செய்திகள் :

திங்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்! - ஏன் இந்த முடிவு?

post image

பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், அடுத்தக்கட்டமாக சென்னை உயர் நீதிமன்ற அனுமதியோடு காலவரையற்ற உண்ணாநிலை போராட்டதை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

சென்னை ரிப்பன் மாளிகைக்கு முன்பு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மண்டலங்கள் 5 மற்றும் 6 ஐ சேர்ந்த தூய்மைப் பணியாளர்களை போராட்டத்தை தொடங்கினர். அவர்களை ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். சென்னைக்குள் பல்வேறு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்ட அவர்கள் மறுநாள் மாலை விடுவிக்கப்பட்டனர். அதன்பிறகும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

சென்னை உழைப்பாளர் சிலை, எழும்பூர் பெரியார் மணியம்மை சிலை, அல்லிக்குளம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுத்து கைதாகினர். போராட்டம் நூறாவது நாளை நெருங்குகையில் மெரினா கடலில் இறங்கி போராடி கைதாகினர்.

கடலில் இறங்கி போராடிய தூய்மைப் பணியாளர்கள்
கடலில் இறங்கி போராடிய தூய்மைப் பணியாளர்கள்

போராட்டம் 100 வது நாளை கடந்திருக்கும் நிலையில், போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் சார்பில் அமைதியான முறையில் காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்க அனுமதி வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க நிபந்தனைகளோடு அனுமதி கொடுத்து நேற்று உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து வருகிற திங்கட்கிழமை காலை 10 மணி முதல் அம்பத்தூர் அலுவலகத்தில் 4 பெண் தூய்மைப் பணியாளர்கள் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடவிருக்கின்றனர்.

பீகார்: `பெண்களுக்கு ரூ.10,000' - நிதிஷ் குமாருக்கு ஆதரவாக களமிறங்கிய பெண்கள் படை; சாதித்தது எப்படி?

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பெரும்பாலான அரசியல் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 243 தொகுதியில் என்.டி.ஏ கூட்டணி மட்டுமே 202 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணம்... மேலும் பார்க்க

``திமுக தமிழகத்தில் ஆளும் கட்சி, இந்தியா முழுதும் சிறந்த எதிர்க்கட்சி'' - உதயநிதி ஸ்டாலின்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதிய பேரூராட்சி கட்டிடத்தை திறந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் மாதவன் ஆகியோரின் சிலைகளை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில்... மேலும் பார்க்க

பீகார்: கூட்டணி சொதப்பல்; சிதறிய வாக்குகள்; சட்டமன்றத்தில் குறையும் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம்?

பீகாரின் சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.(யு) தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 202 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. அதே நேரம், ஆர்.ஜே.டி தலைமையிலான மகாபந்தன் கூட்டணி 35 இடங்களை மட்டுமே பெற்று பெர... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டில் இப்போ யாருக்கும் ஓட்டு போடும் உரிமை இல்லை" - SIR குறித்து தவெக தலைவர் விஜய் வீடியோ

தவெக தலைவர் விஜய் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், ``"எல்லாருக்கும் வணக்கம். இந்திய அரசியல் சாசனம் நம்ம தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாருக்குமே கொடுத்... மேலும் பார்க்க

Nithish Kumar : 'தேர்தலில் போட்டியிடாமலேயே 10 வது முறையாக முதல்வர்!' - எப்படி சாதிக்கிறார் நிதிஷ்?

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. நவம்பர் 18 ஆம் தேதி பதவியேற்பேன் எனக்கூறிய தேஜஸ்வியின் கனவு தகர்ந்திருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியேயிடாத,... மேலும் பார்க்க

Bihar: புயலை கிளப்பிய முகநூல் பதிவு; பின்னடைவை சந்தித்த மகன்கள் - லாலுவுக்கு இரட்டை அதிர்ச்சி!

'202 இடங்களில் பா.ஜ.க கூட்டணி'பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் இரட்டை அதிர்ச்சியைச் சந்தித்துள்... மேலும் பார்க்க