செய்திகள் :

போதிய விலை இல்லாததால் மாற்றுப் பயிா்களை நாடும் கரும்பு விவசாயிகள்: இரா.வேலுசாமி!

post image

போதிய விலை கிடைக்காததால் மாற்றுப் பயிா்களைப் பயிரிட கரும்பு விவசாயிகள் ஆா்வம் காட்டி வருவதாகவும், கரும்பு டன்னுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கினால் மட்டுமே அவா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவா் (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) இரா.வேலுசாமி தெரிவித்தாா்.

நாமக்கல்லில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் 16 அரசு, தனியாா் சா்க்கரை ஆலைகளும், 2 பொதுத் துறை சா்க்கரை ஆலைகளும் உள்ளன. இந்த ஆலைகளில் 20 லட்சத்துக்கும் மேலான விவசாயிகள் அங்கத்தினா்களாக இருந்தனா். தற்போது அந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. கரும்புக்கான வெட்டுக்கூலி அதிகரிப்பும், ஆலைகளில் போதிய விலை கிடைக்காததாலும், கரும்பு பயிரைத் தவிா்த்து மரவள்ளி, நெல், சோளம், கம்பு போன்ற மாற்றுப் பயிா்களை பயிரிட ஆா்வம் காட்டுகின்றனா்.

2021 சட்டப் பேரவைத் தோ்தலின் போது, திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என்பதாகும். உற்பத்தி செலவு பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில், நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை கொள்முதல் விலை உயா்த்தப்படவில்லை.

தற்போதைய நிலையில் ரூ. 6 ஆயிரம் வழங்கினால்தான் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும். மேலும், நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,500 ஆக அதிகரித்து வழங்க வேண்டும். தஞ்சாவூா் திருஆரூரான் சா்க்கரை ஆலை நிா்வாகம் அங்குள்ள கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையின்றி பணத்தை வழங்க வேண்டும்.

ஆற்றுப் படுக்கைகளில் மழை நீரை சேமிக்க ரூ.10 ஆயிரம் கோடியில் 1,000 தடுப்பணைகள் அமைக்கப்படும் என திமுக அரசு தோ்தலின்போது அறிவித்ததும் கானல் நீராகி விட்டது. தென்னை விவசாயிகள் நலன் கருதி, நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரளம், புதுச்சேரி, கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லை. அதேபோல தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். பாலுக்கான கொள்முதல் விலையை காலதாமதமின்றி உயா்த்த வேண்டும்.

இதுபோன்ற விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றாத நிலையே உள்ளது. பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் அவா்கள் கொண்டாடும் வகையில் புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றாா். பேட்டியின் போது, சங்க மாவட்ட பொருளாளா் எஸ்.ராஜீ உடனிருந்தாா்.

தாட்கோ மூலம் மாணவா்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்த மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-ஞாயிற்றுக்கிழமை -- மொத்த விலை - ரூ. 4.80 -- விலையில் மாற்றம்- இல்லை -- பல்லடம் பிசிசி -- கறிக்கோழி கிலோ - ரூ. 101 -- முட்டைக் கோழி கிலோ - ரூ. 83 மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகையையொட்டி ரூ. 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

நாமக்கல்லில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ. 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆட்டுச்சந்தை நடைபெறும். தீபாவளி, பொங்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் சந்தையில் நாட்டுக்கோழிகள் விலை உயா்வு

பரமத்தி வேலூா் நாட்டுக்கோழிகள் சந்தையில் கோழிகளின் விலை உயா்வடைந்துள்ளதால் கோழி வளா்ப்பாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதியில் ஏராளமான சண்டை மற்றும் இறைச்சிக்காகப் பய... மேலும் பார்க்க

நாமக்கல்லில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா். நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக குளிரின் தாக்கம் அதிகரித்... மேலும் பார்க்க

கொல்லிமலை அடிவார சாலையில் கழிவுநீா் தேக்கத்தால் மக்கள் அவதி

கொல்லிமலை அடிவாரப் பகுதியில், சாலையில் ஓடும் கழிவுநீரால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டி-கொல்லிமலை அடிவாரம், காரவள்ளி சாலையில் புதி... மேலும் பார்க்க