செய்திகள் :

``பீகார் தேர்தல்; பாஜக-தேர்தல் ஆணையம் கூட்டணிக்கு கிடைத்த வெற்றியா?'' - திருமாவளவன் விமர்சனம்

post image

"பாஜக கூட்டணி வெற்றி பெற்ற 202 தொகுதிகளில் 128 தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையை விட வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது." என்று பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து குற்றம்சாட்டியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்.

பிரதமர் மோடி - நிதிஷ் குமார்
பிரதமர் மோடி - நிதிஷ் குமார்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றன. நேர்மையாக நடந்த தேர்தல்தானா என்கிற ஐயத்தை எழுப்புகிறது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பலத்தால் பெற்ற வெற்றியா? அல்லது அக்கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையிலான கூட்டணி பலத்தால் கிடைத்த வெற்றியா? என்கிற கேள்வியை எழுப்புவதாக உள்ளது.

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட எஸ்.ஐ.ஆர் என்னும் நடவடிக்கைதான் இத்தகு ஐயங்களை எழுப்புவதற்கு அடிப்படையாக உள்ளது.

பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக வாக்களிக்கக்கூடிய வாக்காளர்கள் கணிசமான அளவில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது, பீகாரில் தேர்தலுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர் எனப்படும் 'சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு' நடவடிக்கையின்போது தகுதி வாய்ந்த சுமார் 65 இலட்சம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படாமல் நீக்கப்பட்டனர்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

எஸ்.ஐ.ஆர்
எஸ்.ஐ.ஆர்

ஆனால், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. எனவே, அது தொடர்ந்து நடைபெற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது, அதன்பின்னும், சுமார் 47 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின. ஆயினும், அதனைத் தேர்தல் ஆணையம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்குப் பிறகு தேர்தல் நடைபெற்று வெளிவந்துள்ள முடிவுகள், எஸ்.ஐ.ஆர். மூலம் பெருமளவில் வாக்குகள் நீக்கப்பட்டதால்தான் பாஜக கூட்டணி இவ்வளவு இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது என்பதை உறுதிபட உணர்த்துகின்றன.

பாஜக கூட்டணி வெற்றி பெற்ற 202 தொகுதிகளில் 128 தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையை விட வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது.

அவ்வாக்குகள் நீக்கப்படாதிருந்தால் அத்தொகுதிகளில் 'காங்கிரஸ் -ஆர்ஜேடி' கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் என்பது உறுதியாகிறது.

இந்நிலையில், பீகாரில் செய்ததைப்போலவே தங்களுக்கு எதிரான இலட்சக்கணக்கான வாக்குகளை நீக்கிவிட்டுத் தங்களுக்கு ஏற்றபடி தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கு தமிழ்நாட்டிலும் பாஜக முயற்சிக்கலாம்.

பாஜகவின் இத்தகைய வாக்குத் திருட்டைத் தடுப்பதற்குத் தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

திருமாவளவன்
திருமாவளவன்

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது தெளிவாகத் தெரிய வந்திருப்பதால், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை நிறுத்தும்படி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை அளிக்கும் என்று நம்புகிறோம்.

இந்நிலையில், பீகாரில் நடந்தேறியுள்ளதைப்போல தமிழ்நாட்டிலும் தகுதியான வாக்காளர்கள் நீக்கப்படாமல் தடுக்க, சனநாயகத்தைப் பாதுகாக்க, பாஜக- தேர்தல் ஆணையம் இணைந்து அரங்கேற்றவுள்ள கூட்டுச்சதியை முறியடிக்க, அனைத்து ஜனநாயக சக்திகளும் மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், மக்கள் நலன்கருதி தொலைநோக்குப் பார்வையோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

காரைக்குடி: ``ரீல்ஸ் முக்கால்வாசி பொய்தான், கல்விதான் ரியல்'' - பள்ளி விழாவில் உதயநிதி அறிவுரை

சிவகங்கை மாவட்டத்திற்கு இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளி வளாகத்தில் நடந்த மாணவர்களுக்கு சைக்கிள் வழங்குதல், சிறந்த பள்ளிகளு... மேலும் பார்க்க

``நாட்டுக்கும், ஊருக்கும் காங்கிரஸ் ஆகாது- ராஜேந்திர பாலாஜி

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர , ஒன்றிய, பேரூர் கழகங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், விருத... மேலும் பார்க்க

குடும்பத்தையும், அரசியலையும் துறக்கிறேன்: லாலு பிரசாத்திற்கு சிறுநீரகம் தானம் செய்த மகள் அறிவிப்பு

நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இத்தோல்வி முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. கூட்டணியை இறுதி செய்வதில... மேலும் பார்க்க

பர்கூர் கிளை நூலகம்: ``ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வீணாகும் நிலை'' - வாசகர்கள் வேதனை

“அறிவுதான் அழியாத செல்வம்" என்பார்கள். அந்த அறிவைப் புகட்டும் கோயில்கள்தான் நூலகங்கள். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் செயல்படும் கிளை நூலகத்தின் இன்றைய நிலைய... மேலும் பார்க்க

பீகார்: `பெண்களுக்கு ரூ.10,000' - நிதிஷ் குமாருக்கு ஆதரவாக களமிறங்கிய பெண்கள் படை; சாதித்தது எப்படி?

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பெரும்பாலான அரசியல் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 243 தொகுதியில் என்.டி.ஏ கூட்டணி மட்டுமே 202 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணம்... மேலும் பார்க்க

``திமுக தமிழகத்தில் ஆளும் கட்சி, இந்தியா முழுதும் சிறந்த எதிர்க்கட்சி'' - உதயநிதி ஸ்டாலின்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதிய பேரூராட்சி கட்டிடத்தை திறந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் மாதவன் ஆகியோரின் சிலைகளை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில்... மேலும் பார்க்க