செய்திகள் :

"மெக்கா புனிதப் பயணம் சென்ற 42 பேர் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்" - தவெக விஜய்

post image

இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மக்காவுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உம்ரா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று காலை டீசல் டேங்கர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அந்தப் பேருந்தில் பயணித்த 42 புனித யாத்திரை மேற்கொண்ட பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், உயிரிழந்தவர்கள் இந்தியர்கள் என்றும், தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்திலிருந்து புனித பயணம் மேற்கொண்டவர்கள் எனவும் முதற்கட்ட தகவல் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சவூதி அரேபியா பேருந்து விபத்து, 42 பேர் பலி
சவூதி அரேபியா பேருந்து விபத்து, 42 பேர் பலி

சவூதி: மெக்கா டு மெதினா; டீசல் டேங்கருடன் மோதிய பஸ்; 42 இந்தியர்கள் பலி - உயிர் பிழைத்த ஒருவர்

உயிரிழந்த அனைவரும் இந்தியாவில் இருந்து சென்றவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சென்றவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

தெலங்கானா அரசு சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு தெலங்கானாவில் இருந்து சென்றவர்கள் குறித்து கேட்டு விசாரித்து வருகிறது. மேலும் இறந்தவர்கள் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர தேவையான உதவிகளை செய்யும்படியும் கேட்டுக்கொண்டது.

இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் தவெக தலைவர் விஜய், "தெலுங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட 42 பேர், மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்." என்று தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார்.

SIR: `தவெக எதிர்க்கிறதே தவிர, திமுகவைப் போல் தோல்வி பயத்தில் வேண்டாமெனவில்லை!' - ஜி.கே.வாசன்

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து, ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பிற்குப் பிறகு தமிழ் மா... மேலும் பார்க்க

'இந்த கண்ணீருக்கு பதில் இருக்கா முதல்வரே!' - காலவரையற்ற உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்!

தூய்மைப் பணியாளர் ஜெனோவானின் கையில் இரத்த அழுத்ததை அளப்பதற்கான பட்டையை மாட்டுகிறார் மருத்துவர். அவருக்கு ஜெனோவா கொஞ்சம் பதட்டமாக இருப்பதைப் போல தோன்றுகிறது. 'டென்ஷன் ஆகாதீங்கம்மா. ஒன்னும் இல்லை..' என்... மேலும் பார்க்க

"தமிழகத்தில் மதுவை விட கஞ்சா, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது" - சொல்கிறார் வைகோ

சமத்துவ நடைபயணத்தில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களை நேர்காணல் செய்வதற்காக மதுரை வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் 7,000 கிலோ மீட்டர் தூரம் நடந்துள்ளேன். தமிழகத்... மேலும் பார்க்க

பிரேமலதாவுடன் ஆர்.பி.உதயகுமார் சந்திப்பு; கூட்டணி குறித்துப் பேசப்பட்டதா?

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.ஆர்.பி.உதயகுமார்-பி... மேலும் பார்க்க

`ரூ.250 கோடி சொத்து; அரண்மனை வீடு; மதுபான ஆலை பணம்' - வைகோ குறித்து மல்லை சத்யா `பகீர்'

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான வைகோவுக்கும், மதிமுக-வின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் உ... மேலும் பார்க்க