செய்திகள் :

Veeraswamy: லண்டனில் 100 ஆண்டுகளாக இயங்கும் வீராசாமி உணவகம் - அகற்றக்கோரும் நிறுவனம் - காரணம் என்ன?

post image

லண்டனில் உள்ள மிகப் பழமையான உணவகங்களில் ஒன்று வீராசாமி உணவகம். ஏப்ரல் 1926 முதல் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக மிச்செலின்-ஸ்டார் உணவகமாக செயல்பட்டு வருகிறது.

இந்த உணவகம் கிரவுன் எஸ்டேட் (Crown Estate) எனும் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தில் இருக்கிறது. இந்த கிரவுன் எஸ்டேட் நிறுவனத்தின் சொத்துகள் லண்டன் மன்னருக்கு உரிமையுள்ள தனித்துவமான சொத்து நிறுவனமாகும்.

அதே நேரம் இது அரசரின் தனிப்பட்ட சொத்தாகக் கருதப்படாது. அதாவது, இதன் மூலம் வரும் வருமானம் அரசின் கருவூலத்துக்குச் செல்லும். ஆனால் அரசோ, மன்னரோ இதை சொந்தம் கொண்டாட முடியாது.

london veeraswamy restaurant
london veeraswamy restaurant

இப்படியான நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தில்தான் வீராசாமி உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கிரவுன் எஸ்டேட் கட்டடத்தின் மேல் தளங்களில் உள்ள வரவேற்புப் பகுதியை விரிவாக்கும் திட்டம் இருப்பதால், வீராசாமி உணவகத்தின் குத்தகை புதுப்பிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கிரவுன் எஸ்டேட் நிறுவனத்தின் இந்த முடிவுக்கு பிரிட்டனின் முன்னணி சமையல்காரர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

சைரஸ் டோடிவாலா, ரேமண்ட் பிளாங்க், மைக்கேல் ரூக்ஸ் போன்ற பிரபல சமையல்காரர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள், ``கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக செயல்படும் ஒரு உணவகத்தை அகற்றும் முடிவு என்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது. எனவே, கிரவுன் எஸ்டேட் அமைப்பு பொறுப்புடன் செயல்பட வேண்டும்" எனக் கேட்டுகொண்டது.

அப்படி என்ன ஸ்பெஷல்?

சுமார் 100 ஆண்டுகளாக செயல்படும் இந்த உண்வகம் லண்டனின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்த ஹோட்டலை நிறுவியவர் ஆங்கிலோ - இந்தியரான எட்வர்ட் பால்மர் (Edward Palmer).

london veeraswamy restaurant
london veeraswamy restaurant

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான வாரன் ஹேஸ்டிங்ஸின் இராணுவ செயலாளராக இருந்தவர் ஜெனரல் வில்லியம் பால்மர். இவரும் முகலாய இளவரசி ஃபைசான் நிசா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் கொள்ளுபேரன்தான் எட்வர்ட் பால்மர்.

சமையல் கலையின் மீது மிகுந்த ஆர்வமுடைய இவர், இங்கிலாந்தில் வீராசாமி என்றப் பெயரில் உணவகம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இந்த உணவகத்தின் முதல் மெனுவை கொள்ளுப்பாட்டியிடமிருந்து பெற்றதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இந்தியப் பாரம்பரியம் மீது ஆர்வமுடன் இருந்த எட்வர்ட் பால்மர், E P வீராசாமி என்றப் பெயரில் சமயல்கலை புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

இப்போது யார் நிர்வகிப்பது?

வீராசாமி உணவகத்தை, லண்டனில் இயங்கும் உயர்தர (Fine Dining) இந்திய உணவகங்களின் குழுமமான MW Eat நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனம் வீராசாமி மட்டுமின்றி, லண்டனில் உள்ள மற்ற பிரபலமான மற்றும் விருது பெற்ற இந்திய உணவகங்களையும் நடத்துகிறது.

கிரவுன் எஸ்டேட் என்ன சொல்கிறது?

இந்த விவகாரம் தொடர்பாக கிரவுன் எஸ்டேட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``குத்தகையை புதுப்பித்தல் தொடர்பான நடவடிக்கையில் நாங்கள் எடுத்திருக்கும் முடிவு MW Eat-க்கு இது எவ்வளவு சவாலானது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவதில் கவனமாக இருக்கிறோம்.

london veeraswamy restaurant
london veeraswamy restaurant

அதற்காக தொடர்ந்து உழைத்து வருகிறோம். தற்போது இருக்கும் இந்த இடத்தைவிட்டு வீராசாமி உணவகம் கிரவுன் எஸ்டேட்டுக்குச் சொந்தமான வேறு இடத்துக்கு மாற்றிக்கொள்ளலாம். புதிய வளாகத்தைத் தொடங்கவும், அதற்கு ஆகும் செலவுக்காகவும் கிரவுன் எஸ்டேட் உதவி செய்யும். மேலும், இந்த இடத்தை விட்டு வெளியேற நேரிட்டால், MW Eat நிறுவனத்திற்கு ஏற்படும் வணிக இழப்புகளையும் கிரவுன் எஸ்டேட் பண வடிவில் இழப்பீடு வழங்கும்" எனத் தெரிவித்திருக்கிறது.

MW Eat முடிவு?

கிரவுன் எஸ்டேட் நிறுவனத்தின் இந்த முடிவுக்கு பதிலளித்திருக்கும் MW Eat நிறுவனம் ``பாதுகாக்கப்பட்ட குத்தகை உரிமைகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுத்ததால், இந்த வழக்கு நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டு விசாரணைக்கு வரும். அதுவரை அதே இடத்தில் வீராசாமி உணவகம் செயல்படும். பிரிட்டனின் முன்னணி சமையல்காரர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களைத் திரட்டி பொதுமக்களிடம் ஆதரவைப் பெறுவோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

"THAR கார் வைத்திருப்பவர்கள் பித்துப்பிடித்தவர்கள்"- ஹரியானா DGP-யின் கருத்து வைரல்

ஹரியானா மாநில காவல்துறை தலைமை இயக்குநர் ஓம் பிரகாஷ் சிங், மகிந்திராவின் தார் (THAR) காரை வைத்திருப்பவர்கள் எல்லாம் பித்துப்பிடித்தவர்கள் வெறிபிடித்தவர்களாக (Crazy) இருப்பார்கள் எனக் கூறியுள்ளது சலசலப்... மேலும் பார்க்க

175 மில்லியன் டாலர்களுக்கு அதிபதி; இருந்தும் ஊபர் ஓட்டுவது ஏன்? - நெகிழ வைக்கும் காரணம்!

பிஜி நாட்டில் தொழில்முனைவோர் ஒருவர் ஊபர் ஓட்டுநருடன் நடத்திய உரையாடல் வைரலாகியிருக்கிறது. நவ் ஷா என்ற தொழில்முனைவோர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில், ஊபர் வாகனத்தை ஓட்டும் வயதான ஓட்டுநர், ஆண்டு... மேலும் பார்க்க

`வேணாம் நிறுத்துங்க!' - பெண்ணிடம் கெஞ்சிய பயணிகள்; வைரலான வீடியோ

ரயில் பயணத்தின்போது பெண் ஒருவர் கண்ணாடியை உடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தூர் - டெல்லி ரயிலின் ஏசி இருக்கையில் இருந்த அந்த பெண், தனது பணப்பை (பர்ஸ்) காணாமல் போய்விட்டதாகவும் காவல்துற... மேலும் பார்க்க

ரவிக்கை தைப்பதில் தாமதம்; `டெய்லருக்கு ரூ.7000 அபராதம்' - நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் சேலைக்கு உடுத்தும் ரவிக்கையை உரிய நேரத்தில் தைத்துக் கொடுக்காத தையல்காரருக்கு 7000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்.பூனம்பென் பரியா என்ற... மேலும் பார்க்க

தென்காசி: `செரிமானக் கோளாறு' - காட்டை விட்டு வெளியே வந்த யானைக்கு வனத்துறை சிகிச்சை

தென்காசி வன கோட்டம் கடையநல்லூர் வனச்சரகம், சொக்கம்பட்டி பிரிவுக்கு அருகில் வயது முதிர்ந்த யானையின் நடமாட்டத்தை 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நேற்று காலை சொக்கம்பட்டி காவல் ... மேலும் பார்க்க

Gold: ரூ.9.5 கோடி தங்க ஆடை; கின்னஸ் சாதனை -Viral Video

துபாய் என்றாலே ஆடம்பரமும் பிரமிப்பும் தவிர்க்க முடியாதவை. குறிப்பாக தங்க நகைகளுக்கும், அதன் டிசைன்களுக்கும் குறிப்பிடத்தக்க இடத்தை தக்கவைத்திருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் புகழ்பெற்ற மற்ற... மேலும் பார்க்க