SIR: `தவெக எதிர்க்கிறதே தவிர, திமுகவைப் போல் தோல்வி பயத்தில் வேண்டாமெனவில்லை!' -...
"தமிழகத்தில் மதுவை விட கஞ்சா, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது" - சொல்கிறார் வைகோ
சமத்துவ நடைபயணத்தில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களை நேர்காணல் செய்வதற்காக மதுரை வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் 7,000 கிலோ மீட்டர் தூரம் நடந்துள்ளேன். தமிழகத்தில் மதுவை விட கஞ்சா, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்கள் போதைப்பொருளை பயன்படுத்துகிறார்கள். போதைப்பொருளை பயன்படுத்துவதால் இளம்பெண்கள் மீது பாலியல் தாக்குதல் செய்கிறார்கள்.

சில இடங்களில் பெண்களும் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள் என்பது அதிர்ச்சி தகவலாக உள்ளது.
அரிவாள், பட்டா கத்தியுடன் மாணவர்கள் கல்லூரிக்கு செல்கிறார்கள். இவற்றிலிருந்து மாணவர்களை இளைஞர்களை மீட்க, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த சமத்துவ நடைபயணத்தை மேற்கொள்கிறேன்.
மது, புகை பழக்கமுள்ளவர்களை தொண்டரணியில் சேர்க்க மாட்டேன். தப்பித்தவறி மதுவோ புகையோ எனது நடைபயணத்தில் உடன் வரும் இளைஞர்கள் பிடித்தால் அவர்களை அப்படியே அனுப்பி விடுவேன்.

எங்களுடைய நடை பயணங்களில் ஒருபோதும் கூட்ட நெரிசலால் எந்த அசம்பாவிதமும் நடந்தது இல்லை. டிராபிக் போலீஸ் செய்வதை விட எங்கள் கட்சியில் உள்ள பாதுகாப்பு பிரிவினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி எங்கள் நடைபயணத்தை மேற்கொள்ள பணியாற்றுவார்கள். பொதுமக்கள் எங்கள் பயணங்களை பார்த்து எவ்வளவு கட்டுப்பாடாக செல்கின்றனர் என ஆச்சரியப்படுவார்கள். தமிழ்நாட்டின் பொது வாழ்வும், அரசியலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறேன்" என்றார்.













