கதை கிடைத்தவுடன் நிச்சயம் என்னுடைய தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் வெளியாகும்" என்றார்.

தலைவர் 173 படம் குறித்த அப்டேட்
ரஜினி, கமல், சுந்தர் சி

இருப்பினும் சுந்தர். சி 'தலைவர் 173' படத்திலிருந்து விலகியது கோலிவுட்டில் பேசுபொருளாகியிருக்கிறது.

இதுகுறித்து பாடலாசிரியர் வைரமுத்து,

"சூப்பர் ஸ்டாரும்

உலக நாயகனும்

இந்தியக் கலையுலகின்

இருபெரும் ஆளுமைகள்

அவர்கள் இணைந்து

இயங்குவது என்பது

அட்லாண்டிக்கும் பசிபிக்கும்

ஆரத் தழுவிக்கொள்வது போன்றது

அவர்கள் தொட்டது

துலங்கவே செய்யும்

இயக்குநர் சுந்தர்.சி விலகியது

ஒரு விபத்தல்ல; திருப்பம்

அதில் யாரும்

கள்ளச் சந்தோஷம்

அடைய வேண்டாம்

வளைந்து செல்லும் நதி

ஒரு திருப்பத்திற்குப் பிறகு

வேகமெடுக்கும் என்பதே விதி

மாற்றம் ஒன்றே மாறாதது

‘அண்ணாமலை’ படத்தில்

வந்தேண்டா பால்காரன் பாடல்

எழுதுகிற வரைக்கும்

இயக்குநர் வசந்த் உடனிருந்தார்

ரஜினி, கமல்

ஏதோ ஒரு சூழலில்

அவர் விலக நேர்ந்தது

48 மணி நேரத்திற்குள்

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்

தன் இன்னொரு சீடனை

இயக்குநர் ஆக்கினார்;

சுரேஷ் கிருஷ்ணா

அது

ரஜினி வரலாற்றில்

தடம்பதித்த படமாயிற்று

இந்த மாற்றமும்

அப்படியொரு வெற்றியை எட்டலாம்

குழப்பம் கொடிகட்டும்

இந்தப் பொழுதில்

இருபெரும் கலைஞர்களுக்கும்

நாம் ஊக்கமும் உற்சாகமும்

ஊட்ட வேண்டும்

ஏனென்றால்

அரைநூற்றாண்டுக்கு மேல்

மக்களுக்கு மகிழ்ச்சிகொடுத்த

கலைஞர்கள் அவர்கள்

தொடருங்கள் தோழர்களே!

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?" என்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சுந்தர் சி 'தலைவர் 173' படத்திலிருந்து விலகியது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் வைரமுத்து.

Kaantha: "என் மூலமா தாத்தா உயிரோட இருக்கார்" - 'காந்தா' நினைவுகள் பகிர்கிறார் நாகேஷின் பேரன் பிஜேஷ்

துல்கர் சல்மானின் 'காந்தா' திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த சினிமாக் கதையில் ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்யஶ்ரீ போர்ஸ் ஆகியோர் நட... மேலும் பார்க்க

"வி.சேகர் சார் ஒரு போராளி; அவர் இல்லைன்னா இயக்குநர் சங்கம் இல்ல" - இயக்குநர் சேரன்

'வரவு எட்டணா செலவு பத்தணா', 'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட பல குடும்பப் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் வி.சேகர். இவர் உடல்நலக்குறைவால் நேற்று (நவ.14)காலமானார். சினிமா பிரபலங்கள் பலரும் அ... மேலும் பார்க்க

̀̀̀"கமல் - ரஜினி கூட்டணி; 'தலைவர் 173' லிருந்து சுந்தர் சி விலகியது ஏன்?" - கமல் சொன்ன பதில்!

ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173-வது படத்தை சுந்தர்.சி. இயக்குவதாகவும், கமல்ஹாசன் அப்படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது, கோலிவுட் வட்டாரத்தையே இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.ரஜினியின் 'அரு... மேலும் பார்க்க

"என்டர்டெயினர் படமாக இருந்தா கருத்து காணாமல் போய்விடும்"- 'ஆண் பாவம் பொல்லாதது' குறித்து ரியோ ராஜ்

அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆண் பாவம் பொல்லாதது' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர் ஜே விக்னேஷ் காந்த் , ஷீலா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருத... மேலும் பார்க்க

"கும்கி 1-க்கும், கும்கி 2-க்கும் எந்த தொடர்பும் இல்ல; 100% நட்பு, 0% லவ்"- பிரபு சாலமன்

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம் 'கும்கி'. தற்போது அதன் இரண்டாம் பாகமான 'கும்கி 2' நேற்று(நவ.14) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்தப் பட... மேலும் பார்க்க

Friends: `அந்த கடிகாரம் உடையும் காட்சி ஷூட் மறக்க முடியாது; ஏன்னா.!’ - `கிச்சனமூர்த்தி' ரமேஷ் கண்ணா

மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் அடுத்த வாரம் ரீ ரிலீஸாகிறது. விஜய் - சூர்யா காம்போ, ஆக்‌ஷன், வடிவேலுவின் காமெடி, நெகிழ... மேலும் பார்க்க