செய்திகள் :

Rain Alert: இன்று இரவு 10 மணி வரை இந்த 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிமை ஆய்வு மையம் தகவல்!

post image

தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி ஒரு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்தில் நிலவியது.

தற்போது இன்று இலங்கை நிலப்பரப்புக்கு மேல் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது என்றும், மன்னர் வளைகுடா நோக்கி லேசாக நகரத் தொடங்கியதும் தமிழகத்தில் கனமழை தொடரும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

மழை
மழை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், தென்காசி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய 18 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், "வரும் 22 ஆம் தேதி வங்கக் கடலில் இன்னொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும்" என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

இதனால் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் வரும் 21, 22 ஆம் தேதி கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

Rain Alert: உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி ஒரு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்தில் நிலவியது. தற்போது இலங்கை நிலப்பரப்புக்க... மேலும் பார்க்க

இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட், மஞ்சள் அலர்ட்? எங்கு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று ஆரஞ்சு அலர்ட் மற்றும் மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் செங்கல்... மேலும் பார்க்க

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; சென்னை நிலவரம் எப்படி?

தமிழகத்தில் இன்று (நவ. 17) முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், த... மேலும் பார்க்க

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த வாரம் முழுவதும் மழை?

அடுத்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் மழை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று தென் இலங்கை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் ப... மேலும் பார்க்க

இன்று தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை?; திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்கிற அறிக்கையை வெளியிட்டுள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் மழை?அதன் படி, இன்று காலை 10 மணி வரை, தமிழ்நாட்டில் தருமபுரி, கள்... மேலும் பார்க்க

Rain Updates: தமிழ்நாட்டில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வானிலை எப்படி இருக்கும்? வானிலை மையம் தகவல்

பெரும்பாலும் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் நவம்பர் மாதத்தின் இறுதியிலும், டிசம்பர் மாதத்திலும் மழை அதிகமாக இருக்கும். இதனால், ஒவ்வொரு ஆண்டுமே தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த இரு மாத மழை குறித்த சின்ன... மேலும் பார்க்க