செய்திகள் :

``நாட்டுக்கும், ஊருக்கும் காங்கிரஸ் ஆகாது- ராஜேந்திர பாலாஜி

post image

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர , ஒன்றிய, பேரூர் கழகங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி கொண்டு சிறப்புரையாற்றினார்.

ராஜேந்திர பாலாஜி

அப்போது பேசிய அவர், “பீகாரில் NDA கூட்டணி மிகப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விடுங்கள் நாட்டுக்கும் ஊருக்கும் காங்கிரஸ் கட்சி ஆகாது என தெரிவித்தார். இன்றைக்கு இருப்பது காந்தி ஆரம்பித்த காங்கிரஸ் கிடையாது. நேரு ஆரம்பித்து உழைத்த காங்கிரஸ் கிடையாது.

நேதாஜி இருந்த காங்கிரஸ் கிடையாது. இன்றைக்கு இருக்கின்ற காங்கிரஸ் கட்சி நாட்டை காட்டிக்கொடுக்கிறது. தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. நாட்டில் என்னமோ நடக்கிறது ராகுல் காந்தி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார். நாட்டைப் பற்றிய கவலை எல்லாம் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு கிடையாது. வீணாப்போன காங்கிரஸ் கட்சியை தி.மு.க தான் தூக்கி பிடித்திக் கொண்டிருக்கிறது. பீகார் தேர்தல் முடிவுதான் தமிழகத்தில் நிலவும். 220-ற்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி வென்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அமர்வார். ஆலமரத்திற்கு எப்படி வேர் முக்கியமோ அதுபோல அ.தி.மு.க- விற்கு வாக்குச்சாவடி முகவர்கள் முக்கியம்.

ராஜேந்திர பாலாஜி

தி.மு.க தோல்வி முகத்தோடு கோட்டையை விட்டு வெளியேறும் காலம் வந்துவிட்டது. அ.தி.மு.க வெற்றி முகத்தோடு கோட்டையை நோக்கிச் செல்லும் காலம் வந்து கொண்டிருக்கிறது. தி.மு.க கூட்டணிக்குள் பல பிளவுகள் உள்ளன. அந்தக் கூட்டணியில் உள்ள 10 கட்சியும் பல கருத்துக்களைக் கொண்டுள்ளது. எங்களுக்கு ஆட்சியில் பங்கு கொடுங்கள் என பல பிரிவினை ஓடிக் கொண்டிருக்கிறது. தி.மு.க கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போட தயாராக இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க கூட்டணி வலுவாகிக் கொண்டிருக்கிறது.

காரைக்குடி: ``ரீல்ஸ் முக்கால்வாசி பொய்தான், கல்விதான் ரியல்'' - பள்ளி விழாவில் உதயநிதி அறிவுரை

சிவகங்கை மாவட்டத்திற்கு இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளி வளாகத்தில் நடந்த மாணவர்களுக்கு சைக்கிள் வழங்குதல், சிறந்த பள்ளிகளு... மேலும் பார்க்க

``பீகார் தேர்தல்; பாஜக-தேர்தல் ஆணையம் கூட்டணிக்கு கிடைத்த வெற்றியா?'' - திருமாவளவன் விமர்சனம்

"பாஜக கூட்டணி வெற்றி பெற்ற 202 தொகுதிகளில் 128 தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையை விட வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது." என்று பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து குற்றம்சா... மேலும் பார்க்க

குடும்பத்தையும், அரசியலையும் துறக்கிறேன்: லாலு பிரசாத்திற்கு சிறுநீரகம் தானம் செய்த மகள் அறிவிப்பு

நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இத்தோல்வி முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. கூட்டணியை இறுதி செய்வதில... மேலும் பார்க்க

பர்கூர் கிளை நூலகம்: ``ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வீணாகும் நிலை'' - வாசகர்கள் வேதனை

“அறிவுதான் அழியாத செல்வம்" என்பார்கள். அந்த அறிவைப் புகட்டும் கோயில்கள்தான் நூலகங்கள். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் செயல்படும் கிளை நூலகத்தின் இன்றைய நிலைய... மேலும் பார்க்க

பீகார்: `பெண்களுக்கு ரூ.10,000' - நிதிஷ் குமாருக்கு ஆதரவாக களமிறங்கிய பெண்கள் படை; சாதித்தது எப்படி?

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பெரும்பாலான அரசியல் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 243 தொகுதியில் என்.டி.ஏ கூட்டணி மட்டுமே 202 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணம்... மேலும் பார்க்க

``திமுக தமிழகத்தில் ஆளும் கட்சி, இந்தியா முழுதும் சிறந்த எதிர்க்கட்சி'' - உதயநிதி ஸ்டாலின்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதிய பேரூராட்சி கட்டிடத்தை திறந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் மாதவன் ஆகியோரின் சிலைகளை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில்... மேலும் பார்க்க