செய்திகள் :

பர்கூர் கிளை நூலகம்: ``ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வீணாகும் நிலை'' - வாசகர்கள் வேதனை

post image

“அறிவுதான் அழியாத செல்வம்" என்பார்கள். அந்த அறிவைப் புகட்டும் கோயில்கள்தான் நூலகங்கள். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் செயல்படும் கிளை நூலகத்தின் இன்றைய நிலையோ, 'கோயிலைச் சுற்றியும் தண்ணீர், கருவறைக்குள்ளும் தண்ணீர்' என்பது போல அவலத்தின் உச்சமாக காட்சியளிக்கிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் இளைஞர்கள் என பலரின் அறிவுப் பசிக்குத் தீனி போட வேண்டிய இந்த நூலகம், இன்று தனக்கே அடிப்படை வசதிகள் இன்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

பர்கூர் கிளை நூலகம்
பர்கூர் கிளை நூலகம்

இந்த நூலகக் கட்டிடத்தில் சமீபத்தில் புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், கட்டிடத்தின் உள்ளேயே தண்ணீர் கசிந்து, ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நனைந்து வீணாகும் பேராபத்தில் உள்ளன. "அறிவை வளர்க்க வந்த இடத்தில், புத்தகங்கள் நீரில் நனைந்து கிடப்பதைப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது" என்று கண்ணீர் வடிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

கழிவறை, குடிநீர் - அடிப்படை வசதிகளுக்கே அவதி!

பர்கூர் நூலகத்தில் அடிப்படைத் தேவையான கழிவறை மற்றும் குடிநீர் வசதி கூட இல்லாமல், வாசகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அடுக்கடுக்கான அவலங்கள்:

நூலகத்தின் அவல நிலை இத்துடன் முடியவில்லை.

கட்டிடத்தின் மின்கம்பிகள் சீரமைக்கப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளன.

நூலகத்தைச் சுற்றி புதர்கள் மண்டி, சுத்தம் செய்யப்படாமல் அசுத்தமாகக் காட்சியளிக்கின்றன.

கட்டிடத்திற்கு வண்ணம் பூசப்படாததால், ஒரு பாழடைந்த கட்டிடம் போல பொலிவிழந்து நிற்கிறது.

நூலகத்தின் முன்பகுதி சுத்தம் செய்யப்படாமலும், தரை போடப்படாமலும் கரடுமுரடாக உள்ளது.

நூலகத்தின் முதல் தளம் இருந்தும், அது செயல்படாமல் பூட்டிக் கிடக்கிறது. அங்கு குழந்தைகளுக்கான பிரிவில் உள்ள பொருட்கள் முறையாக பராமரிக்கப்படாமல் சிதைந்து வருகின்றன.

பராமரிக்கப்படாமல், பயன்படுத்த முடியாமல் உள்ள கழிவறை
பராமரிக்கப்படாமல், பயன்படுத்த முடியாமல் உள்ள கழிவறை

மாணவர்களின் கனவில் விழும் இடி!

இன்றைய போட்டி மிகுந்த உலகில், அரசு வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்குப் பெரிய வரப்பிரசாதம் இந்த நூலகங்கள் தான். ஆனால், இங்கு போட்டித் தேர்வுக்கான புத்தகங்களே இல்லை என்பது வேதனையின் உச்சம்.

மேலும், இந்த நூலகம் பகுதி நேரமாக மட்டுமே இயங்குகிறது. நிரந்தரப் பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால், சந்தாதாரர்களை அதிகரிக்கவோ, நூலகத்தை முறையாக நிர்வகிக்கவோ வழியில்லாமல் முடங்கிக் கிடக்கிறது.

"சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அருகிலேயே இருக்கும் ஒரு நூலகத்தின் நிலையே இப்படி என்றால், எங்கள் குறைகளை யாரிடம் சொல்வது?" என்று பர்கூர் தொகுதி மக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.

அறிவை வளர்க்கும் இந்த நூலகத்தை இனியும் தாமதிக்காமல், போர்க்கால அடிப்படையில் முழுமையாகச் சீரமைக்க வேண்டும். நிரந்தரப் பணியாளர்களை நியமித்து, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

சுகாதரமற்ற நிலையில் பர்கூர் கிளை நூலகம்
சுகாதரமற்ற நிலையில் பர்கூர் கிளை நூலகம்

பள்ளி, கல்லூரி மாணவர்களும், போட்டித் தேர்வுக்குப் படிக்கும் இளைஞர்களும் முழுமையாகப் பயனடையும் வகையில், நூலகத்தை முழு நேரமும் இயக்கவும், தேவையான அனைத்துப் புத்தகங்களையும் வாங்கி நிரப்பவும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரும், பர்கூர் நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பர்கூர் மக்களின் கோரிக்கையாகும்.

இது குறித்து நாம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றபோது, "இப்படி ஒரு விவகாரம் தன் கவனத்திற்கு வரவில்லை" என்றும், "நிச்சயமாக நூலகத்தை நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும்" அவர் உறுதியளித்துள்ளார்.

குடும்பத்தையும், அரசியலையும் துறக்கிறேன்: லாலு பிரசாத்திற்கு சிறுநீரகம் தானம் செய்த மகள் அறிவிப்பு

நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இத்தோல்வி முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. கூட்டணியை இறுதி செய்வதில... மேலும் பார்க்க

பீகார்: `பெண்களுக்கு ரூ.10,000' - நிதிஷ் குமாருக்கு ஆதரவாக களமிறங்கிய பெண்கள் படை; சாதித்தது எப்படி?

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பெரும்பாலான அரசியல் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 243 தொகுதியில் என்.டி.ஏ கூட்டணி மட்டுமே 202 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணம்... மேலும் பார்க்க

``திமுக தமிழகத்தில் ஆளும் கட்சி, இந்தியா முழுதும் சிறந்த எதிர்க்கட்சி'' - உதயநிதி ஸ்டாலின்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதிய பேரூராட்சி கட்டிடத்தை திறந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் மாதவன் ஆகியோரின் சிலைகளை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில்... மேலும் பார்க்க

பீகார்: கூட்டணி சொதப்பல்; சிதறிய வாக்குகள்; சட்டமன்றத்தில் குறையும் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம்?

பீகாரின் சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.(யு) தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 202 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. அதே நேரம், ஆர்.ஜே.டி தலைமையிலான மகாபந்தன் கூட்டணி 35 இடங்களை மட்டுமே பெற்று பெர... மேலும் பார்க்க

திங்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்! - ஏன் இந்த முடிவு?

பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், அடுத்தக்கட்டமாக சென்னை உயர் நீதிமன்ற அனுமதியோடு காலவரையற்ற உண்ணாநிலை போராட்டதை மேற்கொள்ளவிருக்கின்றனர... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டில் இப்போ யாருக்கும் ஓட்டு போடும் உரிமை இல்லை" - SIR குறித்து தவெக தலைவர் விஜய் வீடியோ

தவெக தலைவர் விஜய் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், ``"எல்லாருக்கும் வணக்கம். இந்திய அரசியல் சாசனம் நம்ம தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாருக்குமே கொடுத்... மேலும் பார்க்க