செய்திகள் :

போட்டோ எடுத்து மிரட்டி சிறுமியை பாலியல் கொடுமை செய்த இளைஞர் -போக்சோ வழக்கில் கைது!

post image

தஞ்சாவூர் பூமால் ராவுத்தர் தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன்(22). இவர் மளிகைக்கடை ஒன்றில் பொருள்கள் டோர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் 17 வயது சிறுமி ஒருவரை இவர் காதலித்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வந்துள்ளார். பின்னர் சத்தியசீலன் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது சிறுமியை தன் செல்போனில் போட்டோ எடுத்து வைத்துள்ளார்.

போக்சோ வழக்கு

நான், எப்போது கூப்பிட்டாலும் வர வேண்டும் இல்லை என்றால் போட்டோவை சமூக வலைதளங்களில் போட்டுடுவேன் என்றுள்ளார். சிறுமி அவரிடம் பேசாமல் இருந்தாலே செல்போனை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். போட்டோவை காட்டி மிரட்டியதால் பயந்து போனதால் இதை வெளியே சொல்லவில்லை. இந்த நிலையில் சத்யசீலன் மிரட்டல் எல்லை மீற தனது அம்மாவிடம் அழுது கொண்டே நடந்ததை சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து சிறுமியின் அம்மா, தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸ், சதயசீலன் செல்போனை வாங்கி சோதனை செய்துள்ளனர். அதில் போட்டோ இருந்ததாக சொல்லப்படுகிறது. அத்துடன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததையும் அவன் ஒத்துக்கொண்டுள்ளான் என்கிறார்கள். இதையடுத்து போக்சோ வழக்கில் சத்தியசீலனை கைது செய்த போலீஸ் சிறையில் அடைத்தனர்.

ராணிப்பேட்டை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; ரவுடிக்கு கை, கால் முறிவு -நடந்தது என்ன?

கடந்த 2-ம் தேதி இரவு 11.00 மணி, ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது 2 பெட்ரோல் குண்டுகளை இளைஞர்கள் சிலர் வீசிவிட்டு தப்பிஓடினர்.இரவு ரோந்துப் பணிக்கு காவலர்கள் சென்றுவிட்டதால் முதல் நிலைக் காவலர்... மேலும் பார்க்க

சென்னை: அண்ணா சாலையில் ஸ்பைடர் மேனாக வலம் வந்த சுவீட்ஸ் கடைக்காரர் - பிடித்துச் சென்ற போலீஸார்

சென்னை அண்ணாசாலையில் ஸ்பைடர் மேன் உடையணிந்தவர், அவ்வழியாக சென்றவர்களிடம் படத்தில் வருவது போல் அங்கும் இங்கும் குதித்து காண்பித்தார். குழந்தைகளைப் பார்த்ததும் படத்தில் வரும் ஸ்பைடர் மேனாகவே அந்த நபர் ம... மேலும் பார்க்க

கூகுளில் ஹோட்டல் புக் செய்தபோது 93,000 ரூபாயை இழந்த இளம்பெண் - என்ன நடந்தது?

இன்றைய டிஜிட்டல் உலகில் ஆன்லைன் மோசடிகளால் பணத்தை இழப்பது மிகவும் எளிதாகிவிட்டது. சைபர் கிரைமில் ஈடுபடுபவர்கள் அசலை போன்று நகலை உருவாக்கி நம்ப வைத்து அதன்மூலம் பண மோசடி செய்கின்றனர்.அப்படித்தான் கூகுள... மேலும் பார்க்க

கிளம்பாக்கம்: இளம்பெண்ணுக்கு ஆட்டோவில் கூட்டுப் பாலியல் தொல்லை - லைவ் லோக்கேஷனால் தப்பித்தது எப்படி?

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிப்ரவரி 3-ம் தேதி இரவு வடமாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அந்த இளம்பெண்ணிடம... மேலும் பார்க்க

`நாங்க காதலிக்கிறோம்’ - 17 வயது சிறுமியை கடத்திச்சென்று, வன்கொடுமை செய்ததாக இளம்பெண் கைது

மும்பை கொலாபா பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போய்விட்டார். அவர் கடந்த மாதம் 7ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.... மேலும் பார்க்க

நெல்லையில் திருடிய ஸ்கூட்டர்... கோவில்பட்டியில் மீட்பு; விருதுநகர் பெண் கைது!

Aநெல்லை மாவட்டம், தச்சநல்லூரைச் சேர்ந்தவர் குமார். இவர், அப்பகுதியில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மதியம் வேலை முடிந்து சாப்பிடுவதற்காக குமார், தனது வீட்டி... மேலும் பார்க்க